Friday, May 9, 2025

#எட்டையபுரம்

 #எட்டையபுரம்

#பாரதிஇல்லத்தில் சீரமைப்பு பணி துவங்கியுள்ளது பழைய பொலிவுடன் திகழட்டும்… மகிழச்சி!
எட்டயபுரத்தில் மகாகவி பாரதி பிறந்த இல்லம் நினைவிடமாக இருக்கிறது! அங்கு நான் அடிக்கடிச் செல்வதுண்டு. 1989 கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் நான் திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட நாளிலிருந்து பாரதி வீட்டிற்கும், பாரதி மண்டபத்திற்கும் போய் வருவேன். 2009ல் டெசோ -2 பணிகள் நடத்தும் போது பாரதி மண்டபத்திற்கு சென்றபோது, பாரதி மண்டபத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த கலைஞர் ஆட்சி காலத்தில் அந்நிகழ்வு சம்பந்தமாக அங்கு பொறிக்கப்பட்டிருந்த நினைவுப் பலகை என்ன காரணத்தினாலோ அகற்றப்பட்டிருந்தது!
1989 ல் விருந்து அந்த நினைவுப் பலகை அங்கு இல்லை என்பதை அறிந்து அதை மீண்டும் எவ்வாறாவது அந்த நினைவுப் பலகையை மீண்டும் அங்கே பொறிக்க வேண்டும் என்று நினைத்தபோது, 1991திமுக ஆட்சி கலைப்பு, ராஜிவ் படுகொலை, 1993 மதிமுக பிளவு என…..
பின், நான் திமுகவில் இல்லாமல் இருந்த காலங்கள் அந்த நினைப்பை ஒத்திப் போட்டு விட்டன. உண்மையில் அதை நான் பலமுறை சொல்லியும் அதை மீண்டும் கொண்டு போய் அங்கு வைப்பதற்கு அன்றைய தூத்துக்குடி திமுக மாவட்ட செயலாளரும் ,யாரும் தயாராக இல்லை! பிறகு 2009இல் கலைஞருடன் இணைந்த பிறகு தான் கலைஞர் வைத்த நினைவுப் பலகையைப் புதிதாகச் செய்து அங்கு கொண்டு போய் மாட்டினேன். அத்துடன் இல்லாமல் பாரதி மண்டபத்தின் முதல் மாடி சற்று பலகீனமாகச் செப்பனிட வேண்டிய நிலையில் இருக்கிறது என்பதையும் அவரிடம் சொன்னேன். அவர் உடனே ராஜமாணிக்கத்திடம் தூத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கு அதைப் பராமரிக்குமாறு கடிதம் எழுதி அனுப்பினார். இன்று வரை அந்தப் பணி சரியாக நடக்கவில்லை நாடாளுமன்ற அமைச்சர்கள் எம்பிக்கள் எல்லாம் இருந்தும் கூட பாரதி மண்டபத்தின் சீர்குலைவு பற்றி யாருக்கும் அக்கறை இல்லை.
கீழே கொடுக்கப்பட்ட விபரங்களின் படி திருச்செந்தூரில் 2009 டிசம்பர் சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்த போது பாரதியாரின் பிறந்த நாளும் வந்தது. அப்போதுதான் கலைஞரின் நினைவுப் பலகையை நானும் தங்கவேலுவும் பாரதியார் இல்லத்திற்கு எடுத்துக் கொண்டு போய்ப் பொருத்தினோம். அதைத் திறந்து வைக்க கூட யாரும் வரவில்லை. இந்த சம்பவங்கள் எல்லாம் அன்று பாரதி மண்டபத்தில் நிர்வாகிகளாக இருந்த அனைவருக்கும் தெரியும்! என் வருத்தம் என்னவென்றால் கலைஞர் அவர்களின் பெயர் குறித்த அந்த நினைவுப் பலகையை அதாவது பாரதி நினைவு மண்டபத்தை கலைஞர் நாட்டுடைமை ஆக்கிய சிறப்பான இந்த மறுநிகழ்வில் கலந்து கொள்ளக் கூட யாரும் அங்கு வரவில்லை என்பதுதான்! இதற்கும் அன்றைக்கு நடந்து கொண்டிருந்தது திமுகவின் ஆட்சி! காலத்தின் முன்பு களைச் செடிகள் விருட்சமாவதில்லை! ‪பாரதியாரின் நினைவு இல்ல மேற்கூரை பெயர்ந்து விழுந்தது என செய்தி. அவரை வாழும்போதுதான் அங்கீகரிக்காத இந்த தமிழ்ச் சமூகமும் ஆள்வோரும் குறைந்தபட்சம் அவரது நினைவு இல்லத்தையாவது நல்ல முறையில் பராமரிக்க வேண்டாமா? அல்லது பராமரித்ததாக கணக்கு காட்டி விட்டனாரோ! ஈனப்பிறவிகள். அவர் சொன்ன வரிகள் தான் ஞாபகத்திற்கு வருகிறது. பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.‬ விரிவான விளக்கங்கள் தான் கீழே தரப்பட்டுள்ள என்னுடைய பழைய பதிவு

No comments:

Post a Comment

ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu

#ஆந்திர  துணைமுதல்வர்  பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு  #Meeting with  AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...