
அது வருமாறு:
"வடக்கு அயர்லாந்து சட்ட சபைக்கு எதிர் வரும் மே 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அடியேனுக்கு ஓட்டு போட வாக்குரிமை தகவல் வந்துள்ளது.
ஆச்சரியம் என்னவென்றால் இங்கே தேர்தல் நடைபெறுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை, சுவரொட்டிகள், பதாகைகள், போடுங்கம்மா ஓட்டு என்ற மைக் செட் கதறல்கள் இல்லை.

பொது இடங்களில் அரசின் அனுமதி பெற்று சிறு கூட்டங்கள் நடத்துகிறார்கள். ஒவ்வொரு பகுதியில் இருக்கும் சமூக மன்றங்களில் இது பற்றிய விவாதங்களை முன்னெடுக்கிறார்கள். ஊடகங்களில் வாக்காளர்கள் நேரிடையாக கலந்து கொண்டு விவாதம் செய்கிறார்கள்.
இது தவிர பிரச்சார துண்டுகளை தபாலில் அனுப்புகிறார்கள். நேற்று என் வீட்டு முகவரிக்கு தபால் மூலம் பிரச்சார துண்டு சீண்டுகள் அனுப்பப்பட்டு இருந்தது. அதன் புகைப்படங்களை இங்கு இணைத்துள்ளேன்.

இந்த பிரச்சார துண்டு சீட்டில், வேட்பாளர்கள் தங்களது தொடர்பு எண், மின்னஞ்சல், டிவிட்டர், முகநூல் என அனைத்து தகவல்களையும் தந்துள்ளனர்.
தமிழகத்தை பொறுத்த வரை, கடந்த மூன்று மாதங்களாக சமூக வலை தளங்களில் நம்மவர்கள் முன்னெடுக்கும் பிரச்சார உத்திகள் அருவருப்பின் எல்லையை தாண்டுபவை. தனி நபர் தாக்குதல், வாக்குக்கு பணம் கொடுத்தல், எதிர் கட்சிகளுக்கு முறையான தேர்தல் பரப்புரை உரிமை இல்லாமை என அடுக்கி கொண்டே போகலாம்.
வெளிநாடுகளைப் போல் நமது தேர்தல் பிரச்சாரங்கள் பொதுமக்களுக்கும், பொதுசொத்துகளுக்கும் சேதமின்றி நவீன வடிவில் மாறினால் நன்றாக இருக்கும்."
-----



எளிமையான, நேர்மையான தேர்தல் பிரச்சார யுக்திகள் தமிழகத்தில் வரவேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமாகும். அந்த தேர்தல்தான் உண்மையான, நேர்மையான தேர்தல் என்று கருதப்படும்.
No comments:
Post a Comment