Tuesday, December 29, 2015

கடனாளியாக தமிழ்நாடு - இதிலிருந்து மீள முடியுமா?


இந்தியாவில் பல மாநிலங்களில் இன்றைக்கு பொருளாதார சரிவு ஏற்பட்டு, அரசு ஊழியர்களுக்கு மாத ஊதியமும் மற்றும் ஓய்வு ஊதியமும் வழங்க முடியாமல் தவிக்கின்றன. அந்த நிலைமை ஆளும் அ.தி.மு.க. அரசுக்கும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் பொருளாதார நிபுணர்கள் கருத்துக்கள் வெளியிட்டுள்ளனர்.

இன்றைக்கு தமிழகத்தின் மொத்தக் கடன் ரூ. 2,11,483 கோடியாகும். தனி நபர் கடன் சுமை ரூ.28,778. வட்டி உயர்வு மட்டும் ரூ.3,000 கோடி உள்ளது. இப்படி நிலைமை சென்றால் தமிழக அரசு திவாலாகும்.

பாண்டிச்சேரி அரசு சில ஆண்டுகளுக்கு முன்னால் இந்த நிலைமை வந்தபோது மத்திய அரசிடம் சிறப்பு நிதியை பெற்று கரையேறியது. அதேபோல பீகார் அரசும் இதை நிலையில் உள்ளது. கடன் ஒரு பக்கம், வளர்ச்சி திட்டங்கள் இல்லை. வெறும் அறிவிப்புகள்தான் உள்ளன.

இப்படியான தமிழக அரசின் அந்தரங்கங்கள் மக்கள் மன்றத்திற்கு தெரியவில்லையே? எப்படி எதிர்காலம் அமையுமோ என்பது கேள்விக்குறி தான்.

No comments:

Post a Comment

You'll be surprised by how consistently things will show up exactly as you need them to, and not a moment before. When it's time to act, the energy will come.

  You'll be surprised by how consistently things will show up exactly as you need them to, and not a moment before. When it's time t...