Saturday, December 12, 2015

Chennai rains

சென்னையை அழிவில் இருந்து தடுக்க என்ன செய்யலாம் என்பது குறித்து மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி "தி வயர்" இணையத்தில் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:

சென்னையில் தான் எல்லாம் என்ற கொள்கையை முதலில் மாற்ற வேண்டும். திருச்சிக்கு சட்டசபையை மாற்றலாம். 

அதேபோல கோவையை வர்த்தக தலைநகரமாக மாற்றலாம். 

தமிழகத்தின் ஐகோர்ட் தலைமையிடம் மதுரைக்கு இடம் பெயர்க்க வேண்டும். ஏற்கனவே அங்கு ஐகோர்ட் கிளை உள்ளது. 

முதல்வர், கவர்னர், தலைமைச் செயலகம், அமைச்சர்கள் மட்டுமே சென்னையில் இருக்கும்படி மாற்றியமைக்க வேண்டும்.

தென் ஆப்பிரிக்காவை இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். அங்கு தலைநகராக பிரிட்டோரியா உள்ளது. அங்குதான் அரசு அலுவலகங்கள் உள்ளன. அதேசமயம், நாடாளுமன்றம் கேப்டவுனில் இருக்கிறது. உச்சநீதிமன்றம் புளோம்போன்டனில் உள்ளது. வர்த்தக தலைநகராக ஜோஹன்னஸ்பர்க் விளங்குகிறது. ஆனால் எல்லாமும் ஒருங்கிணைக்கப்பட்டு அருமையாக இயங்குகின்றன. 
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

*1960 களில், எங்க காலத்துல SSLC எந்தப் பாடத்துலயும் நூத்துக்கு நூறு அவ்வளவு எளிதாக வாங்க முடியாது*. *கணிதத்தில் 90- 96 வரை கிடைப்பது அன்று பெரிய விஷயம். எனக்கு SSLC இல் Social Studies- History & Geography இல் Madras State first rank கிடைத்தது…

*1960 களில், எங்க காலத்துல SSLC எந்தப் பாடத்துலயும் நூத்துக்கு நூறு அவ்வளவு எளிதாக வாங்க முடியாது*. *கணிதத்தில் 90- 96 வரை கிடைப்பது அன்று ப...