Saturday, October 25, 2014

என்று தணியும் இந்த சினிமா மோகம்?

என்று தணியும் இந்த சினிமா மோகம்? 
-------------------------------------------------------
இன்றைய தமிழ் தி இந்துவில், ப.முரளிதரன் எழுதிய என்று தணியும் இந்த சினிமா மோகம்? என்ற பத்தி யதார்த்தமானதாகும். உள்ளது உள்ளபடி சொல்லி உள்ளார். தமிழகத்தில் சினிமாவும், தொலைக்காட்சித் தொடர்களும், அரசியல் முதல் சகலத்தையும் முடிவு செய்வதாக உள்ளது. இது வேடிக்கையான, ஆபத்தான நிலைமையாகும்.



கல்வியறிவு குறைந்துள்ள பீகாரில் சத்ருகன் சின்ஹாவின் அலை கிடையாது. ஆந்திராவில் ஒரு காலத்தில் சினிமா மோகம் மக்களின் முடிவுகளில் இருந்தது. இப்போது அங்கு அது குறைந்துவிட்டது. கர்நாடகத்தில் ராஜ்குமார், கேரளாவில் பிரேம் நசீர், இந்தி மண்ணில் தர்மேந்திரா, கபூர்கள், ஷாருக்கான் போன்றோரின் தாக்கத்தை, அங்குள்ள மக்கள் வேறு விஷயங்களிலும் பிரச்சினைகளிலும் சம்பந்தப்படுத்திப் பார்க்கவில்லை. தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த மோகம்? என்று தணியும் இந்த தாக்கம்? விதியே தமிழ் சாதியை என் செய்ய என்னும் பாரதியின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றது.

-
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...