Saturday, October 25, 2014

சென்னை வானொலி நிலையம்

சென்னை வானொலி நிலையம்
-------------------------------------------------
1930இல் ரிப்பன் கட்டடத்தில் துவக்கப்பட்ட சென்னை வானொலி நிலையம், 1938இல் இங்கு காட்டப்பட்டுள்ள எழும்பூர் மார்ஷல் சாலையில் உள்ள கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. இன்றைக்கு எழும்பூரில் உள்ள அந்த கட்டடத்தை செஞ்சிலுவை சங்கம் பயன்படுத்தி வருகின்றது. 1950களில் இலங்கை வானொலியில் விளம்பரத்தோடு ஒலிபரப்பிய திரைகானங்கள் தமிழக மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. இலங்கை வானொலியில் ஹமீது, அவருடைய சகோரர் ஹமீன் இருவரும் இணைந்து நடத்திய இந்த விளம்பர நிகழ்ச்சியை தமிழக பட்டி தொட்டி வரை கேட்கலாம். சென்னை வானொலி அந்தளவு வரவேற்பை பெறவில்லை.



சென்னை வானொலி நிலையம் 1967இல் விவிதபாரதி நிகழ்ச்சி மூலமாக விளம்பர நிகழ்ச்சிகளை நடத்த துவங்கியது. இன்றைக்கு தொலைக்காட்சிகள் அதிகமாக வந்ததால், அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சிகளை பலர் கவனிக்காமல் இருக்கின்றனர். வானொலி தரமான நிகழ்ச்சிகளை தர வேண்டும். பெரிய வானொலி பெட்டிகள், அதன்பின் டிரான்ஸிஸ்டர்கள், கையளவு டிரான்சிஸ்டர்கள், கிராமப்புறங்களில் பஞ்சாயத்து ரேடியோக்கள் என இருந்த அந்த கால மோகம் இன்றைக்கும் மனதில் மலரும் நினைவுகளாக உள்ளது.

No comments:

Post a Comment

இதெல்லாம் கோவில்பட்டிக்கும் கரிசல் மண்ணிற்கும் வந்த சோதனை தான்.

ஆமாம்! சரிதான்! எனக்கும்  #கிரா விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!. 50 வருட பழக்கம் எல்லாம் இல்லை. நான் இடைச்செவலுக்கு சென்றதும் இல்லை. அவர் க...