பிடித்திருக்கிறது
தன்னைத்தானே கவனித்துக்கொள்பவர்களை
குரல் உயர்த்தாமல் கோபத்தை வெளிப்படுத்துபவர்களை வெற்றிகளில் கர்வம் கொள்ளாதவர்களை விமர்சனங்களைக் கண்டுகொள்ளாதவர்களை முகத்திற்கு நேராய் பொய் சொல்லாதவர்களை உவப்பில்லா இடத்திலிருந்து வேகமாக வெளியேறுபவர்களை பிடித்திருக்கிறது அத்தனைக்குப்பின்பும் கண்களைத் துடைத்தப்படி வாழ்வோடுப் போராட சிறு புன்னகையோடு மீண்டும் மீண்டுமாய் தயாராகும் என்னைசமயங்களில் எனக்கு அவ்வளவு பிடித்திருக்கிறது
No comments:
Post a Comment