Friday, December 11, 2015

Farmers suicides

அதிர்ச்சித் தகவல் மகாராஷ்டிராவில் 11 மாதத்தில் 3 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை

மும்பை, டிச. 11 -மகாராஷ்டிர மாநிலத்தில், கடந்த ஜனவரி 1 முதல் டிசம் பர் 7 வரையி லான 11 மாதத் தில் மட்டும் சுமார் 3 ஆயி ரம் விவசாயி கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். குறிப்பாக மரத்வாடா பகுதியில் மட்டும் ஆயிரத்து 24 பேர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. புதிய பொருளாதாரக் கொள்கை அமல்படுத்தப்பட்ட பிறகு, மத்திய ஆட்சியாளர்களால் விவசாயிகள் நலன் முற்றிலுமாக புறந்தள்ளப்பட்டு வருகிறது. வறட்சி மற்றும் பருவம் தவறிய மழை ஒருபக்கமும், வேளாண் விளைபொருளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காதது, உரம், பூச்சி மருந்துகளின் விலை உயர்வு, விவசாயத்திற்கான மானிய வெட்டு மறுபுறமுமாக விவசாயிகளை துயரத்தின் விளிம்பிற்குத் தள்ளியுள்ளது. இதனால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது ஆண்டுக்காண்டு அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா மற்றும் ஆந்திராவில் விவசாயிகள் அதிக அளவில் தற்கொலை செய்து கொண்டு வரு கின்றனர். கர்நாடக மாநிலத்திலும் அண்மைக் காலமாக விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் நடப்பு ஆண்டின் 11 மாதங்களில் மட்டும் சுமார் 3 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில் மரத்வாடா பகுதியில் மட்டும் 1024 பேர் தற்கொலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். கடந்த ஆண்டு இந்த பகுதியில் 569 பேரும், அதற்கு முந்தைய 2013ம் ஆண்டில் 207 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment

*You are in charge of taking care of yourself*, strive to make everyday Happy.One simplest ways to stay happy is letting go of the things that makes you sad.

*You are in charge of taking care of yourself*, strive to make everyday Happy.One simplest ways to stay happy is letting go of the things th...