Saturday, May 10, 2025

இவருக்கு எம்ஜிஆருக்கு நெருக்கமானவர். இதனால் மற்றும் என்னால் பிரபாகரனை அறிமுகம்


 இவருக்கு எம்ஜிஆருக்கு நெருக்கமானவர். இதனால் மற்றும் என்னால் பிரபாகரனை அறிமுகம்

வருடம் 1983 என்பது மட்டும் நினைவுள்ளது. எந்த மாதம் எந்த தேதி என்பது தெரியவில்லை. விழுப்புரம் காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றயவர் பாசத்திற்குரிய அண்ணன் கொம்மினிவார் வேணுகோபால் நாயுடு, சொந்த ஊர் தற்போதைய கரூர் மாவட்டம் அய்யர்மலை அருகில் கோடங்கிப்பட்டியில் பிறந்து வளர்ந்தவர்.
அனுதினமும் இரவு உறங்கச் செல்லும் முன், தனது கட்டுப்பாட்டில் இருக்கும் ஏதோ ஒரு காவல் நிலையத்தை முன்னறிவிப்பு இன்றி சென்று பார்வையிட்ட பிறகே வீடு திரும்பி உறங்கச் செல்வார்.
அன்றும் அப்படிதான்… சற்றுத் தொலைவில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்கு இரவு 11.00 மணிக்கு திடீரென சென்றார். சார்பு ஆய்வாளர், தலைமைக் காவலர் மற்றும் சில காவலர்கள் இருந்துள்ளனர். செல்லில் ஒரு நபர் பேண்ட், முழுக்கைச் சட்டை, ஷூ சகிதம் கம்பிகளை இரு கைகளாலும் பிடித்தபடி நின்றிருந்தார்.
(DSP)காவல் துணை கண்காணிப்பாளரைப் பார்த்ததும் அத்தனை பேரும் விறைத்து நின்று சல்யூட் செய்தனர். செல்லில் இருந்த நபரைப்பற்றி SI & HC ஆகியோரிடம் விசாரித்தபோது, அவர் ஒரு வக்கீல் என்பதும் அன்று நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் ஒரு அமைச்சர் பற்றி அவதூறாகப் பேசியதாகவும், அந்த அமைச்சருக்கு தகவல் போனதால் உடனடியாக அந்த வக்கீலைக் கைது பண்ணி அடைக்கச் சொன்னதாக போன் வந்ததாகவும் ஏதேதோ DSP யிடம் கூறினர். FIR போட்ட பிறகு கைது செய்து அடைத்தீர்களா? எங்கே FIR ஐ காட்டுங்கள் என்றார் DSP. தலையைச் சொறிந்துகொண்டு நின்றனர் SI மற்றும் HC.
நான்சென்ஸ் எனத் திட்டியவாறே செல்லைத் திறந்து அந்த வக்கீலை அழைத்துவரச் சொல்லி விசாரித்த பிறகு விடுவித்தார் DSP. சார்..சார்.. அமைச்சர்… என புலம்பி உள்ளனர் SI & HC.
நாளை காலை 7.00 மணிக்கு என்னை கேம்ப் ஆபீஸ் வந்து பாருங்கள் என அவ்விருவரையும் கனல் கண்களோடு நோக்கி சொல்லிவிட்டு வீடு வந்து சேர்ந்தார் DSP.
மறு நாள் சரியாக காலை 7.00 மணிக்கு SI & HC இருவரும் கேம்ப் ஆபீஸில் ஆஜர். DSP அலுவலக கேம்ப் கிளர்க் அந்த இருவரிடமும் ஆளுக்கொரு கவரைக் கொடுத்து தபால் அனுப்புகைப் பதிவேட்டில் கையெழுத்து வாங்கிக் கொண்டார். “ஐயாவைப் பார்க்கனும்” என்றனர் இருவரும். “ஐயா உங்களை உடனே போகச் சொல்லிவிட்டார்” என்றார் கேம்ப் கிளர்க்.
கவர்களுக்குள் இருந்த கடிதங்களில், “முதல் தகவல் அறிக்கை”(FIR) இன்றி அந்த வக்கீலைக் கைது செய்து செல்லில் இரவில் வைத்திருந்ததற்காக உங்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது? என்பதற்கான விளக்கத்தை 24 மணி நேரத்திற்குள் தரவேண்டும் - என்ற மெமோ இருந்ததைப் படித்து புலம்பினர் அந்த SI & HC இருவரும்.
ஆனால் 24 மணி நேரத்திற்குள் DSP - நம் அண்ணா வேணுகோபால் அவர்கள்தான் விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு மாற்றப்பட்டார்.
சென்னையில் எம்ஜிஆருக்கு நெருக்கமானவர். இதனால் மற்றும என்னால் பிரபாகரனை அறிமுகம் ஆகி
பழகியவர
அப்படி யாருக்கும் வளைந்து கொடுக்காமல், பயப்படாமல், எந்த ஊருக்கு மாற்றல் செய்தாலும் நேர்மையுடன் பணியாற்றியவர் வேணுகாபால் நாயுடு அவர்கள்.
இன்று அதிகாலை சென்னையில் உள்ள தனது இல்லத்தில் தனது 88 வது வயதில் இயற்கை மரணம் அடைந்தார்.
ஆழ்ந்த இரங்கல்.

No comments:

Post a Comment

#*கள்ளுக்கடை* #*மதுவிலக்கு* #*drystate*

#*கள்ளுக்கடை* #*மதுவிலக்கு* #*drystate*  —————————————— தமிழ்நாட்டில் மதுக்கடைகளைத் திறந்து இதுவரை அரசு நடத்தி வருவதில் ஏற்பட்ட தனிமனித உடல்...