Sunday, November 6, 2016

மேற்குமலைத்தொடர்

மேற்குமலைத்தொடர்:

-----------------------

மேற்குமலைத்தொடர் பாதுகாப்பை வலியுறுத்தி ஆறு மாநிலங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக பல ஆண்டுகளாக நடைபெற்றுவரும் தொடர் செயல்பாடுகளை நாம் அறிவோம் . 

அதன் விளைவாக அமைக்கப்பட்ட மாதவ் காட்கில் குழு , கஸ்தூரிரங்கன் குழு ஆகியவற்றின் பரிந்துரைகள் நமது அரசுகளால் கவனிக்கப்படாது புறந்தள்ளப்பட்டுள்ளன. இச்சூழலில் நாம் அடுத்து செய்யவேண்டியது குறித்து கலந்துரையாட இம்மலை பாதுகாப்பு இயக்கத்தின் முன்னோடிகளான திரு.குமார் கலானந்த்  மணி, திரு.பாண்டுரங்க ஹெக்டே ஆகியோர் நாளை ( ஞாயிறு ) கோவைக்கு வருகைதர உள்ளனர் . 

நாளை (06.11.2016) காலை 10.30 மணிக்கு ஜி.டி. மெட்ரிகுலேசன் மேனிலைப் பள்ளியில் ( மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் , கோவை ) மலையின் பாதுகாப்பிற்கான கருத்துகளை பதிவு செய்ய கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது.


#மேற்குமலைத்தொடரை பாதுகாக்காநாம் இணைந்து வலியுறுத்துவோம்.

No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...