Friday, October 24, 2014

அருட்செல்வர், பெரியவர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம்

அருட்செல்வர், பெரியவர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம்
--------------------------------------------------------------------------------
அருட்செல்வர், பெரியவர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம், தனது 91வது வயதில், வள்ளலார் குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, மயங்கி விழுந்து காலமாகி விட்டார். 1952இலிருந்து 1967 வரை பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக பணியாற்றி உள்ளார். வள்ளலார் கொள்கையை பின்பற்றும் காந்தியாவாதியாக இருந்தவர். மக்களுக்கு பயன்படும் வகையில், குறைந்த விலையில், பல நூல்களை பதிப்பித்தவர். மனித நேயம், எவருக்கும் உதவும் சிந்தனை, தொழில், கல்வி, விவசாயம், இலக்கியம், நூற்பதிப்பு என பல்வேறு வகையில், தமிழ்கூறும் நல் உலகிற்கு நற்பணி ஆற்றியவர். சக்தி ஏட்டில் அவர் எழுதும் கட்டுரைகள் படிக்க ஆர்வத்தைத் தூண்டும்.



பல நேரங்களில் நான் அவரை சந்தித்தது உண்டு. அப்போதெல்லாம் என்னிடம், “என்ன தம்பி, இப்படி நல்ல எண்ணத்தில் பலருக்காக, பல ஆண்டுகளாக உழைக்கிறீர்கள். இதை நான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். உங்கள் உழைப்பைப் பெற்றவர்கள் உங்களைக் கண்டு கொள்ளவில்லையே” என வருத்தத்தோடு கூறியுள்ளார்.

என்னுடைய ‘உரிமைக்குக் குரல் கொடுப்போம்’ என்ற தினமணி போன்ற ஏடுகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூலுக்கு, 17.11.1994இல் அணிந்துரை வழங்கினார். அதில் என்னைப் பற்றி குறிப்பிடுகையில், ‘ஆர்வத்தோடும், துடிப்போடும் உழைப்பவர்’ என்று அவர் சொன்னது இன்றும் நினைவில் உள்ளது. 35 ஆண்டுகளுக்கும் மேலாக அவருடன் பழகிய காலத்தில், அவர் இளைஞர்களை ஊக்குவித்ததை பார்க்க நேர்ந்ததுண்டு. வயது வித்தியாசம் பார்க்காமல் இளைஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கவனமாக கேட்பார்.

-
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment

ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu

#ஆந்திர  துணைமுதல்வர்  பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு  #Meeting with  AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...