Monday, May 5, 2025

கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே !




 கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே !

பூளைப்பூ பூத்த மேட்டின் பூந்தாதே !
கோவிந்தன் பேர் சொல்லும் கோவையென
நாவிந்தம் படைத்த பூ.சா.கோ அறநிலையமே !
வேங்கட ரங்க, கங்க, நாராயண எனும்
நன்மக்கள் நால்வர் செய்த தவமே !
வேலையென வந்த பிள்ளைதனை
எம்பிள்ளையென அரவணைத்த அறநிலையமே !
நும் மண்ணில் ஒரு அட்டமி நாளில்
திக்கெதுவெனத் தெரியா கோகுலத்துப்
பிள்ளையென திருதிருவென விழித்தபடி
நுழைந்த பிள்ளையினை அணைத்த அறநிலையமே !
வெள்ளிவிழா ஆண்டுகளோடு பத்து திங்களதும்
கூடவொரு எட்டு நாட்களதும் சேர்த்துவைத்துப்
காத்திருந்த அறநிலையமே ! உன்னை வணங்குகிறேன் !
உன்னில் பணி செய்யும் உன்னதங்களை வணங்குகிறேன் !
தன்னை அறிய தனக்கொரு கேடில்லை
தன்னை அறிந்தவன் தானே கெடுவதில்லை !
உன்னை அறிந்தவர் உயர்ந்தே வாழ்வர் !
உன்னுள் அறிந்தவர் உன்னதம் பெறுவார் !
மந்திர மொழிகள் சொல்வது தமிழ்தான் !
சர்வஜனங்களும் பயில்வது மொழிதான் !
அறம் அறத்தினை வளர்க்குமென்றே
அறைந்ததும் பூசாகோ அறநிலையம் நீ தான் !
என்னை அறிய எனக்குள் அறிய
உன்னுள் என்னை வளர்த்திட்ட
கண்ணின் மணியே ! கண்கள் கசிய
உன்னை வணங்குகிறேன் ! விடைகொடு ! நீயே ,,,,

No comments:

Post a Comment

#*தமிழக அகழ்வாய்வு* #*Keezhadi* #*Tamilnadu Archeology*

#*தமிழக அகழ்வாய்வு* #*Keezhadi* #*Tamilnadu Archeology* —————————————— *திருநெல்வேலி ஆதிச்சநல்லூர் அகழாய்வு தான் தமிழ்நாட்டிலேயே முதன்மையான ...