Monday, March 28, 2016

''தலைவரிடம் விடைபெற்றுக்கொள்ளவே வந்தேன்'' - அஞ்சாநெஞ்சன் அழகிரி.

பெரியார் இயக்கத்தின் தளபதியாக விளங்கிய அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்களின் நினைவுநாள் இன்று (28.03.1949) !

1948 ஆம் ஆண்டு ஈரோட்டில் திராவிடர் கழகம் நடத்திய மாநாடுதான் அவர் கடைசியாக பங்கேற்ற மாநாடு. அப்போது அவர் காசநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார்.மருத்துவ விஞ்ஞானம் வளர்ச்சி பெறாத காலகட்டம்.அந்த மாநாட்டில் பங்கேற்ற அழகிரி,
''என்னுடைய தலைவர் பெரியாரிடம் விடைபெற்றுக் கொள்ளவே இந்த மாநாட்டிற்கு வந்தேன்'' என கூறியபோது, கூட்டமே கண்ணீர்விட்டு அழுதது. மாநாட்டில் இருந்து விடைபெற்ற அழகிரி வீட்டிற்கு சென்று படுத்த படுக்கையாகி நோய்வாய்ப்பட்டார். 

ஜாதியை,பார்ப்பனீயத்தை எதிர்த்து சிம்மகுராய் முழங்கிய அழகிரியின் குரல் இன்றைக்கும் தேவைப்படுகிறது.

(தோழர் விடுதலைராஜேந்திரன் அவர்களின் வாட்ஸப் உரையிலிருந்து)

No comments:

Post a Comment

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️ ••••• இந்த இ.ந்.தி.யா தேர்தல்க் கூட்டணிகளின் விசித்திரங்களை  எவ்வாறு அணுகுவது என்று மிகச் சிறந்த பத்திரிகை...