Tuesday, April 23, 2024

*எனது சம்பாத்தியம்*….. *நான் பெற்றது*….. *ஆயிர கணக்கில் புத்தகங்கள்தான்*…. *மனிதனை மனிதனாக வாழவைப்பது புத்தகங்கள்தான்*… *இதுவே எனது சொத்து*!




//அலமாரியின் வரிசையில் நின்று நமக்கு முதுகைக் காட்டின புத்தகங்கள் ஜன்னல் விளிம்பில் சிந்தியிருந்த புத்தகங்கள். கட்டின பெண்டாட்டி மாதிரி நம்முடன் படுக்கையில் கூடப் படுத்துறங்கிய புத்தகங்கள். பெற்ற பிள்ளை மாதிரி மார் மீது கவிழ்ந்து  தவழ்ந்த  புத்தகங்கள் .படித்தவை !  படித்து  மறந்தவை,  பிடித்தவை ! பிடித்து மறக்க முடியாதவை.




பிடித்த  புத்தகம் பிடித்த பெண்ணைப்போல மறுபடி மறுபடி அழைக்கும். விடுமுறைப்  பிற்பகலில்,  நள்ளிரவில்  புரட்டக்  கூப்பிடும்.

அதைத் தேடிப் புறப்பட்டவன் கையில் கவிதை சிக்கும். தத்துவம் பிடிபடும். வாழ்க்கைப்  பந்தைப்  பிரித்து  வீசிய  கேள்விகள்  இடறும் ! பதிலும், திகிலும் எதிர்ப்படும்//

- என் யோசனை என்ற கதையிலிருந்து,
மாலன் 

#ksrpost
23-4-2024.

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...