Friday, October 24, 2014

புதுவை அதிகாரி பேராசிரியர் வி.ஏ. வாசுதேவ ராஜூ

புதுவை அதிகாரி பேராசிரியர் வி.ஏ. வாசுதேவ ராஜூ
---------------------------------------------------------------------
கிராமியப் பொருளாதாரத்தை நன்கு அறிந்த வி.ஏ.வாசுதேவ ராஜூ அய்.ஏ.எஸ்., புதுவை அரசில் பணியாற்றியவர். அவர் எழுதிய Face to Face with Readers என்ற நூலை பற்றி இந்த வார இந்தியா டுடே தமிழ் இதழின் நூல் அறிமுகம் பகுதியில் பார்த்தேன். இவர் திறமையான அதிகாரி மட்டுமல்லாது, பொருளாதார துறையில் சில காலம் கோவில்பட்டி வேங்கடசாமி கல்லூரியில் பணி செய்தார் என்றும் நினைக்கின்றேன். 1980களில் இவரை சந்தித்தபோது நாட்டின் பல பிரச்சினைகள் குறித்து ஆக்கப்பூர்வமாக பேசினார்.


நேரு, ராஜாஜி, காமராசர், பேரறிஞர் அண்ணா, இந்திரா காந்தி, கலைஞர், சி.சுப்பிரமணியம் போன்ற ஆளுமைகளுடன், இந்தியாவின் திட்டங்கள் குறித்து நேரடியாக விவாதித்தவர் என்ற செய்திகள் உள்ளதாக தெரிகின்றது. இந்த முயற்சிக்கு பேராசிரியர் வி.ஏ. வாசுதேவ ராஜூ அவர்களை பாராட்ட வேண்டும்.

-
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...