Saturday, October 25, 2014

பதுகாக்கப்பட்ட கருப்பு பணம்

பதுகாக்கப்பட்ட கருப்பு பணம்
-------------------------------------


சுவிஸ் வங்கி மற்றும் வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு வழங்க இருப்பதாக தெரிகின்றது. நீண்ட நாட்களாக விவாதிக்கப்பட்டு வரும் இப்பிரச்சினை முடிவுக்கு வருகின்றது. சட்டத்திற்கு புறம்பாக கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாய வேண்டும். சுவிட்சர்லாந்து HSBC வங்கியில் கருப்பு பணத்தைப் பதுக்கியுள்ள இந்தியர்கள் 20 பேரின் பெயர்கள் மத்திய அரசின் கைவசம் உள்ளது. கருப்பு பணத்தைப் பதுக்கி வைத்துள்ள, கிட்டத்தட்ட 136 பேர்கள் கிடைத்துள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் ஆதாரமற்ற செய்தியாக வெளியே வந்துள்ளது. இன்னும் இதில் தொடர்புடையவர்கள் எத்தனை பெயரோ தெரியவில்லை. கருப்புப் பணத்தை வெளிநாடுகளில் பதுக்கிய எவருக்கும் கருணை காட்டாமல், எவ்வளவு பெரிய இடத்தில் இருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும்.

-
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment

ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu

#ஆந்திர  துணைமுதல்வர்  பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு  #Meeting with  AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...