Monday, January 22, 2024

நிச்சயம், வாழ்வில் நிஜமுண்டு..! நிஜமில்லா வாழ்வை தவிர்த்து நிஜமான வாழ்வை வாழ்வோம்..!

இடது, வலது மேலும் நடிப்பு, பாசாங்கு இல்லா நடுநிலை என்றும் நிலைக்கும். வாழ்கை  இரண்டு பக்கம் அனைவருக்கும் இருக்கும்.  மாற்று கருத்து சொல்வதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. இன்றைய சமூக நிலையில் விமர்சனம் செய்வது எளிது.  நாம் நாமாக இருக்க வேண்டும். எதையும் கடந்து சொல்ல வேண்டும். இது அவ்வளவு எளிது அல்ல. Every one not perfect… but some extent with self respect and esteem….
••••

நான் 
எனும் கர்வம் மட்டும் 
இல்லையெனில்
அன்பின் 
சுயநல ஆட்டத்தில் 
எப்போதோ நான் தோற்றுப்போயிருப்பேன்

நான் 
எனும் கர்வம் மட்டும்
இல்லையெனில்
துரோகத்தின் விசம் தீண்டி 
எப்போதோ நான் இறந்திருப்பேன்

நான் 
எனும் கர்வம் மட்டும்
இல்லையெனில்
நம்பிக்கையின் பெயரில் 
எப்போதோ நான் கழுவிலேற்றப்பட்டிருப்பேன்

நான் 
நான் என்பதெல்லாம்
அகந்தைதான்
ஆயினும்
அதுதான் 
சமயங்களில்
என்னை 
வைராக்கியமாய் 
வாழச்செய்கிறது

-ரிஸ்கா முக்தார்Riska Mukthar

நிச்சயம், வாழ்வில் நிஜமுண்டு..! நிஜமில்லா வாழ்வை தவிர்த்து நிஜமான வாழ்வை வாழ்வோம்..!

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
22-1-2024.


No comments:

Post a Comment

ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu

#ஆந்திர  துணைமுதல்வர்  பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு  #Meeting with  AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...