Saturday, January 30, 2021


———————————-
சுனாமி ஆழிப்பேரலை தாக்கி இன்றுடன் 16 ஆண்டுகள் கடந்துவிட்டன. பல மீட்டர் அடி உயரத்துக்கு எழுந்த அலைகள் இரண்டரை லட்சம் உயிர்களை பறித்துக்கொண்டது. தமிழகத்தில் 2004 டிசம்பர் 26 என்பது ஒரு கறுப்பு நாள் என்றும் சொல்லலாம். சுமத்ரா தீவில் 8.9 ரிகடர் அளவில் ஏற்பட்ட பூகம்பம் சுனாமியாக உருமாறி பேரலையாக கரையைத் தொட்டது. இந்தியாவில் மட்டுமல்ல அதை சுற்றியுள்ள நாடுகளான இலங்கை, இந்தோனேஷியா, மாலத்தீவுகள், தாய்லாந்து, மலேசியா, மியான்மர் உள்ளிட்ட நாடுகளும் சுனாமியால் பெரிதும் பாதிப்படைந்தது.

தமிழகத்தில் சென்னை, கடலூர், நாகை, கன்னியாகுமரி மாவட்டங்கள் சுனாமியால் பெரிதும் பாதிப்படைந்தது. ஆயிரக்கான மக்கள் நீரில் மூழ்கியும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியும் உயிரிழந்தனர். பலர் தங்களின் உறவுகளையும் உடைமைகளையும் இழந்து நின்றது இன்றைக்கும் மறக்கமுடியாத சம்பவமாக இருக்கிறது. இந்தப் பேரலைகளுக்கு கால்நடைகளும் உயிரிழந்தது. கணக்கிடமுடியாத இழப்புகளை சுனாமி பேரலைகள் ஏற்படுத்தியது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26 அன்று சுனாமி நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது. சுனாமி பேரலைகள் வரலாற்றில் ஆறாத வடுவாக இருக்கிறது.

கே.எஸ். இராதா கிருஷ்ணன்
26-12-2020

No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...