Tuesday, January 16, 2024

திருவள்ளுவர் படம்

#திருவள்ளுவர்படம்
————————————
திருவள்ளுவர்கிமு2ஆம்நூற்றாண்டுக்கும் கிபி 8 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. சேலம் ஜில்லா காமாட்சிப்பட்டி பிறந்த வேணுகோபால் சர்மா 1959 இல் அன்றைய சென்னை (தமிழக) மாநில அன்றைய காங்கிரஸ் கல்வி அமைச்சர் பக்தவச்சலம் அரசாலும், மக்களாலும் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படத்தைவரைந்தவர். உண்மையாக வள்ளுவர் இப்படிதான் இருந்தார் என யாருக்கும் தெரியாது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே திருவள்ளுவருக்கு உருவம் கொடுக்கும் முயற்சிகள் துவங்கிவிட்டன.
அவ்வளதான்.
••••

ராஜ்பவன் கிண்டியில் இருந்து 17-2-1960 ஆண்டு வெளியான வாழ்த்து செய்தி. 

திரு வேணுகோபால் சர்மா அவர்கள் வரைந்த திருவள்ளுவர் ஓவியத்தை இந்திய தபால் துறை அஞ்சல் தலையாக வெளியிட ஒப்புமை வழங்கியதற்கு வாழ்த்து செய்தி வெளியிட்டார் அப்போதைய மெட்ராஸ் மாகாண கவர்னர் உயர்திரு பிஷ்ணுராம் மேதி அவர்கள்.

இந்த செய்தி குறிப்பு இன்னும் கவர்னர் மாளிகையில் கோப்புகளில் இருக்கும்.



#திருவள்ளுவர்படம்
#திருவள்ளுவர்தினம்
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
16-1-2024.


No comments:

Post a Comment

Mar 22