Thursday, June 12, 2025

இந்தியாவில் முடியாட்சி வீழ்த்தப்பட்டு தேர்தல் ஜனநாயகம் வந்தப்பின்னர்

 இந்தியாவில் முடியாட்சி வீழ்த்தப்பட்டு தேர்தல் ஜனநாயகம் வந்தப்பின்னர், ஆணை, உத்தரவு போன்ற மன்னராட்சி கால வார்த்தைகளை கட்சிகள் 1990 வரை தவிர்த்து வந்தன.

கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ், பாஜக, சுதந்திரா, பிஎஸபி - எஸ எஸ்பி சோஸிலிஸட்கள,திமுக, அதிமுகவில் எம்ஜிஆர் காலம் வரை இதுபோன்ற வார்த்தைகள் இருந்ததில்லை, ஜெயலலிதா காலத்தில் எனது ஆணைக்கிணங்க, உத்தரவுக்கிணங்க என்ற வார்த்தைகள் புதிதாக வந்தன.
அதன்பின்னர் சமீப காலமாக திமுகவையும் தொற்றிக்கொண்டது, எனது ஆணைக்கிணங்க, எனது உத்தரவுக்கிணங்க என போட ஆரம்பித்ததும், தற்போது புதிதாக முளைத்த கட்சியிலும் எனது ஆணைக்கினங்க, என் உத்தரவுப்படி என கட்சி தலைமைகள் போட ஆரம்பித்துள்ளனர்.
தேர்தல் ஜனநாயகத்தில் மக்களாட்சியை, வாக்குகளை நம்பி அரசியல் செய்யும் இவர்கள் கட்சியில் மட்டும் ஆணை, உத்தரவு என அறிக்கைகள் வருகிறதே.
இது என்ன மன்னர் ஆட்சி காலமா? கட்சி நடத்துகிறீர்களா ஆட்சி அரியணை அதிகாரம் செய்கிறீர்களா? இதில் மன்னராட்சி என விமர்சனம் செய்துக்கொண்டே ஆணை, உத்தரவுன்னு அறிக்கை வருகிறது கேலிக்கூத்தாக அல்லவா இருக்கிறது.
சகஜமாகி விட்டது.

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...