Wednesday, October 2, 2019

*உத்தமர் காந்தியை கொண்டாடும் ஈழத் தமிழர்களும், ஈழம் குறித்து இந்தியாவில் எதிர்வினை ஆற்றுபவர்கள் பார்வைக்கு.*

*உத்தமர் காந்தியை கொண்டாடும் ஈழத் தமிழர்களும், ஈழம் குறித்து இந்தியாவில் எதிர்வினை ஆற்றுபவர்கள் பார்வைக்கு.*
-------------------------------------

உத்தமர் காந்தியின் பிறந்தநாளை ஈழத்தில் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற பகுதிகளில் காந்தி சிலைக்கு இன்றைக்கு அங்குள்ள தமிழ் சகோதரர்கள் மாலை சூட்டி கொண்டாடியுள்ளனர்.  காலையில் தொலைபேசியில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் தொலைபேசியில் பேசும்போது குறிப்பிட்டார்.

ஈழத் தமிழர்கள் அண்ணல் காந்தியை தங்களுடைய நாட்டின் நாட்டின் தந்தை என்றே மனதளவில் வணங்குகின்றனர். இந்தளவில் சிங்களத் தலைவர்களை ஒருகாலும் இந்தளவில் ஈழத்தமிழர்கள் ஏற்றுக்கொண்டதில்லை. யாழ்ப்பாணத்திற்கு நவம்பர் 1927இல் சென்றிருந்தார். 

செல்வநாயகத்தை ஈழத்து காந்தி என்று அழைப்பார்கள்.பண்டித நேரு காலத்தில் சீனப் போர் நடந்தபோது செல்வா அவர்கள் தமிழரிடம் நிதி திரட்டி அன்றைய பிரதமர் நேருவுக்கு போர் நிதியாக அனுப்பினார். அந்த நிகழ்வு வீரசிங்கம் அரங்கில் நடந்தது. அப்போது செல்வா உரையாற்றிய போது சீனாவை கடுமையாக கண்டித்தும், தனது தாய் நாட்டை ஒருநாளும் ஆக்கிரமிக்க முடியாது என்றார். நாங்கள் இலங்கையிலிருந்து எச்சரிக்கை விடுக்கின்றோம் என்றும் கூறினார்.

இந்திரா காந்தி காலத்தில் வங்கதேச உதயத்திற்கு நடந்த போரில் தமிழர்கள் பிரதமர் இந்திராவுக்கு போர் நிதியாக நிதி பணம் திரட்டி அனுப்பினார்கள். வங்கதேசப் போரில் இலங்கை பிரதமர் பண்டாரநாய்கா பாகிஸ்தான் போர் விமானங்களை கொழும்புவில் தரையிறங்கவும், எரிபொருள் நிரப்பவும் உதவ அனுமதித்தார் என்பதையும் மறுக்க முடியாது. இவையெல்லாம் வரலாற்று நிகழ்வுகள். 

ஆனால் இன்றைக்கு உத்தமர் காந்தியை கொண்டாடுகிறார்கள் ஈழத்தை விரோதமாக பேசுபவர்கள் பார்க்க வேண்டும். ராஜீவ் கொலையில் விடுதலைப்புலிகளுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று 1991 முதல் தொடர்ந்து நான் ஆதாரத்துடன் சொல்லி வருகிறேன். அந்த சம்பவம் நடந்த காலம் முதல் எழுப்பி வருகிறேன். இந்த வினாக்களுக்க விடையும் தெரியவில்லை.

#EElam
#ஈழத்தமிழர்கள்
#KSRPostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
02/10/2019


#அக்டோபர்_2 #உத்தமர்_காந்தி #லால்_பகதூர்_சாஸ்திரி. #காமராஜர்

#அக்டோபர்_2
#உத்தமர்_காந்தி
#லால்_பகதூர்_சாஸ்திரி. 
#காமராஜர் 
————————————————
இந்த அக்டோபர் 2ம் தேதியன்று நாடு காந்தியினை வணங்கும், காமராஜரை நினைத்து கண்ணீர் சிந்தும். ஆனால் இந்த வரிசையில் வணங்கவேண்டிய பாரத முனிவர் ஒருவர் உண்டு

அவர் வாழ்க்கையும், அவர் மரணமும் ஏன் அவர் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் இந்த நாட்டிற்கானது.

லால் பகதூர் சாஸ்திரி. இந்திய வரலாற்றில் எளிமைக்கும் நாட்டுபற்றிற்கும் தியாகத்திற்கும் பெரும் எடுத்துகாட்டனா மனிதர். இதுவரை இருந்த பிரதமர்களில் அவர்தான் நம்பர் 1

அடித்து சொல்லலாம் பதவியில் இருந்தது வெறும் 1.5 வருடங்களே, ஆனால் அவரின் சாதனைகளும் வெற்றியும் தியாகமும் ஏராளம்

அவர் வாழ்வினை படித்தால் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும், அந்த மனிதனை தேடிபிடித்து கட்டி அழ தோன்றும். அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கின்றான் அந்த மாமனிதன்.

காமராஜர் போலவே அவரும் நம்ப முடியாத அதிசயம். அப்படியும் ஒரு மனிதன் வாழ்ந்திருக்கின்றான், ஆண்டிருக்கின்றான் என்பதில் நிச்சயம் கண்ணீரை துடைத்துவிட்டு பெருமை கொள்ளவேண்டும்.

அவர் பிறந்தது மகா ஏழ்மையான குடும்பம், ஆம் அவர் பிராமண குடும்பம்தான் ஆனால் தந்தை இல்லை.  

வறுமைக்கு எந்த இனமும் தப்பமுடியாது, அவரும் சிக்கினார்

ஆனாலும் கல்விக்காக போராடினார். கங்கையின் கிளைநதியினை நீந்தி கடந்தே பள்ளிக்கு சென்றார். புத்தகம் வாங்க பணமில்லா நிலையில் நண்பனின் புத்தகத்தை இரவல் வாங்கி அதையும் தெருவிளக்கில் படித்து வளர்ந்தவர். அந்த காட்சியினை கண்ட அவரின் ஆசிரியர் அவரை படிக்க வைத்தார். படித்து “சாஸ்திரி” பட்டம் வாங்கினார் 

லால் பகதூர் சிறிவஸ்தவா பின்னர் லால் பகதூர் சாஸ்திரி ஆனார்

சாஸ்திரி என்பது அவர் வாங்கிய பட்டம், குடும்ப பெயர் அல்ல. அவரின் முன்னோர்களுக்கு ஆங்கிலேயன் கொடுத்த பட்டம் பகதூர்..

திலகரும் காந்தியும் அவரை அரசியலுக்கு உணர்ச்சியால் அழைக்கின்றார்கள். கதர் உடுத்தி காங்கிரஸ்காரர் ஆனார். கதரை விற்று சம்பாதித்த காசில்தான் தன் தங்கைக்கு திருமணம் செய்துவிட்டு போராட வந்தார்.

அது ஒரு மணிகூண்டில் சுதந்திர கொடியேற்றும் போராட்டம், கடும் போலிஸ் நெருக்கடியிலும் தந்திரமாக அந்த கூண்டில் ஏறி கொடியேற்றுகின்றார் சாஸ்திரி, அங்கே மகளிர் அணியில் கொடிபிடித்த அந்த லலிதாமணி அதனை கண்டு மெய்சிலிர்த்து நிற்கின்றார். நாட்டுபற்றோரிடையே காதல் அந்த தருணத்தில் உருவானது, அவரை திருமணமும் செய்தார் சாஸ்திரி

நாட்டுக்காக சிறையெல்லம் சென்றுவிட்டு பின் சுதந்திர இந்தியாவில் ரயில்வே மந்திரியாக அமர்ந்தார் சாஸ்திரி

அவர்தான் ரயில்வே மந்திரி, ஒருமுறை கூட ஏசி கோச்சிலோ, கூபேயிலோ அவர் பயணித்தவரில்லை, மக்களோடு மக்களாக அமர்ந்திருந்தார். ஒருமுறை அவர் சற்றுதாமதமாக வர ரயில் அவருக்காக நிறுத்தபட்டிருந்தது. ஆத்திரமுற்ற சாஸ்திரி என் தவறுக்காக‌ மொத்த மக்களையும் காக்க வைத்த அந்த ஸ்டேஷன் மாஸ்டரை சஸ்பெண்ட் செய்கின்றேன் என அறிவித்துவிட்டு பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு ரயிலில் ஏறினார்.

தன் உதவியாளர் கார் வாங்கியதை காண்கின்றார், என் சம்பளமே கார் வாங்க போதாது எனும்பொழுது நீ எப்படி வாங்க முடியும்? முறைகேடு செய்திருப்பாய் உனக்கு இனி என்னிடம் வேலை இல்லை என விரட்டிவிட்டவர் சாஸ்திரி. 

அவர் பிரதமராக இருந்தபொழுது ஒரு பியட் கார் வாங்கினார், அவர் இறந்த பின் மாதாந்திர கட்டணம் செலுத்தமுடியாமல் அந்த கார் அவர் குடும்பத்தாரால் திருப்பி அனுப்பபட்டது.

அப்படியும் ஒரு பிரதமர் நம் நாட்டில் இருந்திருக்கின்றார், அவர் குடும்பமும் அப்படி இருந்திருக்கின்றது.

இப்படி ஒரு மனிதனை பார்க்க முடியுமா?

கல்லூரி விண்ணப்பம் சென்று வரிசையில் நின்று மயங்கி விழுகின்றான் அந்த இளைஞர், மயக்கம் தெளிவித்து கேட்கின்றார்கள், உன் முகவரி என்ன? அவன் சொன்னான் நான் லால்பகதூர் சாஸ்திரியின் மகன். அந்த கல்லூரி முதல்வரே கேட்கின்றார், ஒரு வார்த்தை சொன்னால் வீட்டுக்கே பாரம் அனுப்புவோமே?

அந்த இளைஞன் சொன்னான். என் தந்தையின் பெயருக்காக அப்படி நடந்தால் அவர் என்னை கல்லூரியில் சேர அனுமதிக்கவே மாட்டார்.

இவரை பற்றி நன்கு அறிந்த நேருவின் சகோதரி அவரின் இளைய மகனை சொந்த செலவில் லண்டனில் படிக்க வைத்தார். படித்து வந்த மகன் பெரிய கம்பெனியில் சேர்ந்தான். சந்தோஷமாக தந்தையிடன் விஷயத்தை சொன்னபொழுது கலங்கினார் சாஸ்திரி

“நீ படித்து வேலையில் சேர்ந்திருக்கின்றாய் நல்ல விஷயம், ஆனால் உலகம் நானே உனக்கு உதவியதாக சொல்லும், இந்த வேலையினை விட்டுவிடு”

இப்படிபட்ட சாஸ்திரி ரயில்வே அமைச்சராக இருந்தபொழுதுதான் தமிழகத்தில் அரியலூர் ரயில் விபத்து நிகழ்ந்தது.

அந்த விபத்துக்கு பொறுப்பேற்று பதவி விலகினார் சாஸ்திரி, நேரு எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. ஆனால் மற்ற பொறுப்புகளை தொடர்ந்தார்.

இந்நிலையில் காஷ்மீரில் கலவரம் அதிகரித்தது, சாஸ்திரியினை அழைத்த நேரு நிலமையினை அறிந்துவர சொன்னார், ஆனால் தயங்கி நின்றார் சாஸ்திரி

காரணம், அவரிடம் குளிருக்கு அணியும் ஆடை இல்லை, அதை வாங்க பணமும் இல்லை. அட இப்படியுமா ஒரு அரசியல்வாதி இருந்திருப்பான்?

இதனை அறிந்த நேரு ஆச்சரியபடவில்லை, சாஸ்திரியின் குணம் அவருக்கு தெரியும். தன் குளிர் ஆடையினை கொடுத்தார்

குள்ளமான சாஸ்திரிக்கு அது நீளமாக இருந்தது, மனைவி அதனை வெட்டி தைத்து கொடுக்க காஷ்மீருக்கு கிளம்பினார் சாஸ்திரி

காமராஜர் பதவி விலகி கட்சிக்கு வழிகாட்டியதையொட்டி கொஞ்சமும் யோசிக்காமல் அவ்வழி நடந்தார் சாஸ்திரி, அவர் பதவி விலகும் பொழுது சொன்னது இப்படித்தான்

“இருமுறை பதவி விலகியிருக்கின்றேன், அப்பொழுதெல்லாம் வறுமையினை சமாளிப்பது எப்படி என கற்றுகொண்டேன். இம்முறை அது கஷ்டமில்லை பாலும் காய்கறியும் கிடைத்துவிடுவதால் வாழ்வதில் சிரமமில்லை”

இப்படிபட்ட மனிதர்கள் இனி கிடைப்பார்களா?

அந்த மனிதன் கட்சிக்கு மகத்தான தொண்டாறறிய பொழுதுதுதான் நேருவின் மரணம் நிகழ்ந்தது, கட்சிக்கு அடுத்த தலைவர் யார் என்ற பேச்சு எழுந்தது.

காமராஜரை அமர சொன்னார்கள். நானும் சாஸ்திரியும் வேறல்ல. நான் இருந்தால் என்ன செய்வேனோ அதனையே சாஸ்திரியும் செய்வார் என சொல்லி வழிவிட்டார் காமராஜர்.

"ஜெய் கிசான்" அதாவது உழவன் வாழ்க என்ற திட்டத்தை முன்னெடுத்து சென்றார் சாஸ்திரி, விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் திட்டமது.

அந்த 1965 மகா குழப்பமான வருடம்.

1962ல் சீன போரினை இந்தியா எதிர்பார்க்கவில்லை. இன்று ரோகிங்கியா அகதி போல வந்த திபெத்தியரையும் தலாய்லாமாவினையும் வரவேற்றதில் சீனா அடித்தது, கொஞ்சமும் யுத்தம் எதிர்பார்க்க சூழலில் பட்ட அடி அது. ஆனாலும் நேரு எனும் மாமனிதனுக்கு உலகில் இருந்த செல்வாக்கு காரணமாக சீனபோர் முடிவுக்கு வந்தது, ஆனாலும் இந்தியா பட்ட அடி அதிகம். அடியினை விட வலி அதிகம், எதிர்பாரா அடி.

நேரு வேறு இறந்துவிட்டார், இப்பொழுதுதான் சீனாவிடம் இந்தியா அடிவாங்கியிருக்கின்றது, இப்பொழுது இருக்கும் சாஸ்த்திரி சும்மா. இப்பொழுது அடித்தால் இந்தியா அலறும் என யுத்தம் தொடங்கியது பாகிஸ்தான். அதற்கு உலக நாடுகளின் ஒத்துழைப்பும் இருந்தது.

இந்தியாவில் சாஸ்திரி மகா உறுதியாக இருந்தார், "ஜெய் கிசான் ஜெய் ஜவான்" என்ற கோஷத்தில் அவர் இந்தியாவின் மகத்தான ஆளுமையாக மின்னினார்.

உலகம் அப்படி ஒரு தலைவன் உருவாகுவான் என நினைக்கவில்லை. கொஞ்சமும் அசரமால் துணிந்து நின்றார் சாஸ்திரி.

ஆம், நேரு இல்லை இனி இந்தியாவுக்கு தலைவன் இல்லை என பாகிஸ்தானும் சீனாவும் திட்டமிட்டு தொடுத்த போர் அது

அமெரிக்காவும்  வந்தது, தன் பேட்டன் டாங்க் எனும் நவீன டாங்கிகளை பாகிஸ்தானுக்கு கொடுத்திருந்தது, அதுதான் பாகிஸ்தானின் துருப்பு சீட்டு. உடைக்க முடியாத டாங்கி என அதற்கு பெயர். தரைபடை வெற்றியினை அதுதான் தீர்மானிக்கும்

அந்த தைரியத்தில் இறங்கியது பாகிஸ்தான், பேட்டன் டாங்க் இந்தியாவிற்கு கடும் சோதனை கொடுத்தது, ஆரம்பத்தில் திணறிய இந்திய படை எப்படியோ ஒரு டேங்கினை பாகிஸ்தான் வீரரோடு சிறைபிடித்தது

மெதுவாக கேட்டார்கள், “அற்புதமான டாங்கி இதன் மூலம் நீங்கள் வெல்வீர்கள் நாங்கள் அவ்வளவுதான், சரி இந்த பாதுகாப்புமிக்க பேட்டன் டாங்கிற்கு எந்த வழியாக டீசல் ஊற்றுவீர்கள்?”

அவ்வளவுதான் பேட்டன் டாங்கியினை அழிக்கும் முறையினை கண்டார்கள், இந்திய தாக்குதல் அதன் டீசல் டாங்கினை குறிவைத்தன, பேட்டர்ன் டாங்கிகள் எரிய தொடங்கின, தன் பெரும் ஆயுதம் அழிய தொடங்கியதில் பாகிஸ்தான் ராணுவம் பின்வாங்கியது.

பாகிஸ்தான் தோல்வி முகம் காட்ட தந்திரமாக பேச்சுவார்த்தைக்கு வந்தது. பேச்சுவார்த்தை அன்றைய சோவியத் யூனியனும் இன்றைய உஸ்பெக் நகரமான தாஷ்கண்டில் நடந்தது

அன்றிரவுதான் சாஸ்திரி மர்ம மரணம் அடைந்தார்

தாஷ்கண்ட் ஒப்பந்தம் நிறைவேறியதாகவும், அதன் பின் சாஸ்திரி மாரடைப்பில் இறந்ததாகவும் செய்திகள் வந்தன.

உண்மையில் நடந்தது என்னவென்றால் சாஸ்திரி போரை நடத்தவே விரும்பினார், முழு காஷ்மீரையும் மீட்டெடுத்து அந்த பிரச்சினைக்கு முற்றுபுள்ளி வைக்கவே விரும்பினார். இந்திய படைகளும் வெற்றிமுகத்தில் இருந்தன‌

ஆனால் வல்லரசுகளுக்கு அது பிடிக்கவில்லை. காஷ்மீர் இந்தியாவின் பகுதியாகும் பட்சத்தில் அது சர்வதேச அரசியலாகாது. அது இழுத்துகொண்டே இருந்தால்தான் வல்லரசுகள் அரசியல் செய்யமுடியும் என திட்டமிட்டன‌

ஆம் அந்த சிக்கலை உலக சிக்கலாக்கி கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மலைச்சாரலில் தங்கள் ராணுவத்தை நிறுத்த அமெரிக்காவுக்கும் ஆசை, சோவியத்துக்கும் உள்ளூர ஆசை

இருவருமே காஷ்மீரில் கால்பதிக்கபார்த்தார்கள், சாஸ்திரி மொத்த காஷ்மீரையும் மீட்கும் திட்டத்தில் இருந்தார், விடுவார்களாஅ?

அந்த நயவஞ்சகத்தில்தான் சாய்க்கபட்டார் சாஸ்திரி,

அவர் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபின்னர் தான் இறந்தார் என சோவியத் யூனியன் சொன்னதால் போர் நின்றது. ஆனால் சாஸ்திரி கையெழுத்து இடும் ரகம் அல்ல. அவரின் விருப்பம் காஷ்மீரை முற்றாக விடுவிப்பது.

அந்த போர் மட்டும் சாஸ்திரி திட்டபடி தொடர்ந்திருக்குமானால் காஷ்மீர் சிக்கல் என்றோ முடிந்திருக்கும்.

அந்த மர்மமே தீராத தேசத்தில்தான், ஜெயாவிற்கு நியாயம் கேட்க போகின்றார்களாம்

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கலாம், ஆனால் மர்மமாக சாகும் சூழலை அவரேதான் ஏற்படுத்திகொண்டார் என்பதில் மர்மமே இல்லை.

ஆனால் நாட்டுக்காக வாழ்ந்த மாபெரு மனிதனான சாஸ்திரியின் மரணத்தில் இருக்கும் சந்தேகம் தீர்க்கபட்டிருக்க வேண்டும், சர்வதேச அரசியல் விளையாட்டில் அது வெளிவராமலே போனது

அந்நிய சக்திகளுக்கு இந்திரா, ராஜிவ் மட்டுமல்ல முதன் முதலில் தன் உயிரை கொடுத்தது நிச்சயம் லால் பகதூர் சாஸ்திரிதான்

அந்த மனிதனின் வாழ்வினை நோக்கும் பொழுது , அதுவும் இந்நாளில் நோக்கும்பொழுது தெரிவது ஒன்றுதான்

சாஸ்திரி அப்பழுக்கற்ற தியாக வாழ்வினை வாழ்ந்திருக்கின்றார்.

மறக்க முடியாத மாமனிதன் சாஸ்திரி, இந்தியா கண்ட இரும்பு மனிதர்களில் நிச்சயம் அவரும் ஒருவர்.

இன்று காந்திக்கு மட்டுமல்ல, சாஸ்திரிக்கும் பிறந்தநாள்

காந்தி, காமராஜர், சாஸ்திரி என்ற அந்த மகான்களை, தேசத்தின் பெரும் அடையாளங்களை வணங்கும் நாளிது. கட்சி கொள்கை பேதமின்றி இந்தியனாக அஞ்சலி செலுத்தவெண்டும்

இவர்களெல்லாம் இந்த தேசத்திற்காக வாழ்ந்தவர்கள், அதற்காகவே இறந்தவர்கள். ஒவ்வொரு நொடியும் இத்தேசத்திற்காகவே அவர்கள் இதயம் துடித்தது

அந்த இதயத்தினை ஒவ்வொரு இந்தியனும் இரவல் வாங்குவோம், தேசத்தை தாங்குவோம்

இந்த மாபெரும் தேசம் அந்த தியாகிகளை நன்றியோடு வணங்கி, அவர்கள் கண்ட வளமான அமைதியான இந்தியாவினை உருவாக்கி அவர்களுக்கு காணிக்கையாக்க சபதமெற்கும் நாளிது

நாட்டிற்காய் உயிர்நீத்த அந்த தியாக தலைவனுக்கு ஆழ்ந்த அஞ்சலி. இத்தேசத்தின் ஒவ்வொரு வெற்றியிலும் சாஸ்திரி வாழ்துகொண்டேதான் இருப்பார்

இந்நாட்டின் மிக சிறந்த பிரதமர்களில் அவருக்கு எந்நாளும் முதலிடம் உண்டு, அதில் சந்தேகமில்லை

இந்நாளில் சாஸ்திரி எனும் மாமனிதனையும் இத்தேசம் கொண்டாடி தீர்க்கவேண்டும், காரணாம் இன்றுதான் நாம் 370ம் பிரிவினையே ரத்து செய்திருக்கின்றோம், அந்த மனிதனோ காஷ்மீர் இந்தியாவோடு முழுமையாக இணைய உயிரையே விட்ட தியாகி

அந்த தியாகிக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்...

(அந்த போரில் இந்தியா அட்டகாசமாக நொறுக்கிதள்ளிய பேட்டன் டாங்க் என்ன ஆனது? மிக நவீனமான டாங்க் என அமெரிக்கா மார்தட்டிய அந்த டாங்கினை இந்திய படைகள் டீசல் டேங்கில் ஒரு தீக்குச்சி மூலம் தகர்த்தெரிந்ததில் அமெரிக்காவிற்கு மிகுந்த அவமானமாயிற்று
அந்த டேங்கிகள் செய்வதையே நிறுத்திற்று அமெரிக்கா.)

Lal Bahadur Shastri doing office work in Airplane. Along with him is his wife, Lalita Devi.

Most of us would have studied about Shastri in our school textbooks in which we were taught that he was initially a freedom fighter, then became prime minister after Nehru, and later died in Tashkent. Thats all we know. So, let me share some interesting facts about him here..

October 2nd. Whose birthday is it? Yeah correct. Also, it is Shastri's birthday on same day and most of us dont even know it, let alone celebrate.

If you combine dedication, ethics, honesty, integrity, responsibility, & austerity, you get Shastri!! The above photo is the best example to show his dedication towards his job. Can we think of today's politician doing his job in flight like this? Forget flight, do they do their jobs with this much of dedication even in their office?

Want to see how our politicians work? Watch this 1 min clip
http://www.youtube.com/watch?v=Fu8uqMEmyRE

Talking about integrity & responsibility.
There was a major railway accident sometime in 1950s. Being the railway minister at that time, he took moral responsibility and offered his resignation (However, Nehru did not accept it). That shows the moral standards he maintained.

Talking about honesty and ethics.
During freedom struggle, when he was jailed by the British, he was informed that his daughter was sick. So he asked for 15 days permission and was granted on the condition that he will not participate in freedom struggle in these 15 days. By the time he reached his home, his daughter had died. After performing the funeral for 3 days, he immediately returned back to jail inspite of having 12 more days of freedom from jail!!
Similarly, one day, while in jail, he was told that his son was sick and this time he got a permission of 7 days of leave from jail. He stayed with his son all the 7 days. The son had still not recovered, but Shastri went back to jail to keep up his word!! (Fortunately, the son survived)

Talking about austerity.
He is popularly called "The politician who made no money". He was born in a poor family, he lived his life in simplicity and austerity. And he died as a poor man. He really knew what austerity meant.

These are the kind of leaders we need today who can demonstrate what real austerity means. Not by someone who boards a train for the first time in his life at the age of 38, and spends a night in huts to prove that he is asture. We need austerity lessons from people who have really experienced poverty so that they understand what real poverty means. Not by someone who has zillions in swiss banks and talks about eradicating poverty here.

There is a nice article with more thought provoking facts about Shastri written by his press advisor:
http://in.rediff.com/news/2004/oct/06spec1.htm
#ksrpost
2-10-2019.


#பாண்டியன்_விரைவு_ரயில்_பொன்விழா மதுரை- சென்னை எழும்பூர் *

#பாண்டியன்_விரைவு_ரயில்_பொன்விழா
மதுரை- சென்னை எழும்பூர் *
#பாண்டியன்_எக்ஸ்பிரஸ்* துவங்கி 50 ஆண்டுகள் இன்று முடிவாகிறது. 1969இல் பெரிய எதிர்பார்ப்போடு துவங்கப்பட்ட இந்த பாண்டியன் ரயில் வண்டி இன்றும் அதே போல பல நினைவுகளை தினமும் சுமந்து செல்கிறது. அதேபோல, கோவைக்கு செல்லும் ப்ளு மவுண்டேன் என்று சொல்லப்படும் நீலகிரி எக்ஸ்பிரஸ் மேற்கு கொங்கு வட்டாரத்தில்  மிகவும் பிரசித்தம்.

பாண்டியன் எக்ஸ்பிரஸ் சேவையை துவங்கும் போது மதுரை வட்டார மக்கள் மட்டுமல்ல திருநெல்வேலி வரை மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். அந்த காலத்தில் இந்த ரயில் வண்டி பச்சை வண்ணத்தில் இருந்ததாக நினைவு. சென்னை வரும்போது 1970ல் முதன்முதலாக இந்த ரயிலில் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. பாண்டியன் எக்ஸ்பிரசில் எத்தனையோ அரசியல், வணிக, பொருளாதார, சமூக நிகழ்வுகளுக்கு துணையாக இருந்துள்ளது. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு வகையில் இருந்திருக்கலாம். அதற்கு பின் வைகை எக்ஸ்பிரஸ் பகல் நேரத்தில் துவக்கப்பட்டது.

இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவில் செய்தி வந்துள்ளது. 

https://timesofindia.indiatimes.com/city/chennai/pandian-express-is-50-the-majestic-legacy-lives-on/articleshowprint/71382701.cms 

Pandian Express is 50, the majestic legacy lives on

Flagship train of Madurai railway division’, ‘Undisputed King of Southern Railway’, ‘Honeymoon Express’ are some of the epithets that rail enthusiasts and railway personnel employ whenever there is a mention of Pandian Express. Such is the passion and emotional bonding passengers have developed towards the train as it completes 50 years of its journey between Madurai and Chennai (then Madras) on Tuesday.

Inaugurated on October 1, 1969, Pandian Express – named after the Pandya Kingdom, the first train in Indian Railways to be named after a kingdom – marked the beginning of a new chapter in the history of Southern Railway, as the need for a faster overnight connectivity between the two cities was fulfilled by the Madurai division.
Led by twin steam locomotives, to haul an 18-coach rake, the train announced its departure from the Madurai Junction with the symbolic steam whistle and thick black smoke amid cheers from several hundreds gathered there.

The ICF, for first time in the metre gauge (MG) era, had manufactured brand new rakes with a unique bottle green livery with two vermilion bands above and below the windows. During its initial days, the composition was two first class, eight sleeper, one mail/parcel van, five unreserved and two SLR coaches. "The rakes had much bigger fans with shutter windows, all newly-introduced features. Since the coach capacity was too high, Southern Railway operated the train with double steam locomotives from Madurai to Villupuram and from thereon, with a single electric locomotive," says Arun Pandian, a railfan.

Numbered 117/118, the train covered 495km in 11 hours and 10 minutes. The initial timings used to be 7.35pm departure at Madurai and 6.45am arrival at Madras the next day. In the return direction, it had a 7.05pm departure at Madras and 6.15am arrival at Madurai the next day. With a maximum permissible speed of 75kmph, this used to be the fastest in the MG traction.

For many newly-married couples headed for Kodaikanal, the Pandian Express was the go-to train and thus earning it the nickname ‘Honeymoon Express’. Most of them used to travel in the comfort of the first class coach till Kodai Road station due to its timings and fewer halts. For families too, this was the first choice.

"Pandianla varen (I’m coming by Pandian)," is one way of bringing joy to a typical Madurai-ite. Pandian Express is like a family. From the days of cushionless seats to this day, the train brings lots of memories. My family’s first outing on this train was in the first class coupe. It was a joyride for everyone. On other occasions, dinner with family on board the train was a routine amid peals of laughter and the non-stop chatter," recalls Mariappan, a resident of Madurai

"The train was known for its punctuality, so much so that station controllers gave it utmost priority. It was also the most preferred train by the VIPs. Former chief ministers M G Ramachandran M Karunanidhi were regular travellers of Pandian Express because of the timings," says Arun Pandian.

In 1975, the train gave up steam engines and a diesel locomotive was used. In 1985, two three-tier AC, one first AC and one second AC coaches were added to the rake, thus making it the first MG train to run with all existing classes of Indian Railways.

The MG era of Pandian Express came to an end in March 1998 following gauge conversion and it was during the summer that the new broad gauge (BG) era began with the same timings. However, from October 1, 2002, it was converted into a superfast express and the running time was reduced to nine hours from 11.10 hours with the departure from Chennai changed to 9.30pm and arrival at Madurai to 6.30am. In the return direction, the timings were changed to 8.35pm and arrival advanced to 5.45am. Gradually, more coaches were added due to increased demand on the Madras-Madurai section. Considering the demand and prestige the train enjoys among passengers, the railways converted the rakes to LHB (Linke Hofmann Busch) and at present, it covers the Chennai-Madurai stretch in 7.50 hours while it takes 8.10 hours from Madurai to Chennai.

As Pandian Express completes a glorious 50 years, passengers hope that its punctuality and legacy will remain etched in the annals of Indian railway history.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
#பாண்டியன்_எக்ஸ்பிரஸ்
#மதுரை_சென்னை
#Pandian_Express
#Madurai_Chennai
#KSRadhakrishnanPostings
#KSRPostings
01-10-2019.

Tuesday, October 1, 2019

ஆனந்தரங்கம் பிள்ளை, ரங்கப்ப திருவேங்கடம் பிள்ளை நாட்குறிப்புகளும்

ஆனந்தரங்கம் பிள்ளை, ரங்கப்ப திருவேங்கடம் பிள்ளை நாட்குறிப்புகளும்
----------------------------------
புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் (Puducherry Institute of Linguistics and Culture) அமைதியாக அரிய பணிகளை செய்து வருகிறது. ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு, புதுவை – தமிழக வரலாற்றை சொல்கின்ற ஆவணமாகும். இது 12 தொகுதிகளாக மலிவு விலையில் வெளியிடப்பட்டது. அதேபோல, ரங்கப்ப திருவேங்கடம் பிள்ளை நாட்குறிப்பு இரண்டு தொகுதிகளாக புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. 18, 19ஆம் நூற்றாண்டின் துவக்கம், வரலாறுகள் இந்த நாட்குறிப்பில் உள்ளன. மொழிநடை, அந்த காலத்தின் பேச்சுவழக்கில் உள்ளது. இதை இன்றைய நிலைக்கேற்றவாறு திருத்தி, செம்பதிப்பாக கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எஸ். ஜெயசீல ஸ்டீபன் ரங்கப்ப திருவேங்கடம் பிள்ளை நாட்குறிப்பை அற்புதமாக தொகுத்துள்ளார். மொழிநடை மட்டும் சற்று இன்னும் எளிதாக்கப்பட வேண்டும்.  இந்த இரண்டு டைரிக் குறிப்புகள் அடங்கிய தொகுப்புகள் இதன் இயக்குநராக இருந்த பக்தவச்சல பாரதியும், இப்போதைய இயக்குநர் சம்பத் அவர்களும் எனக்கு வழங்கினர்.

கி.பி. 1760 – 1762 வரையிலான ரங்கப்ப திருவேங்கடம் பிள்ளை நாட்குறிப்பின் சுவடுகளில் பழைய செய்திகள் கிடைக்கின்றன. சென்னை, பிரெஞ்சு தலைநகர் பாரீஸ், புதுவை, தரங்கம்பாடி, திருச்சிராப்பள்ளி, மதுரை, தஞ்சாவூர், ஐதராபாத், மைசூர், திருநெல்வேலி போன்ற  இடங்களில் நடந்த நிகழ்வுகளை எல்லாம் எழுதியுள்ளார். வரலாற்றில் ஆர்வமுள்ளவர்கள் ஆனந்தரங்கம் பிள்ளை, ரங்கப்ப திருவேங்கடம் பிள்ளை நாட்குறிப்பையும் சற்று கவனத்தோடு படித்தால் பல அறியாத செய்திகள் கிடைக்கும். அத்தோடு இதுகுறித்தான ஆய்வுக் குறிப்புகளும் அடங்கியுள்ளன. 
வரலாற்று சிந்தனையாளர்களுக்கு இதுவொரு துணையாகும்.
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
01/10/2019.

#நடிகர்_திலகம்_சிவாஜி_கணேசன்.



 காலத்தை வென்று நிற்கும் சிறந்த நடிகர் தமிழ் சினிமாவில் நிலைத்து நின்று பெயர் தந்தவர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் பிறந்த நாள் இன்று...

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் - மதிவதினி அவர்களின் திருமணம்

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன்  - மதிவதினி அவர்களின் திருமண  அக்டோபர் 1, 1984 அன்று திருப்போரூரில் முருகன் கோயிலில் மிக எளிமையான முறையில் நடைபெற்றது. , பழ. நெடுமாறன் அவர்களும் நானும்சென்றுசகாவைவாழ்த்திய
நினைவுகள் . 35 ஆண்டுகள் கடந்து விட்டது.

போர்குணத்தோடு எங்கிருந்தாலும் வாழ்க....

வேலுப்பிள்ளை_பிரபாகரன்
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
#KSRadhakrishnanPostings
#KSRPostings
01-10-2019.


ஐ.நா. மனித உரிமை ஆணையம் 42வது கூட்டத்தொடர் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கி கடந்த 27ஆம் தேதி முடிவடைந்தது.


ஐ.நா. மனித உரிமை ஆணையம் 42வது கூட்டத்தொடர் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கி கடந்த 27ஆம் தேதி முடிவடைந்தது. இந்த கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக செல்ல இயலவில்லை. ஆனால், ஜெனீவாவில் உள்ள மனித உரிமை ஆணையத்தில் ஈழத்தமிழர் குறித்தான என்னுடைய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் குறிப்பிட்ட விடயங்கள் வருமாறு,

1. இன அழிப்பை செய்த ராஜபக்சேவை சர்வதேச மன்றத்தில் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் லைபீரியா அதிபர் சார்லஸ் டெயிலரை இனஅழிப்பு குற்றத்திற்க்காக தண்டிக்கப்பட்டு லண்டன் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், செர்பிய குடியரசுத் தலைவராக இருந்த மிலோசேவிக், அப்பாவி மக்களைக் கொன்று குவித்தார். இதற்காக 2006ஆம் ஆண்டு அவர் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு நான்கு ஆண்டு காலமாக விசாரணை நடைபெற்று வந்தவேளையில், அவர் சிறையிலேயே இறந்தார். சூடான் அதிபரான ஓமர் அல் பஷீர் கைது செய்யப்பட்டு, அவர் மீது சர்வதேச நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது. இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும்.
முதலில் ராஜபக்சே மீது சர்வதேச சுதந்திரமான புலனாய்வு செய்து அவரை பன்னாட்டு நீதிமன்ற பொறிமுறையில் சுதந்திரமான, நம்பகமான விசாரனை நடத்தி தண்டிக்கப்பட வேண்டும்.
அந்த விசாரனையில் ஈழத்தில் இன அழிப்பு நடந்தது என்று நிரூபிக்கப்படும். அந்த சூழலில் தான் தனிவாழ்வு என்ற தந்தை செல்வாவின் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு மேலும் சர்வதேச அளவில் வலு சேர்க்கும்.
2. சர்வதேச கண்காணிப்பில் ஈழத்தமிழர் விரும்பும் தீர்வான தனி வாழ்வா, சக வாழ்வா, தனி நாடா, சுயநிர்ணய உரிமை, ஒரு நாடு இருதேசங்கள் என்ற பிரச்சனைகள் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
இது நடைமுறைக்கு வரவேண்டுமெனில் சர்வதேச அளவில் ஆதரவு தேவை. மேற்குறிப்பிட்ட ராஜபக்சே மீது விசாரனை நடத்தி இனஅழிப்பு ஈழத்தில் நடந்தது என்று நிரூபிக்கப்பட்டால் இந்த பொது வாக்கெடுப்பு நடத்துவது மிகவும் எளிதாகிவிடும். இது தான் அடிப்படையாக செய்ய வேண்டிய பணிகள்.
3. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்களை பீதியில் ஆழ்த்தும் சிங்கள ராணுவத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
4. இறுதிப் போர் 2009 ல் நடந்தபோது கைது செய்யப்பட்டவர்கள், காணாமல் போனவர்களை உடனடியாக விடுவித்து அவருடைய உறவினர்களிடம் அவர்களை சேர்க்க வேண்டும்.
5. தமிழர்களுடைய விவசாய நிலங்களையும், வீடுகளையும் சிங்களர்கள் கபளீகரம் செய்துவிட்டனர். அதை முறையாக தமிழர்களிடம் திரும்பி ஒப்படைக்க வேண்டும்.
6. ஒப்புக்காக ஏமாற்றும் அதிகாரமற்ற மாகாண கவுன்சில்களுக்கு நில நிர்வாகம், நில வருவாய், காவல் துறை, மீன்பிடி நிர்வாகம் என முக்கிய் அதிகாரங்களை வழங்காமல் இருப்பது தமிழர்களை வஞ்சிக்கின்ற நடவடிக்கையாகும். மாகாண கவுன்சில் என்பது ஏற்புடைய வாதமில்லை என்றாலும் நிர்வாகம் என்று ஒப்புக்கு ஏற்றுக்கொண்ட வகையில் இதன் உரிமைகளை பெற வேண்டிய கட்டாயத்தில் ஈழத்தமிழர்கள் உள்ளனர்.
இப்படியான அடிப்படையான விடயங்களை கவனம் செலுத்துவது முக்கியமான கடமை. இது அவசரமும் அவசியமும் ஆகும். சொல்ல வேண்டிய அவசியத்தினால் இதை வலியுறுத்துகிறேன். ஆக்கப்பூர்வமான எண்ணங்களம் நடவடிக்கைகளும் தான் இன்றைக்கு ஈழப்பிரச்சனைகளுக்கான தீர்வை வழங்கும்.


Before UN Human Rights Council
42nd Regular Session of the UN Human Rights Council
09th – 27th September 2019
An Appeal

I, K.S.Radhakrishnan, Dravida Munnetra Kazhagam, we call on the UNHRC to urge the Sri Lankan government to fully implement human rights for all citizens of Sri Lanka, and a political solution involving the full participation of the Tamil population, ending the systematic historical discriminatory measures of the Sri Lankan state against the Tamil people.
The Sri Lankan government has conducted a systematic genocide in which more than 1,00,000 Sri Lankan Tamils have been killed. Tamils who have been fighting for their rights are being brutally oppressed by the Sri Lankan government.
Our party, The Dravida Munnetra Kazhagam, has been fighting for the rights of the Sri Lankan Tamils for the past 30 years. The Genocide of Sri Lankan Tamils is not something that happened only in 2008-2009 timeframe. The agitation led by our party is itself evidence that the genocide has been happening for a long time.
Under these circumstances, it is just a necessary to settle the following issues,
The Sri Lankan Government announced the end of Civil war in 2009. It has been ten years since then. But even today Tamils are fighting for their rights. A structural genocide is happening to the Tamils in Sri Lanka. Every Sri Lankan Tamilian Faces one or other forms of oppression like enforced disappearances, Land grabbing, political imprisonment, living under heavy military surveillance.
The mothers of the Tamils who disappeared during the war have been protesting for close to 1000 days. Even after the end of war, there is a huge presence of Sri Lankan Army on the Tamil Land.


The people have been protesting against these. They are frisked every day in the Military outposts. How can Sri Lankan Tamils live with freedom under such military occupation?
Every arm of the Sri Lankan government, The Army, the Forest Department, the Wild Life Department, the Housing Authority, the Mahaweli Authority, the Archaeological Department have been keen in grabbing Tamil Lands and wiping out the Tamil cultural symbols. The recent protests by the Tamils reveal this trend. The “Ezhuga Tamil” rally in the North and eastern provinces demanded that only International investigation will bring them justice.
There is no difference between the past Rajapaksa government and the current Mithiripal Sirisena government. Giving more time to the Sri Lankan government will only worsen the conditions of the Sri Lankan Tamils and put them in more danger.
The northern provincial council has also passed a resolution that only an international investigation can bring justice to the Sri Lankan Tamils.
I appeal to the Unite Nations Human Rights council to accept the demands of the Tamils and initiate an Independent International investigation on the Sri Lankan Government for the genocide.
The Sri Lankan Army should be withdrawn from the Tamil Homeland. I also request the Indian government at this juncture to respect the voice of 80 Million Tamils to initiate proceedings in the International Criminal Court against the Sri Lankan government for its crimes of Genocide.


1.     Since the year 1948, ‘Ceylon’ as it was then known gained independence from Britain, Eelam Tamils are under oppression by the successive Sinhala majority governments.
2.     From 1956 June Sri Lanka has massacred  Tamils from 1958,1977,
3.     In 1983 Black July pogrom more than 3000 Tamils were burnt alive,
4.     In 1985 Valvai massacre was perpetrated
5.     In1990-Eastern University massacre took place
6.     In,2006-Trincomalee students massacre forming part of historical genocide culminated in the 2009 Mullivaikkal genocide in Vanni, 
7.     Sri Lanka Armed Forces have perpetrated genocide against Eelam Tamils in which 146,679 Tamils are still unaccounted.
8.     State Armed Forces occupying the Tamil homeland(North-East provinces) oppressing the Tamils should be withdrawn.
9.     Currently there is one member of the Armed Forces for every six civilians in the north. This is a threat to female headed families and orphaned girls. 
10. The armed forces have encroached economic activities of the Tamil peoples via controlling Fishing Industry and indulging in Farming, Tourism (running Holiday resorts, Hotels and Restaurants. This affects the livelihood of the civilians.  
11. Those Tamil youths who were arrested during the civil war period mainly on the basis of confessions obtained through torture and indicted under the two draconian laws, Prevention of Terrorism Act (PTA) and Emergency Regulations (EMR) are still in prisons, they should be released under general amnesty. 
12. Those who were arrested and those who surrendered during the last days of the war at Mullivaikkal should be released immediately.
13. Out of a total land area of 18,800 sq.kms. Inhabited by Tamil peoples in the North-East, Armed Forces are occupying 7000 sq.kms.
14. Further thousands of grazing lands for the cattle of Tamils in Eastern Province have been vested in the Forest department by the President under whose purview the above subject come and Sinhalese from the South are settled there aided and abetted by the Government Special Task Force(STF). 
15. We seek a reliable independent inquiry by International Judges assisted by Legal experts.
16. Further as per the wishes of the Tamils under the supervision of the United Nation a referendum should be held among Eelam Tamils, Diaspora Tamils and Eelam refugees in India who were forcibly displaced from their homeland based on the right to self-determination inherent to every nation.


A special rapporteur should be appointed to monitor the Sri Lankan government in this regard and thus render justice.

Dated at Chennai on 24th September 2019.

Signed. K.S.Radhakrishnan.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
30-09-2019.



#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!!

  #பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!! Bhavani River - Athikadavu, Coimbatore District !!! #athikkadavu #coimbatore #tri...