Thursday, October 10, 2024

Nexus: A Brief History of Information Networks from the Stone Age to AI by Yuval Noah Harari

 Nexus: A Brief History of Information Networks from the Stone Age to AI by Yuval Noah Harari


The story of how information networks have made, and unmade, our world from the #1 Sunday Times bestselling author of Sapiens Stories brought us together. Books spread our ideas – and our mythologies. The internet promised infinite knowledge. The algorithm learned our secrets – and then turned us against each other. What will AI do? NEXUS is the thrilling account of how we arrived at this moment, and the urgent choices we must now make to survive – and to thrive. ‘Tremendous, thought-provoking and so very well reasoned . . . If there is one book that I would urge everyone to read – it is Nexus’ STEPHEN FRY 'One of the most remarkable intellects of our generation' RORY STEWART
@yuval_noah_harari

@KSRadhakrish · Sep 10


 

சுத்தம்….⁉️

 


Wednesday, October 9, 2024

Padmavathi-Here is an inspiring story of the first female cardiologist of India

A Tamil Brahmin Indian girl the world and the people of India forgot.
Every English speaking Jesuit educated Indian know the story of Florence Nightingale but history has no record of Padmavathi .
In the year 1917, a Tamil Indian girl was born in a middle-class family in Rangoon, Burma, where her father had gone for a living. He named her Sivaramakrishna Iyer Padmavathi. 
At a time when women were traditionally confined to the kitchen/illiterate, the middle-class girl did MBBS from Rangoon Medical College.

When the Japanese invaded Burma, they briefly returned to their traditional home in Coimbatore. 
In 1949, she went to London to do an FRCP, then unimaginable for a Female Indian doctor. She was selected to study further at Johns Hopkins University, US, where she trained under the legendary cardiologist Helen Taussig. 
Thereafter, she moved to Harvard University, where she trained under the Father of Cardiology- Paul Dudley White.

When a glorious cardiology career awaited her in the US, she was firm in returning to India & serving Indians. She joined Lady Hardinge Medical College in 1953, to become India's First Lady Cardiologist.

S.I.Padmavathi started India's first Cathlab & exclusive Cardiac Clinic. Started India's first DM Cardiology course. She founded the All India Heart Foundation (AIHF) in 1962, to serve the poor & needy. She joined Maulana Azad Medical College in 1967, by which time her fame had spread. The Indian Govt under Indira Gandhi honoured her with the Padma Bhushan, that year.

She was the cardiologist & administrator of 3 great colleges at the same time- MAMC, G.B.Pant Hospital & Lok Nayak Hospital. She retired as Director, of MAMC in 1978.

She set up the National Heart Institute (NIH) in 1981, in Delhi. At age 90, Padmavathi became a fellow of The European Society of Cardiology in 2007.

Till age 95, (the year 2015), Padmavathi worked 12 hours a day, five days a week, to serve poor and needy Indians, with state-of-the-art Cardiac Care. She retired from active practice, that year. The Government of India bestowed India's second highest Civilian Award, the Padma Vibushan on S.I.Padmavathi in 1992.

Both Padmavathi and her sister Janaki(neurologist) remained single and started the Janaki-Padmavathi trust, pouring in their entire earnings to start a trust to provide poor people with money for life-saving Heart Surgeries.

After dedicating her entire life to serving the poor in the field of Cardiology, S.I.Padmavathi passed away in 2020, at age 103 from Corona.

Imagine the steely resolve, vision, brilliance and sheer determination of this iron- lady to shatter the glass ceiling in achieving all these, serving poor Indians with quality cardiac care, and finally giving away all her wealth to her fellow citizens.

Here is an inspiring story of the first female cardiologist of India


#காலசக்கரங்கள் வேகமாக ஓடுகின்றன. குடும்ப உறவகள் பிரிந்து வாழ்வு ஆதாரம் எட்டு திக்குக்கு தொலைவுக்கு செல்கிறது. வருடம் ஓரு முறை இரண்டு நாட்கள் சந்தித்து பேசி கூடி கலைகின்றனர். உறவு முறைகள் மட்டுமே வெறுமனை வாழ்த வீட்டில், கிராமத்தில் நடந்து திரிந்த தெருக்களில் நிற்கிறது. நினைவுகள் …அவ்வளதான்……

#காலசக்கரங்கள் வேகமாக ஓடுகின்றன. குடும்ப உறவகள் பிரிந்து வாழ்வு ஆதாரம் தேடி   எட்டு திக்குக்கு தொலைவுக்கு செல்கிறது.  வருடம் ஓரு முறை இரண்டு நாட்கள் சந்தித்து பேசி கூடி கலைகின்றனர். உறவு முறைகள் மட்டுமே வெறுமனை வாழ்ந்த வீட்டில், கிராமத்தில் நடந்து திரிந்த தெருக்களில் நிற்கிறது. நினைவுகள் …அவ்வளதான்……




வாழ்க்கை, கிராமம், பிறந்த வீடு எத்தனை அழகானது என்பதைக் நம் பூர்விக குடும்பம் தான் நமக்குக் காட்டுகிறது. எத்தனை இன்பமானது என்பதைத் நமக்கு உணர்த்துகிறது.
முதலில் வாழ்வை ரசிக்கின்ற பண்பு வேண்டும் ஏனெனில் ரசனை தான் நம் வாழ்விற்குச் சுவையூட்டுகிறது.

  “கொஞ்சம் பறந்து
கொஞ்சம் அமர்ந்து
கொஞ்சமே கொஞ்சமான 
இந்த வாழ்வில்
பறவைக்குப்  போல
அவரவர் வெளியில்
அவரவர் வழி.”-Kanaga Balan கனகாபாலன்

கடந்த காலத்தின் சான்றுகள் யாவும் நமக்குள் ஒரு அங்கமாக, நம்முடன் வாழ்ந்து கொண்டே இருக்கும்!
அவைகள் கடிகார முள்ளைப் போல் ஒவ்வொரு நொடிகளிலும் டிக்டிக் என நம்மை அரட்டிக் கொண்டே இருக்கும்!

உண்மையான இன்ப உணர்வுகளும், வேதனை மிக்க வலிகளும், ஒருபோதும் எமைவிட்டு விலகிச் செல்வதில்லை!
அவைகள் காலாவதி அற்றவைதான்

அவைகள், கலடிச் சுவடுகளைப் போல் நமது ஆத்மாவில் வாழ்ந்து கொண்டிருப்பவை!

 கூரை வீடு மாடி வீடு இரண்டிற்கும் நடுவே நிறைய ஓட்டு வீடுகள் அன்று வெயில் சுட்டிருக்கும் மாடி வீட்டிற்கு முந்தைய படியும்
கூரை வீட்டிற்கு அடுத்த படியும் ஓட்டு வீடுகள்தான்...
காலையில் பனி படர
ஓடுகளிலிருந்து வரும்
குழம்பு வாசமும்
வெள்ளைப் புகையும்
தாழ்வாரத்தில் ஒழுகும்
மழை தேங்கிய நீரும்
அதிகாலையின் வானொலிச்
செய்தியும்
உடல் சுடாது கண் கூசும்மஞ்சள் வெயிலும்



இன்று நினைத்தால்கூட
தேநீர்க் கடையின் தகரப் பந்தலின்
மேல் நின்று கத்திய
காகத்தின் நினைவோடு
கலையாமலே இருக்கிறது...
முருங்கை மரம் பூ உதிர்த்தும்
வேப்பங்கொட்டை காய்ந்தும்
ஓட்டு வீட்டிற்குள் வாழ்ந்த
அந்த வாழ்க்கை வேறு
மின்விசிறியின் சப்தம்
இசையானது
இந்த ஓட்டு வீடுகளில்தான்
விண்முட்டும் கனவுகளுக்குக்
கைகோர்க்க
வானத்து நிலா வீட்டிற்குள்
வந்ததுமிந்த
ஓட்டு வீட்டின் ஓட்டைவழிதான்
செம்பருத்தி பூத்ததும்
சில ஓட்டு வீடுகளின் மேல்
பூசணிக்கொடி படர்ந்ததும்
மைனா முட்டையிட்டதும்
ரயில்பூச்சிகள் கூட வாழ்ந்ததுமென
சொல்ல நிறைய அனுபவங்கள்
அன்று
ஒற்றை வீட்டிற்குள் இருந்தது
இன்று ஓட்டு வீடுகள்
சிட்டுக்குருவியின்
சத்தத்தோடு சேர்ந்து
குறைந்துகொண்டே வந்தாலும்
ஒற்றை வரியில்
அதன் நினைவுகளையெல்லாம்
நிரப்பி விடலாம்...
'அது வேறு காலம்!’...

50 வருடங்களுக்கு முன்
90 களில் வாழ்ந்த இனிய வாழ்க்கை,
வாழ்க்கை பயணத்தில்...
எதையோ தேடி பயணிக்கும் நமக்கு கிடைத்தவற்றைவிட
தொலைந்த வகைகள் ஏராளம்....

காலத்தின் மாற்றத்தால் நாம் மறந்தவைகளில் சில...

நாம் எங்கே செல்கிறோம் ??
பனையோலை விசிறி எங்கே?
பல்லாங்குழி எங்கே?
கிச்சுகிச்சு தாம்பாளம் எங்கே?
கோகோ விளையாட்டு எங்கே?
சாக்கு பந்தயம் எங்கே?
கில்லி எங்கே?
கும்மி எங்கே?
கோலாட்டம் எங்கே?
திருடன் போலீஸ் எங்கே?
ஆலமர விழுது ஊஞ்சல் எங்கே?
மரப்பாச்சி கல்யாணம் எங்கே?
மட்டை ரெயில் எங்கே?
கமர்கட் மிட்டாய் எங்கே?
குச்சி மிட்டாய் எங்கே?
குருவி ரொட்டி எங்கே?
இஞ்சி மரப்பா எங்கே?
கோலி குண்டு எங்கே?
கோலி சோடா எங்கே?
பல் துலக்க ஆலங்குச்சி எங்கே?
எலந்தை பழம் எங்கே?
சீம்பால் எங்கே?
பனம் பழம் எங்கே?
பழைய சோறு எங்கே?
நுங்கு வண்டி எங்கே?
பூவரசன் பீப்பி எங்கே?
கைகளில் சுற்றிய பம்பரங்கள் எங்கே?
நடை பழக்கிய நடை வண்டி எங்கே ?
அரைஞான் கயிறு எங்கே?
அன்பு எங்கே?
பண்பு எங்கே?
பாசம் எங்கே?
நேசம் எங்கே?
மரியாதை எங்கே?
மருதாணி எங்கே?
சாஸ்திரம் எங்கே?
சம்பரதாயம் எங்கே?
விரதங்கள் எங்கே ?
மாட்டு வண்டி எங்கே?
மண் உழுத எருதுகள் எங்கே?
செக்கிழுத்த காளைகள் எங்கே?
எருமை மாடுகள் எங்கே?
பொதி சுமந்த கழுதைகள் எங்கே?
பொன் வண்டு எங்கே?
சிட்டுக்குருவி எங்கே?
குயில் பாடும் பாட்டு எங்கே?
குரங்கு பெடல் எங்கே?
அரிக்கேன் விளக்கு எங்கே?
விவசாயம் எங்கே?
விளை நிலம் எங்கே?
ஏர் கலப்பை எங்கே?
மண் வெட்டி எங்கே?
மண் புழு எங்கே?
வெட்டு மண் சுமந்த பின்னல் கூடை எங்கே ?
பனை ஓலை குடிசைகள் எங்கே?
தூக்கனாங் குருவி கூடுகள் எங்கே?
குளங்களில் குளித்த கோவணங்கள் எங்கே?
அந்த குளங்களும் எங்கே?
தேகம் வளர்த்த சிறுதானியம் எங்கே?
அம்மிக்கல் எங்கே?
ஆட்டுக்கல் எங்கே?
மோர் மத்து ?
கால் கிலோ கடுக்கன் சுமந்த காதுகள் எங்கே?
நல்லது கெட்டது சுட்டிக்காட்டும் பெரியவர்கள் எங்கே?
தோளிலும் இடுப்பிலும் சுமந்த பருத்தி துண்டு எங்கே?
பிள்ளைகளை சுமந்த அம்மாக்களும் எங்கே?
தாய்பாலைத் தரமாய் கொடுத்த தாய்மை எங்கே?
மங்கலங்கள் தந்த மஞ்சள் பை எங்கே?
மாராப்பு சேலை அணிந்த பாட்டிகள் எங்கே?
இடுப்பை சுற்றி கட்டிய பணப் பை எங்கே?
இடுப்பில் சொருகிய சுருக்கு பை எங்கே?
தாவணி அணிந்த இளசுகள் எங்கே?
சுத்தமான கிணற்று நீரும் எங்கே?
மாசு இல்லாத காற்று எங்கே ?
நஞ்சில்லாத காய்கறி எங்கே?
பாரம்பரிய நெல் ரகங்களும் எங்கே?
எல்லாவற்றையும் விட நம் முன்னோர்கள் வாழ்ந்த முழு ஆயுள் நமக்கு எங்கே?
சிந்திக்க நமக்கு நேரம் தான் எங்கே?
எங்கே?
எங்கே??
எங்கே???
இத்தனையும் தொலைத்து விட்டு நாம் செல்கின்றோம்...

1. செருப்பு அறுந்தால் தைத்து போட்டுக் கொண்டோம்... கிழிந்த துணிகளை தைத்து போட்ட காலம்....

2.மனித மனங்களில் பாகு
பாடில்லாமல்அன்னி
யோன்யம் சிறகடித்து பறந்த நாட்கள்...

3. காதலித்து திருமணம் செய்தாலும்
கணவனை “வாங்க, போங்க” என்று தான் மனைவி அழைப்பாள்.
இன்று போல் வாடா போடா என்று அழைக்கலாம் காலம்....

4.ஏன் வாக்காளர் சரிபார்க்க வரும் ஆசிரியர்களிடம்.. தங்கள் வீட்டுகாரர் பெயரை உச்சரிக்காமல்...
.யஎன்று சொல்ல வந்த ஆசிரியர் விழிபிதுங்க.. பக்கத்து வீட்டு மாமி வந்து...பெயரைச்சொல்லும் மரியாதை நிறைந்த காலம்...

4.திருமண வைபவங்
களுக்கு பத்திரிகை வைத்து அனைவரையும் நேரடியாக அழைத்தகாலம்...

5.நெருங்கிய சொந்த மென்றால் கூட்டம் குடும்பமாக கும்மியடித்து இருக்கிற உணவை பங்கு வைத்த காலம்... எவ்வளவு கும்மி அடித்தாலும் வாப்பா வந்தால் வீட்டில் ஏற்படும் அமைதி...

6.திருமணம் அதிகமாக வீடுகளிலே நடந்தது....ஒருவார காலம் அந்த வீட்டின் வழியாக செல்லும் போது மட்டன் குறியின் வாசனை மூக்கை துளைக்கும்....
அந்த மணத்தை நுகர்ந்து வந்து நம் வீட்டில் ரசமும் சோறும் சாப்பிடுவது😆...

7 மணவறையில் மணமகன் கொண்டு வரும் சூட்கேசில் பூவெண்ணை ..
Ponds Snow Cream
Cuticura Power..
Binaca Tooth Paste..
Charlie Spray பிரில் கிரிம்
இல்லாமல் இருக்காது...

8.மணமகன் அம்பாசிடர் வந்தால் அதிசயம்.. அந்த கார் மணமகனை விட அதிகமாக அலங்கரிக்
கப்பட்டு இருக்கும்...
மணமகன் வீட்டில் வந்தவர்களை
மணமகள் வீட்டிற்கு அழைத்து செல்ல அம்பாசிடர் கார் அணிவகுக்கும்...
அந்த காரில் எத்தனை பேர் அடைப்பார்கள்..
டிரைவருக்கு உட்கார இடம் இல்லாத அளவுக்கு....

9.அந்த கால கல்யாணங்கள் வீட்டிலேயே நடந்தது...

10.அந்தகாலங்களில் பிரியாணி வைக்க ஃபேமஸ் மாஸ்டர்கள் இருந்தார்கள்...
கட்டாயம் அஜினமோட்டோ கிடையாது...பிரியாணி சுவை அப்படி இருந்தது.நிறைந்த மனதுடன் விளம்பினார்கள்..

11.முதல் நாள் கூட்டு பொறியல் ரசம்
சாம்பாரை..பழைய  மீன் கறி சுண்ட செய்து பழங்கஞ்சியுடன் பருகினோம்.

12. ரயில் பயணத்திற்கு புளிசாதமும்
எலுமிச்சை சாதமும் தயிர் சாதமும் கட்டி சென்றோம்..

13.பெரும்பாலும் பேருந்தில் தான்
பயணம் செய்தோம்..

14. பள்ளி மாணவர்கள் குழந்தைகளாக இருந்தனர்.

15 இளையராஜா தான் எங்கும் ஒலித்தார்.இடை இடையே முகம்மது ராஃபி குரலும் ஒலித்தது 

16. பாடல்களின் வரிகள் புரிந்தன.

17. காதலிப்பவர்களுக்கும் உறவுகளுக்கும் 
.கடிதங்கள் எழுதினோம்.

18.இன்லெண்ட்..
போஸ்ட் கார்டு தகவல் பரப்பும் குறுஞ்செய்தி தாங்கிகளாக செயல்பட்டது..

19.காதலியிடம் பேசுவது அரிது..
பேசினாலும் உடல் கிடுகிடு என்று ஆடியது..

20.ரஜினி கமல் படங்கள்  போட்ட'
பொங்கல்' 'தீபாவளி' க்ரீடிங்க்ஸ் கிடைத்தது.

21. உண்டு களித்து தீபாவளிக்கு சினிமா பார்த்தோம்.

திருநாள் வந்தால் சினிமா பார்க்க அணி வகுத்தோம்..

22. காணும் பொங்கலுக்கு உறவுகளை பார்த்தோம்.
உறவுகளை பலப்
படுத்தினோம்..

23.. திருடனை பிடிக்க ஊரே கூடி ஓடியது...

24. பாம்பு அடிக்க பக்கத்து வீட்டுகாரர் வந்தார்.

25. பக்கத்து வீட்டு பெரியவர்களுக்கு
பயந்தோம்.

26..மானேஜராக பணி புரிந்தாலும் தந்தை சைக்கிளில் தான் பவனி வந்தார்.

27. வெள்ளி அன்று ஒலியும் ஒளியும் பார்க்க ஆவலோடு காத்து கிடந்தோம்.

28.. பழைய புத்தகங்களை பாதி விலைக்கு வாங்கி பாடம் படித்தோம்.

29. பனம் பழம் சுட்டு தின்ன பனை மரத்தின் அடியில் காத்து கிடந்தோம்..

30. கயித்து கட்டிலை பெரியவர்களுக்கு கொடுத்து விட்டு பாயில் படுத்து உறங்கினோம்.

31. எல்லாவற்றையும் விட காலை
பொழுதுகள் ரம்மியமாக இருந்தது,

32.எல்லா வீடுகளிலும் 
பால்காரன் பால் கொண்டு வருவதால் 
பெண்கள் காலையில் எழுந்தார்கள்..

‘மாம்பிளி மாம்பிளி மதுரைக்குப்போறோம’என்று சொக்கப்பனை எரித்து கொண்டாடிய கார்த்திகை எங்கே, ஓலை வேட்டுகள் எங்கே,சீனிக்கிழங்கு,சேவு,குக்குழு,அவற்றை வாங்கித்திங்க, பருத்தி எங்கே,பல்லால்கடித்து ருசிக்க கம்மங்கதிர் எங்காவது இருக்கா,நீச்சித்தண்ணி,கூழ்வகைகள்,இவற்றை எல்லாம்சாப்பிட கும்பாவு எங்கே பள்ளிக்கூட தூக்குவாளி எங்கே,பக்கத்து ஊரு பள்ளிக்கூடம் போக அந்தஓட்டலாட்டு சைக்கிள் எங்கே,வாத்தியாரைப்பார்த்ததும் சைக்கிளை விட்டு இரங்கும் மாணவன்எங்கே எவ்வளவு குறைவான மார்க்குகள் எடுத்தாலும் உயிரை மாய்த்துக்கொள்ள நினைக்காது முன்னேறிச்செல்லும் மாணவன் எங்கே ,உழவு என்ற சொல்லுக்கு பதம் காண ஊர் எங்கே,எங்கள் ஊர் எங்கே, உறவுக்கு அர்த்தம் தேட ஊர் சென்றேன் அந்த ஊரைக்காணோம்.ஊரைச்சுற்றி வந்தேன் யாருக்கும் என்னைத்தெரியவில்லை. காரில் திரும்பும்போது ஊர் பெயர் எழுதப்பட்ட போர்டைப்பார்த்தேன். எங்கள் ஊர்தான் என்று உறுதிப்படுத்திக்கொண்டேன்.

இப்படி பல பல நல்ல விஷயங்களை 
முன்னேற்றம் என்ற பெயரில் நல்லவற்றை தொலைத்தோம்.

"நாகரீகப் போா்வை" போா்த்தி நாசமாய் போனோம்.
அன்றைய வாழ்க்கையில் பிரச்சனைகளும் இருந்தன!
இன்று பிரச்சனைகளே வாழ்க்கையாகிப் போனது
இன்று என்ன தான் உலகம் நவீனமயம் ஆனாலும் தொலைந்த வசந்தகாலத்தை இன்று யாராலும் மீட்க முடியாது.

காலம் மாறினால் நாமும் மாறித்தானே ஆக வேண்டும்.
என்று வேறு வழி இல்லாமல் பிடிக்காமல் வாழ்கிறோம்...

மண்ணின் மணம் மாறா

#nellai #nellai360 #madurai #chennai  #trichy #thanjai #kanyakumari#tirunelvelidistrict #tirunelveli #palayamkottai  #tenkasi #thoothukudi #oldhouse #salem #trichy #chennai #tamil #tamilnadutourism #thanjavur#90s #80s #70s #90sthrowback #village #villagelife #villagefood #villagecooking #villagelifestyle #villagephotography #கிராமம் #கிராமத்து #கிராமத்துவாழ்க்கை #அந்தக்காலம் #middleclass #middleclasslife

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
9-10-2024.
படம்#தாமிரபரணி கரையில் கிராமம்

Friday, October 4, 2024

#*தகுதியே தடை* *நான் பார்த்த அரசியல் இதுதான்*…

#*தகுதியே தடை*
*நான் பார்த்த அரசியல் இதுதான்*… 
———————————
இங்கு அரசியல் என்ன நிலை,
ஓட்டுக்கு பணம் Vote for sales
வாரிசு அரசியல், குடும்ப அரசியல் ஆதிக்கம், ஊழல் என்பது இன்றைய ஜனநாயகம் இங்கு

கட்சிகளின் கேவலமான அரசியலில் ஒன்றுக்கொன்று சளைத்ததில்ல. 

எந்த அரசியல் கடசியிலும் தீவிரமா இயங்கி உண்மையாய் உழைக்கிறேன்னு இளமைகளை தொலைத்து விடாதீர்கள். திரும்ப கிடைக்காது. 




இளமையை தொலைச்சேன்.. குடும்பத்துக்கான நேரம் செலவழிக்கல. பிள்ளைகளோடு விளையாடல. அவர்களை சரியா கவனிக்காமல் கட்சி கூட்டம்னு அலைஞ்சேன்.. 

ஆனால் ஒரு கட்டத்தில் கட்சிகள் பிராடு பயலுகளாகவும் சந்தர்ப்பவாதிகளாகவும் கட்சிக்காரன் எவனும் எவனுக்கும் சளைச்சவன் இல்ல என்றும் 

எந்த கட்சியிலும் மிகப் பெரிய வித்தியாசம் இல்லன்னு புரியுறப்ப நீங்கள் திரும்பி போக இயலாத தூரத்தை கடந்திருப்பீர்கள். 

நீங்கள் எவ்வளவு பெரிய ஆற்றல் வாய்ந்தவர்களாக அதி புத்திசாலிகளாக அரசியல் புரிதல் உள்ளவர்களாக செறிவான கருத்துகள் மற்றும் அரசியல் செயல்பாடுகள் என்று எந்த திறமைகளை கொண்டிருந்தாலும் நீங்கள் அரசியல் அதிகாரத்துக்கு வருவதென்பது குதிரை கொம்பு தான். 

விதி விலக்குகள் இருக்கலாம். 
இது வரைக்கும் இருந்ததை விட இனி இருக்குற காலத்துல கூழை கும்பிடு கொத்தடிமைத்தனம் வாழ்க வாழ்க கோசம் போட்டு சுயமரியாதையை அடமானம் வைத்து பிழைப்புவாதம் செய்பர்களுக்கு மட்டும் தான் அரசியல் வாய்க்கும். 

அதிகாரத்துக்கு வர விரும்பல சும்மா அரசியல்கட்சி ஒன்றில் இருந்துக்குறேன் ஐடி விங்ல ஏதோ ஒரு பதவி வாங்கிக்கிறேன் வார்டு கவுன்சிலரா வட்டச் செயலாளரா 

ஒன்றிய செயலாளரா  இருந்தாலும் போதும்...இல்லன்னா அமைச்சர் எம்எல்ஏக்களின் அல்லக்கைகளா இருந்தால் போதும்.. இல்லன்னா கட்சியை வெச்சி ஏதோ ஒரு பிழைப்புவாதம் செய்பவர்களுக்கு ஓகே. 

அதை விட்டுட்டு புரட்சி செய்ற கட்சியில் போறேன் புண்ணாக்கு செய்ற கட்சியில் போறேன்னு எவன் பின்னாடியும் போய் வீணாய் நிற்காமல் உங்க வேலையை நல்ல வருமானத்தை குடும்பத்தை பிள்ளைகளை கவனிப்பது உத்தமம். 

ஏன் சொல்றேன்னா இங்க மேடையில பேசுறது ஒண்ணு. ஆனால் செயல்பாடு முற்றிலும் வேறு. 

மேடையில் புரட்சி புண்ணாக்கு எல்லா வெங்காயமும் பேசுவான். அரசியல் பூர்ச்சி புண்ணாக்குலாம் கேட்க நல்லாருக்கும். ஆனால் நடைமுறையில் அவன் சொந்த வீட்லயே கடை பிடிக்க மாட்டான். 

தமிழ் தமிழ்னு மேடையில என்னென்னவோ பேசுவான். வீட்ல தலைகீழா இருப்பான். 

சாதிமறுப்பு சமத்துவம் சமூகநீதி சுயமரியாதை எல்லாம் மேடையில் பேசுவான். 
ஆனால் கொத்தடிமையா இருக்கணும்னு எதிர் பார்ப்பான். வாரிசு அரசியல் இருக்கும் வரை இங்கே நியாயமான வாய்ப்புகள் எவனுக்குமே கிடைக்காது.

நீங்க யோசிச்சி பாருங்க. வாரிசுகள் தொடரும் வரை அங்க எவனுக்காவது வாய்ப்பு கிடைக்குமா? 
இந்த தொகுதிகளில் கடைசி வரை வாழ்க வாழ்க மட்டும் தான். 

அவன் மனைவி மச்சான் எல்லாப்பயலும் கட்சிக்குள்ள தான். எவனும் கேள்வி கேட்க கூடாது இஷ்டம்னா இரு இல்லன்னா வெளிய போ என்பான். 

தாலியை அடகு வெச்சேன். ரோடு ரோடா வசூல் பண்ணேன். பந்தக்கால் நட்டேன்னு ஒப்பாரி வெச்சி எந்த பயனும் இல்லை. 

முழுக்க முழுக்க வசூல் வேட்டை தான். பிச்சை எடுக்காத குறையாக வாழ்ந்தவன் இன்றைக்கு வாழுற ஆடம்பர வாழ்க்கையை பாருங்க. 

பின்னாடி திரிஞ்ச பல பேரு இளமையை எல்லாம் தொலைச்சிட்டு அரசியலில் காயடிக்கப்பட்டு விடப்பட்டவர்கள் தான். 

ஒரு கட்சி அட்டையை வெச்சிக்கிட்டு வாரிசுகளுக்கு தூபம் போட்டு வாழ்க வாழ்க கோசம் போட்டு நினைச்சதை பேச முடியாம எழுத முடியாம திக்கி திணறி வீணாப்போவதை விட 

கட்சியின் தவறுகளுக்கு எல்லாம் முட்டுக் கொடுத்து அவமானப்படுவதை விட புடிச்ச கட்சிக்கு ஓட்டை போட்டுட்டு அரசியலில் தள்ளி நிற்பது உத்தமம்.

கட்சிகளுக்குள் கொஞ்சம் உள்ள இறங்கி பார்த்தீங்கன்னா உள்ளடி அரசியல் ரொம்ப கேவலமா தான் இருக்கும். அதுக்கு பதிலாக டீசன்டா ஒதுங்கி நிற்பது உத்தமம். 

மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வந்த காலமெல்லாம் மலையேறிப் போய்விட்டது என்று செலவு செய்தால் தான் மக்கள் நமக்கு ஓட்டு போடுவார்கள் என்னும் ஒரு எண்ணத்தை பொதுமக்கள் அரசியல்வாதிகளுக்கு உணர்த்தினார்களோ அதே அரசியல் கோடிகளில் விளையாடும் திருவிழா ஆகிவிட்டது ஆக இங்கு சேவை என்பது போய்விட்டது பணம் மட்டும்தான் இருக்கிறது...

பணத்தை குறியாக வைத்து செய்யும் அரசியலுக்கு குலை கும்பிடுகள் தேவை வாழ்க கோஷம் தேவை அடிமை வேலை தேவை இதெல்லாம் இல்லாமல் சுயமரியாதையோடு அரசியல் செய்வேன் என்று சொன்னால் அப்படி ஒரு அரசியல் களம் இனி வரும் காலங்களில் யாருக்கும் கிடைக்காது..

பணம், வாழ்க கோஷம், கூளை கும்பிடு இதுதான் இன்றைய அரசியல் எல்லா கட்சியிலும் இதே நிலைதான் சில கட்சிகளில் அதிகமாக இருக்கும் சில கட்சிகளில் குறைவாக இருக்கும் அந்த ஒரு வேறுபாடு மட்டும்தான்

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என சிலப்பதிகாரம் போதித்து நிற்கிறது.
எங்கும் எதிலும் அறத்தைப் பாதுகாப்பதன் அவசியத்தைக் கூறுவதற்காக இளங்கோ அடிகள் அறம் கூற்றாகும் என்றார்.
அரசியல் பிழைத்தோர் என்று இளங்கோ அடிகள் சுட்டி நிற்பதற்குள் இருக்கக்கூடிய பேருண்மையை உணர்தல் அவசியம்.
அரசியல் என்பது பொதுமக்களைப் பிரதி நிதித்துவம் செய்வது. அரசியலில் இருந்து தான் நீதி, நியாயம், தர்மம் என்ற அனைத்தும் உற்பவமாகின்றன.
எனவே, அரசியல் ஒழுங்கற்றுப் போகுமாயின் அஃது மக்கள் சமூகத்தில் இருக்கக்கூடிய அத்தனை பண்பாட்டு விழுமியங்களையும் சிதைத்து விடும்.
அநீதி மேலேங்கும். அதர்மம் எழுந்தாடும். நன்மக்கள் துன்பப்படுவர். இஃது அழிவையும் அக்கிரமத்தையும் விளைவிக்கும்.
எனவேதான் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் எனச் சிலப்பதிகாரத்தினூடாக இளங்கோ அடிகள் வலியுறுத்தி நிற்கின்றார்.
இங்கு இளங்கோ அடிகள் மன்னராட்சியின் கால கட்டத்தில் நின்று இதனைக் கூறி யிருந்தாலும் ஜனநாயக ஆட்சியிலும் இளங்கோ அடிகள் செப்பிய அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்ற தத்துவம் சாலப் பொருந்துகிறது.
ஆம், ஜனநாயக அரசியல் என்பது முடியாட்சிக்கு மாற்றுத் தீர்வாக, மாற்றுத்தலை மையாக அறிமுகப்படுத்தப்பட்டாலும் அங்கும் பொய், புரட்டு, விசமப் பிரசாரங்கள், மக்களைத் தவறாக வழிப்படுத்துகின்ற மோசங்கள், ஊழல்கள், இலஞ்சங்கள் என ஏகப்பட்ட அதர்ம காரியங்கள் நடந்தாகின்றன.
இவ்வாறு அதர்ம காரியங்கள் நடக்கின்ற போதிலும் அவை அரசியலில் ஏற்றுக் கொள் ளப்பட்ட ஒழுக்கம் போல நினைக்கப்படுவது தான் கொடுமையிலும் கொடுமை. உண்மையில் தர்மம் என்பது அரசியலில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
அவ்வாறு அரசியலில் அகிம்சையை, தர்மத்தை நிலை நிறுத்திய பெரியவர்களை இன் றும் நாம் நினைவுபடுத்துகின்றோம்.
ஆக, அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்ற விடயத்தை ஒவ்வொரு அரசியல் வாதியும் தம்முள் ஆழப்பதிவு செய்ய வேண்டும்.
அரசியல் என்றால் அங்கு தந்திரமே முதன் மையானது என்று எவர் நினைக்கின்றாரோ அவர் தனக்கான எதிர்கால அழிவைத் திட்ட மிட்டு விட்டார் என்று பொருள் கொள்ளலாம்.

இன்று என்ன நிலை,
ஓட்டுக்கு பணம் Vote for sales
வாரிசு அரசியல், குடும்ப அரசியல் ஆதிக்கம் என்பது இன்றைய ஜனநாயகம் இங்கு
#தகுதியேதடை 
நான் பார்த்த அரசியல் இதுதான்

#தகுதியேதடை
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
4-10-2024.

Thursday, October 3, 2024

நேற்று விடுதலைச் சிறுத்தைக் கட்சியினர் மதுவிலக்கு மாநாட்டை நடத்தியுள்ளனர். அதில் திமுகவும் கலந்து கொண்டது வேடிக்கை⁉️

நேற்று விடுதலைச் சிறுத்தைக் கட்சியினர் மதுவிலக்கு மாநாட்டை நடத்தியுள்ளனர். அதில் திமுகவும் கலந்து கொண்டது வேடிக்கை⁉️



திமுகவை அழைத்து மதுவிலக்கு மாநாட்டை நடத்துவதுதான் சரி போலும்!. அதில் ஒரு கேள்வி வருகிறது! மதுவிலக்கு குறித்து இன்றைய திமுகவின் நிலை என்ன? ‪மதுவிலக்கை தளர்த்தக் கூடாது என்று யாரிடம் போராடினார் ராஜாஜி?‬



‪திமுகவிடம்!‬

அது ஒரு புறம் இருக்க இந்த மதுவிலக்கு மாநாட்டு மேடையில் திமுகவினரே கடுமையாக விமர்சித்த ராஜாஜி மற்றும் காமராஜர் கட்டவுட்களை வைத்திருக்கிறார்கள்.அதுவும் சரிதான்!

ஆனால் இவர்களுக்கு தெரியாதா என்ன! முதன்முதலாக மதுவிலக்கு வேண்டும் என்று வலியுறுத்திக் கடுமையாகப் பேசிய நடை முறைக்கு கொண்டு வந்த தமிழகத்தின் முதல் முதல்வர் ஓமந்தூரார்தான்!  அவரது கட்டவுட்டைக் காணோமே? 
தமிழ்நாட்டின் மதுவிலக்குப் போராட்ட வரலாற்றை ஒழுங்காகத் தெரியாதவர்கள் நடத்திய மாநாடு தான் இது.!

இந்த லட்சணத்தில் மாநில அதிகார பட்டியல் அளவில் உள்ள மது ஒழிப்பை மத்திய அரசுதான் கொண்டுவர வேண்டும் என்று சொல்லும் பைத்தியக்காரர்கள் பற்றி என்ன சொல்வது? பிகாரில், குஜராத்தில் , மிஸேரோமில், நாகலாந்தில், லட்சதீவில்   ம த்திய அரசு சொல்லி கொண்டு வந்தார்களா❓ இதுவும் தமாஷ்தான்….. என்ன சொல்ல❓

சாத்தான்கள் வேதம் ஓதுகின்றன! தமிழ்நாட்டு மக்களை கோமாளிக்கூட்டம் என்று இந்தத் தேர்தல் அரசியல் கட்சிகள் முடிவெடுத்துவிட்டார்கள் போல.

#மதுவிலக்கு

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
3-10-2024

#தற்போது காவிரியில் வருவது உபரி நீர்தான்...

  #தற்போது காவிரியில் வருவது உபரி நீர்தான்...