Friday, February 17, 2023

#செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் Central Institute of Classical Tamil)

#செம்மொழித் தமிழாய்வு நிறுவனம்
Central Institute of Classical Tamil
————————————
இன்று (17-2-2023) சென்னையில் (பெரும்பாக்கம்)  செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (செம்மொழித் தமிழ் உயராய்வு )மையத்துக்கு (Central Institute of Classical Tamil)  பணி நிமித்தமாக சென்று  அதன் இயக்குநர்  பேராசிரியர் - முனைவர் இரா. சந்திரசேகரனை சந்தித்தேன்.

இந்த  நிறுவனம்,தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக இந்தியக் கல்வி அமைச்சகத்தின் (தலைவர் கலைஞர் காலத்தில்)கீழ் அமைக்கப்பட்ட ஒரு ஆய்வு நிறுவனமாகும். இந்திய அரசால் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட பின்பு, 2006, மார்ச்சு முதல் 2008, மே 18-தேதி வரை மைசூரிலுள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் (Centre of Excellence for Classical Tamil - CECT) என்னும் பெயரில் செயற்பட்டுவந்தது. அதன் பின்னர், இந்நிறுவனம் 2008 மே 19-ஆம் தேதி முதல் சென்னையில் இயங்கிவருகிறது. இந்த மையத்தின் வழியாகத் தமிழ் மொழி வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பொ.ஊ. 600-இக்கு முந்தைய காலத்தைச் செவ்வியல் காலமாகக் கொண்டு பண்டைத்தமிழ்ச் சமூகம் பற்றிய ஆய்வை நிகழ்த்தும் வகையில் இது நிறுவப்பட்டது. பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் அனைத்துக் கூறுகளையும் வெளிப்படுத்தும் வகையில் ஆவணப்படுத்துவதையும் பாதுகாப்பதையும் இந்நிறுவனம் தன் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இப்போது, பெரும்பாக்கத்தில் புதிதாக வாளாகம் அமைத்து அதை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

கே.எஸ். இராதா கிருஷ்ணன்.
K.S.Radhakrishnan.

#KSR_Post
17-2-2023.


No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...