Tuesday, January 1, 2019

ஆங்கில வருடத்தின் இறுதி நாளன்று.....



————————————————-
வாழ்க்கையின் யதார்த்தங்களை புரிந்து 
கொள்ளும் போது தான், வாழ்க்கையில்
நமக்கு பிடிப்பு உண்டாகும், வாழ்வதன்
தேவையும்  நமக்கெல்லாம் புரிய வரும்....
வாழும் போதே மகிழ்ச்சியாய் வாழ்ந்து
விடுங்கள், ஏனெனில் இங்கு மறு ஒத்திகைகள் கிடையாது.

*******
சேறென்று தெரிஞ்சதால் 
மிதிக்காது ஒதுங்கினலும்....
ஒதுங்கிய கால்களின் சில இடங்களை சில சேறுகள் வலிந்து ஒட்டிக்கொள்ளகின்றன.....
அது போலவே கவலைகள,ஆற்றாமை,
வேதனைகள் எவ்வளவு வல்லமை இருந்தாலும் காரணம் இல்லாமல் வந்து  நிலைக்குலைய 
செய்கிறது.
ஆனால் இதுவும கடந்து விடும். 
 
*******
ஆட்சி அதிகார வர்க்கம் என எல்லா இடங்களிலும் தான்..
எல்லாம் கையில் இருக்குன்னு
திறமையானவங்களை கொண்டாட
தெரியாமல் தொலைச்சுட்டு;
ஆட்சியோ,வேலையோ, தொழிலோ
நேர்த்தியா இருக்கணும்னு
எதிர்பார்த்தா எப்படீ..? எந்த போராட்டம் நடத்தி என்ன பலாபலன்?

*****
அடி, உதை, தாக்கு,வெட்டு என்பதை கோஷமாக்குபவர்கள்,
கற்க, நல்லதை தேடு
என்பதையும் கோஷமாக்க 
ஏன் தவறி விட்டார்கள்?

#KSRadhakrishnanpostings 
#KSRPostings
K S Radhakrishnan
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
31/12/2018.
(படம் -வாரணாசி கங்கை நதி  தீரம் )

No comments:

Post a Comment

Lost on Me by Veronica Raimo and translated by Leah Janeczko Longlisted for the International Booker Prize 2024

Lost on Me by Veronica Raimo and translated by Leah Janeczko Longlisted for the International Booker Prize 2024 Deliciously enjoyable' K...