Tuesday, November 29, 2016

சேலம் உருக்காலை

மத்திய உருக்குத்துறை இணை அமைச்சர் விஜய் தியோ சாய் அவர்கள் 28/11/2016 அன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக  சேலம் உருக்காலையை தனியாருக்கு அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார் .

ஆனால் சில நாட்க்களுக்கு முன்பு மத்திய கனரகத்துறை அமைச்சர் மஹாரத்தினம் அந்தஸ்த்து பெற்ற சேலம் உருக்காலையை தனியாருக்கு வழங்கும் திட்டம் எதுவுமில்லை என்று சென்னையில் அறிவித்துவிட்டு சென்றார்  . அதற்கு முரணாக இந்த ஆலையை தனியாருக்கு வழங்க கமுக்கமாக திட்டமிட்டது வெளியே வந்துவிட்டது .

ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் லாபம் ஈட்டும் இந்த ஆலையை தனியாருக்கு தாரைவார்ப்பதற்க்கு என்ன காரணம் என்று தெரியவில்லை ! 

#சேலம்இரும்பாலையை மத்திய அரசிடம் போராடி பெற்றோம் தமிழகத்தின் உரிமை பறிபோகிறது !
-கே.எஸ் . இராதாகிருஷ்ணன்
29-11-2016
#ksradhakrishnanposting
#ksrposting

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...