கோவை மாவட்டத்தில் கௌசிகா நதிநீர் பாதை சீரமைப்புத் திட்டம் தொடர் கோரிக்கையாக இருந்து வருகிறது. நரசிம்ம நாயக்கன் பாளையம் அருகே உள்ள குருடிமலை, கொன்னூத்து மலையில் உருவாகும் கௌசிகா நதி வண்ணாத்தன்கரை, தாளமடல் பள்ளம், தன்னாசிப்பள்ளம், பெரும்பள்ளம் போன்ற ஓடைகளில் இணைந்து இடிகரை, அத்திப்பாளையம், கோவில்பாளையம் வழியாக தெக்களூர், புதுப்பாளையம் அடைந்து திருப்பூர் மாவட்டம் சுல்தான்பேட்டையில் நொய்யலாற்றில் கலக்கின்றது. முன்பு வெள்ளபெருக்குடன் காணப்பட்ட கௌசிகா நதி, இன்றைக்கு மழை நீர் ஓடும் வடிகாலாக மாறிவிட்டது. இந்த நதி ஓரத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனித பண்பாட்டை தொல்லியல் துறையினர் ஆய்வுகள் செய்தனர். இப்போது புதர் மண்டியிருப்பதை நீர்வழிப் போக்குவரத்து பாதையாக மாற்றவேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்று இவ்வட்டார மக்கள் விரும்புகின்றனர். இந்த ஆற்றை அத்திக்கடவு-அவினாசி திட்டத்தோடு இணைக்கவேண்டும் என்ற கோரிக்கைகளும் உள்ளன. இதனால் சிறு குளங்கள், குட்டைகள் நிரம்பி நிலத்தடி நீர் பெருகும். 46 கிலோ மீட்டர் கொண்ட இந்த கௌசிகா நதி வழித் தடத்தை ரூ. 200 கோடியில் சீரமைத்தால் போக்குவரத்துப் பாதை 1800 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இதனால் 200 கிராமங்களுக்கு நீர் ஆதாரங்களும் கிடைக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
july 1
Good and deep meaningful aspects… @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...
-
நேற்று விடுதலைச் சிறுத்தைக் கட்சியினர் மதுவிலக்கு மாநாட்டை நடத்தியுள்ளனர். அதில் திமுகவும் கலந்து கொண்டது வேடிக்கை⁉️ திமுகவை அழைத்து மதுவிலக...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
#திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களே ———————————————————- காங்கிரஸ் தலைவர் மல்லிகா அர்ஜுன் கார்கே இன்னொரு மன்மோகன் சிங் என்று நான் twitter பதிவு ...
No comments:
Post a Comment