Sunday, April 24, 2016

ஈழப் பேச்சுக்கள்

ஈழம் மலரும் என்று தேர்தல் களத்தில் ஊறுகாய்த் துண்டைப் போல அவ்வப்போது சொல்லிக்கொண்டிருப்பது வாடிக்கையாகிவிட்டது. ஈழத்தைத் தெரியாதவர்கள் எல்லாம் சினிமா பாணியில் வசனங்கள் பேசுவதை நிறுத்திக்கொள்வது நல்லது. ஈழம் என்பது தியாகம், அர்ப்பணிப்பு, போர்க்களம் என்ற நிலையில் ஏற்படுவது. பொதுக்கூட்ட மேடைகளில் வெற்றுப் பேச்சால் ஏற்படுவதில்லை. எதார்த்தத்தை பேசுங்கள். ஈழம் ஒன்றும் உடம்பில் அரிப்பு எடுக்கும்போது சொறிந்துகொள்ளும் நீண்ட சீப்பை போன்றதல்ல. அரசியலில் எல்லாமே வேஷம் என்று நிரூபித்துவிடாதீர்கள். தீதும் நன்றும் பிறர் தர வாரா! ஈழம் ஒன்றும் நீங்கள் நினைக்கின்ற கடைச் சரக்கல்ல. தமிழர்களின் உரிமை கீதம். தகுதி, உரிமையின் காரணமாக இதை சொல்ல வேண்டியது என்னுடைய கடமை. 

No comments:

Post a Comment

தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம்.

  தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம். We are eagerly awaiting whoever comes to the leader's house,...