Saturday, March 21, 2026

jan 8

 தேசபக்தை வீராங்கனை விடுதலை போராட்ட தியாகி பத்மஶ்ரீ அம்புஜம்மாள் அவர்களின் 127வது பிறந்தநாள் இன்று

கணீரென்ற குரலெடுத்து பாரதியாரின் பாடல்களைப் பாடி மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டியவர். ஆங்கிலேய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக அந்நியத் துணிகள் விற்கும் கடைக்கு முன்பாக மறியல் போராட்டம் நிகழ்த்தியதனால் வேலூர்ச் சிறையில் அடைக்கப்பட்டவர். சிறையில், சக போராளி தியாகிகளிடம் தான் கற்ற மொழிகளைப் பிறருக்குக் கற்றுக் கொடுத்தார். வை.மு. கோதைநாயகி, ருக்குமணி லட்சுமிபதி ஆகியோருடன் இணைந்து பெண்ணடிமைக்கு எதிராகப் போராடினார். காந்தியடிகளின் தத்து மகள் என்ற செல்லப் பெயர் பெற்றார். தனது தந்தையின் பெயரோடு காந்தியடிகளின் பெயரையும் இணைத்துச் ”சீனிவாச காந்தி நிலையம்” என்னும் தொண்டு நிறுவனத்தை அமைத்தார். #வந்தேமாதரம் #ஜெய்ஹிந்த் #VandeMataram #JaiHind #indianfreedomfighter #AzadiKaAmritMahotsav #MeriMaatiMeraDesh #IndianFreedomStruggle

No comments:

Post a Comment

ja 17