Saturday, August 30, 2025

கெட்டு போன நிலத்தை 60 நாட்களில் மண் புழு தானே உருவாகும் அளவுக்கு திரும்ப பெறுவது எப்படி???...

 கெட்டு போன நிலத்தை 60 நாட்களில் மண் புழு தானே உருவாகும் அளவுக்கு திரும்ப பெறுவது எப்படி???...

20 வகையான விதைகளை கலந்து தோட்டத்தில் விதைத்தது, அவை முளைத்து 60 நாட்களில் மடக்கி உழ வேண்டும்... அவ்வாறு செய்தால் 50 வருடங்களாக கெட்டு போன நிலம் கூட இந்த 60 நாட்களில் மீண்டு விடும்..
20 வகையான விதைகள் ...
4 தானியங்கள்:
சோளம்
கம்பு
திணை
சாமை, கேழ்வரகு
4 பருப்பு:
பாசி பயிர்
உளுந்து
தட்ட பயிர்
கொள்ளு
துவரை, அவரை, மொச்சை
4 எண்ணெய் வித்து:
ஆமணக்கு
நில கடலை
எள்ளு
சூரிய காந்தி
4 வாசனை பொருட்கள்:
கடுகு
வெந்தயம்
மல்லி
சோம்பு
4 உர செடி:
பச்ச பூண்டு
அகத்தி
செனப்பு
நரி பயிர்
பனி பயிர்
இந்த 20 வகையான விதைகளை ஏக்கருக்கு 20 முதல் 25 கிலோ வீதம் கலந்து அவைகளில் பொடி வகைகளை மண் மற்றும் குப்பைகளுடன் சேர்த்து கொள்ளவும். நடுத்தர விதைகளை தனியாகவும், பெரிய விதைகளை தனியாகவும் பிரித்து கொண்டு 3 சுற்றுகளாக விதைத்தால் ஓவ்வொன்றும் முளைத்து வளரும். பாதி செடிகள் 60 நாட்களில் பூ வைக்கும். அந்த தருணத்தில் இச்செடிளை மடித்து திரும்ப அப்படியே மண்ணுக்கு உரம் ஆக்க உழுதல் வேண்டும். அவ்வாறு செய்த செடிகளை 10 நாட்கள் அப்படியே விட்டால் அவை மக்கி அந்நிலத்தை விவசாயம் செய்ய ஏற்ற நிலமாக மாற்றுகிறது..
தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.
உழவே தலை
பல்வேறு வகையான விதைகள்:
வெவ்வேறு விதைகளை விதைப்பதன் மூலம், நிலத்தில் பல்வேறு வகையான வேர் அமைப்புக்கள் உருவாகும். இது மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்தும்.
60 நாட்கள்:
பொதுவாக, 60 நாட்கள் என்பது பயிர்கள் ஓரளவுக்கு வளர்ந்து, மண்ணில் கரிமப் பொருட்களை சேர்த்து, மண் புழுக்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்கும் காலமாகும்.
உழுதல்:
உழுவதன் மூலம், மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கும், மேலும் விதைகளின் கழிவுகள் மற்றும் பயிர்களின் வேர்கள் மண்ணில் நன்கு கலக்கப்பட்டு, மண்புழுக்களுக்கு உணவாகும்.
மண்புழு உரம்:
இவ்வாறு, மண்ணில் மண்புழுக்கள் பெருகி, அவற்றின் கழிவுகள் இயற்கை உரமாக மாறி, நிலத்தின் வளத்தை அதிகரிக்கும்.
மண் புழு உரம் நிலமாகுதல்:
மண்புழுக்கள் மண்ணில் கரிமப் பொருட்களைச் சிதைத்து, சத்துக்களை மண்ணில் விடுவிப்பதால், மண் வளம் அதிகரிக்கும்.
சாகுபடி செய்யாத நிலம்:
சாகுபடி செய்யாத நிலத்தில், இந்த முறை மூலம் மண்ணின் வளம் அதிகரிக்கப்பட்டு, மீண்டும் விவசாயத்திற்கு பயன்படுத்த தகுதியானதாக மாற்றப்படும்.



No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்