Thursday, March 24, 2016

பனைமரங்கள்

தூத்துக்குடி ,ராமநாதபுரம் ,திருநெல்வேலி ,போன்ற எட்டு மாவட்டங்களில் ஒரு கோடி பனைமரங்களுக்கு மேல் உள்ளன .விவசாயத்திற்கு அடுத்தபடியாக இத்தொழில் பல ஆண்டுகளுக்கு முன் நடை பெற்றது .இதன்பதநீர் பருவ காலம்  மாசி மாதம் முதல் ஆடி மாதம் வரையாகும் .இட்ட்தொழிலை நம்பி சுமார் 10 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன ..தினம் காலை,மதியம் ,மாலை என மூன்று வேளை பனை மரம் ஏறி உச்சியில் உள்ள பாலையை  நன்கு மிருதுவாக சீவி விட வேண்டும் .பனைமரத்தின் மட்டையில் கட்டி வைக்க பட்ட மன்களையத்தில் .பதநீர் சொட்டுசொட்டாக வடியும் .அதை காலை வேளையில் இறக்கி  அகண்ட அலுமினிய பாத்திரத்தில் ஊற்றி நன்கு பழுக்க காய்ச்சு வர்  .பின்னர் அக்கூலை தரையில் வைக்க பட்டிருக்கும் சிரட்டையில் ஊற்றுவர் .சிறிது நேரம் உணர்ந்தபின் சிரட்டையில் இருந்து பிரித்து எடுப்பார்கள் .பனங்கருப்பட்டி இருமல்,சளி ,நாள்பட்ட வியாதி ,புகைச்சல் ,டி .பி ,ஜீரன சக்தி ,என பல்வேறு நோய்களை தீர்க்க வல்லதாகும் .அதேபோல் ஒரே பனை பதநீரை 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் பருகினால் உடம்பில் எந்த நோயும் அண்டாது .தவிர எழுபிர்க்கு நல்ல வலுவை கொடுக்கும் .பனைமரத்தில் பதநீர் ,நுங்கு ,பனங்கருப்பட்டி ,பனங்கல்கண்டு ,பணங்கிளங்கு ,பனம்பழம் போன்ற பொருட்கள் கிடைக்கிறது .இந்தியா முழுக்க 5 கோடி  பனைமரம் உள்ளன .பனைமரம் தமிழக அரசின் மரமாகும் .தவிர பனைமரம் ஓடை,வரப்புகளில் நட்டினால் அரிப்பு ஏற்படாமல் இருக்கும் ..இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பனைமரம் இன்று கேட்பாரற்று அழிந்து வருகிறது .பனைமரங்களை  பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .பனையேறும் தொழிலாளர்களின் குழந்தைகள் கல்விக்கு சைகை வழங்க வேண்டும் .வேலை வாய்ப்பில் முன்னிரிமை வழங்க வேண்டும் .திற பனங்கருப்பட்டி கடந்த காலங்களில் 10 கிலோவிற்கு 2000/ விலை போனது .தற்போது 10 கிலோவிற்கு ரூபாய் 1000/ மட்டுமே விலை போகிறது .எனவே அரசு பணங்கருபட்டிக்கு நிரந்தர ஆதர விலை வழங்க வேண்டும் 10 கிலோவிற்கு குறைந்தபட்சம்  ரூபாய் 2000/-நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும் என கேட்டு கொள்கிறேன்

No comments:

Post a Comment

there was no one left To speak out for me

First they came for the Communists And I did not speak out Because I was not a Communist Then they came for the Socialists And I did not spe...