இந்த மேஜையில் கேரள பாஜக மாநிலத் தலைவருடன் கடைசியில் இருந்து உணவருந்துபவர் யார் என்று தெரிகிறதா? இவர்தான் குமணம் ராஜசேகரன். கேரள பாஜகவின் மாநில தலைவர்; பின்னர் ஆளுநராகவும் பணியாற்றியவர். அதுமட்டுமல்ல இப்போதும் அமைதியாக கட்சிக்காக உழைத்துக் கொண்டிருப்பவர்.
எவ்வளவு உயரிய பதவிகளை வகித்தாலும் சிறப்பாக பணியாற்றி தனக்கான காலம் முடிந்த பிறகு அமைதியாக ஒரு சாதாரண தொண்டனைப் போல மீண்டும் பணியாற்றும் தலைவர்களை பாஜகவில் மட்டுமே பார்க்க முடியும். கேரள பாஜக அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் பல அறிய வெற்றிகளை அடைந்தது. இருந்தாலும் அங்குள்ள யாரும் இதற்கு முன்னிருந்த தலைவர்களை அவதூறு செய்யவில்லை. தமிழகத்தில் மட்டும் ஒரு சில விலை போனவர்கள், இப்போது அடைந்து வரும் வெற்றிகளை கொண்டாடும் முகமாக, முந்தய தலைவர்களை அவதூறு செய்யும் அவல நிலை தமிழகத்தில் மட்டும் காணப்படுகிறது. கட்சி என்பது 100 மீட்டர் ரேஸ் அல்ல மராத்தான் ரேஸ். அதுவும் மராத்தான் ரிலே ரேஸ் என்று தான் கூற வேண்டும். அடுத்தடுத்து பல தலைவர்கள் பல தொண்டர்கள் ரத்தமும் வியர்வையும் சிந்தி உழைத்து கட்சியை வளர்த்து வருவார்கள். எவ்வளவு கடினமான மாநிலமாக இருந்தாலும் என்றாவது ஒரு நாள் வெற்றி நிச்சயம்.
Subscribe to:
Post Comments (Atom)
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
My colum on Katchatheevu published today’s (7-6-2025)Pioneer - New Delhi edtion #Katchatheevu - K.S. Radhakrishnan Prime Minister Modi an...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
No comments:
Post a Comment