Thursday, May 8, 2025

#சிலயூடியூப்சானல்கள்

 #சிலயூடியூப்சானல்கள்

———————————————————
சமீப காலமாக பல ஊடகங்கள் எப்படி எல்லாம் ஆதரவு ஊடகங்களாக போகின்றன என்பதற்கு நேற்று எனக்கு ஒரு அனுபவம் ஏற்பட்டது.
பிரபல யூடியூப் சானலான கலாட்டா சானலிலிருந்து ஒரு பெண்மணி நேற்று 8-3-2025 நன்பகல் பின்நேரம் 1.29 ,என்னை அழைத்து. தனது பெயரை ரதி என சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்ட அவர் உங்கள் பேட்டி வேண்டும் என்றார், அது கூட பரவாயில்லை, அடுத்து அவர் சொன்னதுதான் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நீங்கள் திமுகவுக்கு ஆதரவாக பேசவேண்டும் என்று சொன்னார். நான் யார், என் அரசியல் பயணம் அனுபவம் என்ன? தெரியாமல் திமுகவுடன் எனது பயணம் ஏன் முடிந்தது, ஸ்டாலினையும் இன்றைய திமுகவையும் நான் ஏன் விமர்சிக்கிறேன் என்கிற அடிப்படை அரசியல் அறிவு கூட இல்லாமல் நீங்கள் திமுகவுக்கு ஆதரவாக பேச வேண்டும் என கேட்பது என்னவகை ஊடக அறம்.
சில மீடியா காரங்களுக்கு நைட் ஆனா டிப்பேட் நடத்தனும்., வேலை இல்லாத நாலு பேரை அழைத்து டிபேட் நடத்தனும். சில யூடியூப் சானல்கள் பேச யாரோ வேனும் என்ற நிலை.
அடிப்படை அரசியல் இன்றைய பல இளைய தலைமுறையினருக்கு இல்லாமலேயே ஊடகங்களுக்குள் வந்து விடுகின்றனர். அதனால் தான் செக்கு எது சிவலிங்கம் எது என்பது கூட தெரிவதில்லை, தெரிந்துக்கொள்வதிலும் ஆர்வம் காட்டுவதில்லை.
இப்படியான போக்கைத்தான் திமுகவும் அதன் பென் போன்ற அமைப்புகளும் பயன்படுத்திக்கொண்டு ஊடகங்களை ஆட்டுவிக்கிறார்கள் என்று பேச்சுகள் உள்ளன. என்ன செய்தி வரணும், திமுகவை எப்படி ஆதரித்து பேசவைக்கணும் என்றெல்லாம் இதுபோன்ற யூடியூப் சானல்களுக்கு கட்டளையாக வருகிறது என தகவல்கள் . இது உண்மை என்றால், எஜமானன் பேச்சை கேட்டு யாரிடம் என்ன பேசணும் என்பது கூட தெரியாமல் என்னிடமே வந்து திமுகவை ஆதரித்து பேச வேண்டும் என்று கேட்கும் அளவுக்கு உள்ளது. இப்படித்தான் விலை போயிருக்கும் தமிழ்நாட்டு ஊடகங்கள் பலவும் திமுகவிற்கு ஆதரவாகப் பேசச் சொல்லி எல்லோரையும் நிர்பந்திக்கின்றன என்பது இதன் மூலம் தெரிகிறது!
இன்றைய அரசியலை பேசணும் சார் இந்த இந்த சப்ஜக்ட் உள்ளது என்றுதான் யாரும் பேட்டிக்குமுன் பேசி பார்த்திருக்கிறேன். இது சமீப கால விநோதமாக அல்லவா இருக்கிறது. இன்னும் தேர்தல் நெருங்க நெருங்க என்னென்ன எல்லாம் நடக்குமோ?...
ஸ்கிரீன்ஷாட் உடன் இணைத்து இருக்கிறேன்! ஆதாரம் இன்றி எதையும் பேசுவது எனது வழக்கமுமல்ல! இந்த செய்தியை நேற்றே பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்தேன். எந்தக் காரணமும் இன்றி திமுகவினால் துரோகம் இழைக்கப்பட்டவன் நான்! மனசாட்சி இருப்பவர்களுக்குப் புரியும்! எப்படி எல்லாம் ஆழம் பார்க்கிறார்கள்! நல்லதுக்குக் காலமில்லை!
எங்கோ படித்த கவிதை நினைவில் வந்தது……..
அரசமரத்தின் தூரில்
எண்ணெய் வற்றி அணைந்த
ஒரு கிளியாஞ்சட்டி அமர்ந்திருக்கிறது
யாரோவொருவரின்
பிரார்த்தனை ஒளியை
ஏந்திக்கொண்டு
இலைகளில் சிலுப்புகிறது காற்று
அருகே
மடி குறைந்த மாடு
நிழலுக்குத் தங்கி அசை போடுகிறது
எரிந்து முடிந்த
ஊதுவத்திகளின்
புகை மணம் மிதந்தலைகிறது
எல்லோருக்குமான தாக
இருக்க வேண்டி
அங்கே
வணங்கிப் போயிருக்க வேண்டும்
யாராவது.
அதன் screenshot-screen capture ஆதாரம்.

No comments:

Post a Comment

#*கள்ளுக்கடை* #*மதுவிலக்கு* #*drystate*

#*கள்ளுக்கடை* #*மதுவிலக்கு* #*drystate*  —————————————— தமிழ்நாட்டில் மதுக்கடைகளைத் திறந்து இதுவரை அரசு நடத்தி வருவதில் ஏற்பட்ட தனிமனித உடல்...