Saturday, January 30, 2021


———————————————————
சுமார் ஆறுநூறு கோடியே தொள்ளாயிரத்து நாற்பத்தி ஒன்று லட்ச ரூபாய் மதிப்பீட்டில் இந்தத் திட்டம் திட்டமிடப்பட்டது. இதற்கு மேலும் செலவாகும் என்றும் கருதப்படுகிறது. இத்திட்டத்தின் முதல் நிலையாக காவிரி கட்டளை கால்வாய் தெற்கு வெள்ளாறு வரை 118 கிலோமீட்டர் இனைப்பது என்பது முதல் நிலை. தெற்கு வெள்ளாறு வைகை ஆறு வரை 107 கிலோமீட்டர் இரண்டாவது நிலை. வைகை குண்டாறு 34 கிலோமீட்டர் இணைப்பது மூன்றாவது நிலையாகும். இப்படி மூன்று நீர்நிலை இணைப்பதுதான் இத்திட்டம்.
இந்த திட்டத்தில் மேட்டூர் அணையிலிருந்து வருகின்ற 8.5டிஎம்சி மேட்டூர் அணையிலிருந்து வரும் காவிரி நீரை இந்த திட்டத்திற்கு திருப்பப்படிகிறது. கட்டளை கால்வாய் இதற்கு தலையாக அமைந்தால் தெற்கே ராமநாதபுரம், விருதுநகர் வரை இந்த நீர் சென்றடையும். 9.25 கிலோமீட்டர் உள்ளார்ந்த சுரங்கமாக வெட்டி சீர்படுத்தி இந்த தண்ணீரை எடுத்து செல்லவேண்டும். 25 துணை பெரிய கால்வார்ய்களும் இதில் அமையலாம். இதனால் திருச்சிக்கு அடுத்துள்ள புதுக்கோட்டை, கரூர், ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் பயன்படும்.

ஏற்கனவே தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்பு பணிகளும் நடந்து வருகின்றது, அத்தோடு தாமிரபரணி-வைப்பார் இணைப்பு, வடமாட்டங்களில் தென் பெண்ணை,பாலாறு இணைக்கப்பட்டுவிட்டால் தமிழக்கத்தில் ஒடிசா மகாநதி, கிருஷ்ணா,கோதாவரி நதிகளை தமிழகத்தோடு இணைக்க இது அடிப்படையாக இருக்கும். தென்னிந்திய நதிகளை இணைப்பதற்கான பணியும் கூட, உச்சநீதிமன்றத்தில் நான் தொடுத்த தேசிய நதிகள் இணைப்பு, கங்கை நதி குமரி மாவட்டத்தில் தொடவேண்டும் என்ற கோரிக்கைக்கு மத்திய அரசு திரு பி.என்.நவலவாலா தலைமையில் நதிநீர் இணைப்பு ஆய்வுக்குழு உருவாக்கப்பட்டது.
அந்த குழு மத்திய அரசிடம் கொடுத்த பரிந்துரையால் தான் இந்தத் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்குகின்றது. இப்படி எல்லாம் உள்ளார்ந்த விசங்கள் இருக்கும் போது, மக்கள் நாட்டில் வெத்து பெருங்காய டாப்பாக்கள் போலிருக்கும் அரசியல்வாதிகளை கூத்தாடவது தறுதலைத்தனமான நடவடிக்கையாகும்.
கே.எஸ். இராதா கிருஷ்ணன்
25.12.2020

No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...