1959 ஆம் ஆண்டு வெளிவந்த சகோதரி திரைப்படம் மூலமாக தமிழ்சினிமாவில் தன்னை அழகும், அபிநயத் திறமையும் கொண்ட நடிகையாக அறிமுகப்படுத்திக்கொண்டவர் தேவிகா.
இது அவர் நடித்த முதல் படம் அல்ல; அதற்குமுன் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும், சகோதரி மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார்.
அந்தக் கால கட்டத்தில் மிக இளம் வயதிலேயே வலம் வந்த தேவிகா, திரைப்படத்தில் பங்கஜம் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டைப் பெற்றார். தேவிகாவின் மென்மையான முகபாவனைகள், அசால்டான வசன உச்சரிப்பு மற்றும் இயல்பான நடிப்புத்திறன் ரசிகர்களை ஈர்த்தது. பிரேம் நசீர், ராஜசுலோசனா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் இயல்பான நடிப்பில் திகழ்ந்த தேவிகா, அந்த படம் மூலமாகவே பல இயக்குநர்களின் கவனத்தை பெற்றார்.

No comments:
Post a Comment