Friday, February 1, 2019

(பாஞ்சாலி சபதம்)

கண்ணைப் பறிக்கும் அழகுடை
யார் இளமங்கையர் - பல
காமரு பொன்மணிப் பூண்கள்
அணிந்தவர் தம்மையே
மண்ணைப் புரக்கும் புரவலர்
தாம் அந்த வேள்வியில் - கொண்டு
வாழ்த்தி அளித்தனர் பாண்டவர்க்கே, எங்கள் மாமனே!
எண்ணைப் பழிக்கும் தொகையுடை
யார் இளமஞ்சரைப் - பலர்
ஈந்தனர் மன்னரிவர் தமக்
குத் தொண்டியற்றவே
விண்ணைப் பிளக்கும் தொனியுடைச்
சங்குகள் ஊதினார் - தெய்வ
வேதியர் மந்திரத்தோடு பல்
வாழ்த்துகள் ஓதினார்.

- பாரதி (பாஞ்சாலி சபதம்)
காமரு - மிக விரும்பத் தகுந்த
புரக்கும் புரவலர் - ஆளும் மன்னர்கள்
இளமஞ்சர் - இளம் ஆண்கள் அதாவது வாலிபர்கள்

No comments:

Post a Comment

*Being happy and joyful doesn't mean everything is perfect; it means you've learned to see the beauty in bad. Don't wait for things to get easier, simpler, better*.

*Being happy and joyful doesn't mean everything is perfect; it means you've learned to see the beauty in bad. Don't wait for thi...