Tuesday, August 5, 2025

30 july

 கனிமொழி அவர்களே! நீங்கள் ஆபரேஷன் சித்தூர் பற்றி விளக்க வெளிநாட்டுப் பயணத்திற்கான தூதுக் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டீர்களே! அப்போதே எனக்கு இதில் உடன்பாடு இல்லை என்று மறுத்திருக்கலாமே! அதை விட்டுவிட்டு பெருமையாகப் போய் சமாதான குழு விளக்கக் குழுவிலெல்லாம் கலந்து விட்டு வந்து இங்கே பஹல் காம் தாக்குதல் குறித்து நாடாளுமன்றத்தில் கூச்சல் போடுகிறீர்கள். ஏன் அப்போதே தூதுக்குழுவில் நான் இடம்பெற மாட்டேன் என்று மறுத்திருக்க வேண்டியதுதானே. கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்ற கதையாகவும் அல்லவா இருக்கிறது உங்கள் செயல்பாடு. இப்படித்தான் இருக்கிறது

இன்னும் இங்கே சிலர் சிங்கப்பூரில் குடியுரிமை கனடாவில் குடியுரிமை பெற ஆசைப்பட்டுக் கொள்கிறார்கள். அதற்கு முயல்கிறார்கள். இந்திய நாடாளுமன்றத்திலும் எம்பி ஆகவும்
இருந்து கொள்கிறார்கள். சோனியா காந்தி பாணியில் 1967-ல் ராஜீவ் காந்தியை திருமணம் செய்து 1983 வரை இந்திய சிட்டிசன் ஆகாமலே பிரதமர் இந்திரா வீட்டில் அமர்ந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு அவருக்கு கிடைத்தது இல்லையா! அது போலத்தான் இங்கு இருப்பவர்கள் சிலரின் நிலையும் இருக்கிறது. இவர்களெல்லாம் இந்தியாவில்தான் இருக்கிறார்கள்! இந்தியர்கள் தானே பிறகு எதற்கு தலைக்கு வாலையும் வாலுக்குத் தலையையும் காட்டுகிறார்கள். எதற்கு இந்த சந்தர்ப்பவாத இரட்டை நிலை. ப. சிதம்பரம் பேச்சு இந்தியாவுக்கு எதிராகவும் உள்ளது,

No comments:

Post a Comment

Mar 22