Monday, February 24, 2020

டில்லி_சம்பவங்கள்

#டில்லி_சம்பவங்கள்
—————————
டில்லி  சம்பவங்கள்  கவலையைத் தருகின்றன.  அன்றைய பிரதமர் இந்திரா காந்தி படுகொலையின் போது, 1984 இல்  நடந்த கலவரத்தை நேரில்  பார்த்தவன்.  அன்று சீக்கியர்கள் பாதிக்கபட்டனர். அன்று டில்லி நகரமே எரிந்தது. அம்மாதிரி வேதனையான நிலைமை ஓர் போதும் திரும்பக்கூடாது.
அரசியல் கட்சிகள் மற்றும் சகலரும் சேர்ந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். வன்முறையால் அதிகம் பாதிக்கப்படப் போகிறவர்கள் இஸ்லாமியர்கள்தாம். 

1984இல் நடந்த கலவரத்தின் போது கூட  ஆர் எஸ் எஸ்  அமைப்பை கடுமையாக எதிர்த்த குஷ்வந்த் சிங் கலவரத்தின்  போது  துன்புற்ற சீக்கியர்களை ஸ்வயம் சேவகர்கள் எவ்வாறு பாதுகாத்தார்கள் என்று கூறியுள்ளார். அமைதியே நிலவட்டும். வன்முறை எதற்கும் தீர்வாகாது.

#ksrpost
25-2-2019.


1 comment:

  1. உண்மைதான். ஆனால் போராட்டத்தை மழுங்கடிக்க அரசே வன்முறையில் ஈடுபடுவதாகத்தான் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.

    தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
    இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக ஏழு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    ReplyDelete

ராஜாராயணனின் 29-4-1950 இல், 74 ஆண்டுகளுக்கு முன் தனது நண்பர் கம்யூனிஸ்ட் கட்சி தோழர் நாலாட்டின் புதூர் என். ஆர். சீனிவாசன் எழுதிய post card.

எழுத்தாளர்  *கிராஜாராயணனின் 29-4- 1950 இல், 74 ஆண்டுகளுக்கு முன் தனது நண்பர்  கம்யூனிஸ்ட் கட்சி  தோழர் நாலாட்டின் புதூர் என். ஆர். சீனிவாசன்...