Friday, May 20, 2016

நீண்ட பயணம், உழைப்புகள் விதைக்கப்படுகின்றன, உழைப்பில் கிடைத்த பலன்களையும் யாரோ பறிக்கின்றனர். அந்த உழைப்பில் பயன்பெற்றவர்கள் வசதியாக மறந்துவிடுகின்றனர். நன்றி, அங்கீகாரம், உண்மை என்பவை மறைக்கப்படுகின்றன என ஒரு முக்கியமான படைப்பாளி இன்றையபொழுது சந்தித்தபோது குறிப்பிட்டிருந்தார். அதற்கேற்ற வகையில் யாரோ சொன்ன சில வரிகளும் கண்ணில் பட்டன.

"என்னிடம் எழுதுவதற்கு இனியொரு சொல் இல்லை.
சொல்வதற்கு இனியொரு வரலாறு இல்லை
பேசுவதற்கு இனியொரு வார்த்தை இல்லை

எல்லாக் காயங்களும் நீங்கள் நன்கு அறிந்தவைதான்
இன்னும் ஏனிப்படியாக இருக்கிறீர்களே
என்கிற வலிமிகு கேள்வி மட்டுமே மிஞ்சியிருக்கிறது"

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்