காங்கிரசைத் தவிர்த்து விட்டு இந்திய கூட்டணிக்கு மேற்கு வங்கத்தின் முதல்வர் மம்தா பானர்ஜியைத் தலைமை தாங்கச் சொல்லுகிறார்கள்! அதை லாலு பிரசாத் யாதவ் ஆதரித்துள்ளார். சரத் பவார் இந்திய கூட்டணிக்கு காங்கிரஸ் தேவையில்லை என்ற வகையில் மௌனமாக அதற்கு சம்மதம் அளிக்கிறார்.பல மாநிலங்களைப் பொறுத்தவரையில் ராகுல் காந்தியின் காங்கிரஸ் தலைமை ஏற்கும் தகுதியை இழந்து விட்டது என்கிற மனநிலையில் இருக்கிறார்கள். இந்திரா காந்தியோடு காங்கிரஸ் முடிந்து விட்டது. போக அவர் காலத்திய பழி பாவங்கள் எல்லாம் இன்னும் இருக்கிறது. தமிழகத்தில் நெடுமாறன் போன்றோர் பலர் காங்கிரசை விட்டு நீங்கிய காலத்திற்குப் பிறகு தனது பாதுகாவலர்களாலேயே அவர் படுகொலை செய்யப்பட்டார். அந்த படுகொலையை இன்று வரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும் காங்கிரஸ் பல நல்ல தலைவர்களை நாளடைவில் இழந்துவிட்டது. அதுபோல ஈழத்தமிழர் விஷயத்தில் சோனியா குடும்பம் நடந்து கொண்டதும் தவறாகவே முடிந்தது. எல்லா வினைகளுக்கும் எதிர்வினைகள் இருக்கத்தான் செய்யும்! இதெல்லாம் இன்டியூஷன் தியரியைப் பொறுத்த அளவில் நடந்து முடிந்து போன விவகாரங்கள். இவற்றுக்கெல்லாம் இயற்கையாக பதில் சொல்லாமல் காங்கிரஸ் மீண்டும் இந்தியக் கூட்டணிக்கு தலைமை தாங்கும் என்கிற போது பல வகையான அதிருப்திகள் ஏற்பட்டிருக்கின்றன. வாரிசு என்கிற முறையில் கூட ராகுல் தேறுவாரா என்பது சந்தேகமாக இருக்கிறது!
Subscribe to:
Post Comments (Atom)
#*கள்ளுக்கடை* #*மதுவிலக்கு* #*drystate*
#*கள்ளுக்கடை* #*மதுவிலக்கு* #*drystate* —————————————— தமிழ்நாட்டில் மதுக்கடைகளைத் திறந்து இதுவரை அரசு நடத்தி வருவதில் ஏற்பட்ட தனிமனித உடல்...
-
நேற்று விடுதலைச் சிறுத்தைக் கட்சியினர் மதுவிலக்கு மாநாட்டை நடத்தியுள்ளனர். அதில் திமுகவும் கலந்து கொண்டது வேடிக்கை⁉️ திமுகவை அழைத்து மதுவிலக...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
#திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களே ———————————————————- காங்கிரஸ் தலைவர் மல்லிகா அர்ஜுன் கார்கே இன்னொரு மன்மோகன் சிங் என்று நான் twitter பதிவு ...
No comments:
Post a Comment