Thursday, February 28, 2019

நீர்க்குமிழி போன்று...... இதுதான் வாழ்கை



————————————————-
உன்னுடைய மரண நேரத்தில் சஞ்சலப்படாதே....!!

உன்னுடைய இறத்துப்போன உடம்பிற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படாது....!!

உற்றார் உறவினர்கள் உனக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்வர்.....!
1.உனது ஆடைகளை களைவர்.
2.குளிப்பாட்டுவர்.
3.புது துணி அணிவிப்பர்.
4.உன்னுடைய வீட்டை விட்டு வெளியாக்குவர்.
5.சுடுகாடு என்ற புதிய வீட்டிற்கு எடுத்துச் செல்வர்.
6.உனது கூட வரும் பலர்.
7.உன்னை அடக்கம் செய்வதில் அல்லது எரிக்க குறியாக இருப்பர்.
8.உன்னுடைய பொருட்கள் உன்னை விட்டும் பிரிக்கப்படும்
* உன்னுடைய திறப்புகள்
*புத்தகங்கள்
*பைகள்
*செருப்புகள்

•உறுதியாக விளங்கிக்கொள்
•.உனது பிரிவால் உலகம் கவலை படாது
•பொருளாதாரம் தடைப்படாது
•.உன்னுடைய உத்தியோகத்தின் வேலைக்கு வேறொருவர் வருவார்
•.உனது சொத்து வாரிஸிற்கு போய்விடும்
•அந்த சொத்திற்கு உன்னிடம் கேள்வி கேட்கப்படும்

நீ மரணித்தவுடன் முதலில் செல்வது உனது பெயரை......

உனது குடும்ப கெளரவம்,பட்டம், பதவி உன்னை ஏமாற்றி விட வேண்டாம்

உன்னைப்_பற்றிய_கவலை -3 பங்காக்கப்படும்
1.உன்னை அறிந்தவர்கள் சொல்வார்கள்....பாவம் என்று.
2.நண்பர்கள் சில தினங்களுக்கு உன்னை நினைப்பர்
3.உன் குடும்பத்தினர் சில மாதங்கள் கவலைபடுவர்
4.மக்களுடன் உன்னுடைய தொடர்பு முடிந்து விட்டது.
5.உன்மையான உனது வாழ்க்கை இப்போது தான் ஆரம்பம்.மறுமை

அப்போது உன்னை_விட்டும்_நீங்கியது
1.உயிர் 
2.சொத்து
3பிள்ளைகள்
4.மனைவி/கணவன்.

எனவே,
நல்லதை சொல்
நல்லவைகளை சிந்தனை செய்
நல்ல செயல்கள் செய்.
கெடுதல் செய்யாதே

என் மரணம் ஏற்பட்ட  பிறகு நீங்கள் என் உறவுகளையும் சொந்தங்களையும் சந்திக்க வருவீர்கள். ஆனால் அதை நான் பார்க்க போவதில்லை. ஏன், நான் இருக்கும் போதே வருவீர்களானால் மகிழ்ச்சி தானே.  என் மரணம் ஏற்பட்ட  பிறகு நீங்கள் என் தவறுகளையும் குற்றங்களையும் மன்னித்து விடுவீர்கள். ஆனால் அதை நான் பார்க்க போவதில்லை. ஏன், நான் இருக்கும் போதே மன்னித்து விடுவீர்களானால் மகிழ்ச்சி தானே.

மரணம் ஏற்பட்ட  பிறகு நீங்கள் எனக்கு மரியாதை செய்வீர்கள். என்னை பற்றி நல்ல விஷயங்களை பேசுவீர்கள். ஆனால் அதை நான் கேட்கப் போவதில்லை. ஏன், நான் இருக்கும் போதே சொல்வீர்களானால் மகிழ்ச்சி தானே.

என் மரணம் ஏற்பட்ட  பிறகு, இந்த மனிதன் இன்னும் கொஞ்ச காலம் நம்மோடு இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என  நீங்கள் நினைக்கலாம்.  அதனால் நாம் இருக்கும் போதே உறவுகளை கொண்டாடினால் மகிழ்ச்சி தானே.

அதனால் தான் சொல்கிறேன். காத்திருக்க வேண்டாம். சில சமயங்களில் காத்திருத்தலில் காலமே முடிந்து விடுகிறது.

ஆகையால் உறவுகளை கொண்டாடுங்கள், இப்போதே  மன்னித்து விடுங்கள். இப்போதே மன்னிப்பு கேளுங்கள்.

மனம் ஆசைகளினூடே அல்லாடிக்கொண்டே இருக்கும்.  வாழ்க்கை நம்மிடையே வாழ்ந்து விட்டு போய் விடும். நாம் வாழ்வது எப்போது ?
#ksrpost
28-2-2019.

No comments:

Post a Comment

*Being happy and joyful doesn't mean everything is perfect; it means you've learned to see the beauty in bad. Don't wait for things to get easier, simpler, better*.

*Being happy and joyful doesn't mean everything is perfect; it means you've learned to see the beauty in bad. Don't wait for thi...