Saturday, October 25, 2014

மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு

மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு
-------------------------------------------------
மேற்குத் தொடர்ச்சி மலையையும், அமைதி பள்ளத் தாக்கையும் பாதுகாக்க மாதவ காட்கில், அதன்பின் கே. கஸ்தூரி ரங்கன் தலைமையில் குழுக்கள் அமைக்கப் பட்டன. இந்த குழுக்களின் அறிக்கையும் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்திடம் வழங்கப்பட்டு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்தது. இந்த அறிக்கைகளை அமல்படுத்தக் கூடாது என பல போராட்டங்களும், நீதிமன்றங்களில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன. மேற்குத் தொடர்ச்சி மலையில் 1,29,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இயற்கைச் சூழல் அமைந்துள்ளது. அதற்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதில் அரசு கவனமாக இருக்க வேண்டும் என்றும், 37 சதவீத பகுதிகளின் சுற்றுச் சூழல் மிகவும் கவனமாக பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் இந்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேரளாவில் கல்குவாரி நடத்துபவர்களும், இயற்கை வளங்களை சுரண்டுபவர்களும், மரங்களை வெட்டுபவர்களும், வனங்களில் மாளிகைகள் கட்டுபவர்களும் சுயநலத்திற்காக காட்கில், கஸ்தூரிரங்கன் அறிக்கைகளை எதிர்த்து போராடினர். தனிப்பட்டோரின் சுயநலத்தை கருத்தில் கொண்டு மன்மோகன் சிங் அரசு இந்த அறிக்கைகளை கிடப்பில் போட்டது. அதே நடவடிக்கையை மோடி அரசும் கடைப்பிடிக்கிறது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

                                     



இயற்கை என்பது ஒரு அமைப்பு. இயற்கையை சுரண்டவோ, அழிக்கவோ மானுடத்திற்கு உரிமை இல்லை. இயற்கையை சுரண்டுவதன் மூலம் மழை வளம், தூய்மையான காற்று போன்ற அருட்கொடைகளை இழந்து வருகின்றோம். யானைகள் போன்ற வன விலங்குகள் இயற்கை அழிக்கப்படுவதால் மக்களின் வசிப்பிடங்களுக்கு வலசைகள் மாறி வருகின்றன. மானுடம் இதை சிந்திக்க வேண்டும். மனித நேயத்தை எப்படி மதிக்கிறோமோ, அதேபோன்று இயற்கையையும் அதன் வளங்களையும் மதிக்க வேண்டும். டார்வின் கோட்பாடுகளை மனதில் கொண்டு இயற்கையை பேணி காக்க வேண்டும். இவற்றையெல்லாம் மனதில் கொண்டால் மேற்குத் தொடர்ச்சி மலை குறித்து காட்கில், கஸ்தூரி ரங்கன் அறிக்கைகளை ஆய்ந்து நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமானதாகும்.
-
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment

இதெல்லாம் கோவில்பட்டிக்கும் கரிசல் மண்ணிற்கும் வந்த சோதனை தான்.

ஆமாம்! சரிதான்! எனக்கும்  #கிரா விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!. 50 வருட பழக்கம் எல்லாம் இல்லை. நான் இடைச்செவலுக்கு சென்றதும் இல்லை. அவர் க...