Friday, January 10, 2025

தெலுங்கு நாட்டில் வழிபாட்டு முறைகள் :

 தெலுங்கு நாட்டில் வழிபாட்டு முறைகள் :

தென்னிந்தியாவின் ஒரு கிராமத்தில் காலராவோ, பெரியம்மையோ தாக்கி விட்டது என்று வைத்துக்கொள்வோம். இப்போது தெலுங்கு நாட்டின் ஒரு பின் தங்கிய மாவட்டத்தில், புகைவண்டியோ அல்லது பிராமணர்களின் ஆதிக்கமோ இல்லாத ஒரு கிராமம் என்று வைத்துக் கொள்வோம். அங்கே என்ன நடக்கும் என்று பார்ப்போம்.
ஒரு தெலுங்குக் கிராமம். இந்தக் கிராமத்தின் காவல் தெய்வம் பெத்தம்மா (பெரிய அம்மா) ஆகும். இந்த நோய் பரவுவது இந்த அம்மா கோபமாக இருக்கிறாள் என்று அர்த்தமாகும். எனவே அவளை அமைதிப்படுத்த வேண்டும். அதற்கு ஆகும் செலவிற்காக ஊர் முழுவதும் பணம் சேர்க்கப்படுகிறது, சில நேரங்களில், அந்த ஊரின் பணக்காரர் மொத்தச் செலவையும் ஏற்றுக் கொள்வார். இந்தத் திருவிழாவிற்கு ஒரு நல்ல நாள் குறிக்கப்படுகிறது. இந்தக் கிராமத்தில் அது வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்த ஒரு நாளாகும். ஊரில் உள்ள குயவர், பெத்தம்மா போன்று ஒரு களிமண் சிற்பம் செய்யப் பணிக்கப்படுகிறார். தச்சர் ஒரு மர வண்டி செய்ய, பலிக்கு ஒரு நல்ல எருமை தேர்ந்தெடுக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...