Friday, May 2, 2025

#நெல்லைசீமைஆதிச்சநல்லூர்நாகரிகம்தான்

 #நெல்லைசீமைஆதிச்சநல்லூர்நாகரிகம்தான் தமிழகத்தின் முற்பட்ட நாகரிகம் என்று சொல்லிக் கொள்ளும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களே!


நீங்கள் இன்றைய கீழடி அகழாய்வுக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவத்தை ஏன் ஆதிச்சநல்லூருக்கு கொடுக்க மாட்டேன் என்கிறீர்கள்! கீழடி அகழாய்வு அதன் நாகரீகம் யாவும் இன்றைய அளவில் முக்கியமானது தான் அதற்கு யாரும் மறுப்பு சொல்லவில்லை! தமிழ் அறிஞர் வையாபுரி பிள்ளை அவர்கள் ஆதிச்சநல்லூர் திராவிட பொருநை ஆற்றின் நாகரிகம்தான் முதன்மையான்து என்கிறார் .

ஆனால் காலத்தால் முந்தி தமிழரின் பல்வேறு தொல்பெருமைகளை வகையினமாக நிரூபித்த ஆதிச்சநல்லூர் ஆய்வு முக்கியமானது இல்லையா?அது
தொடர்ந்து நடத்தப்படாமல் ஒத்திவைத்து அல்லது மந்தமாக நடத்தப்பட்டுக் கொண்டிருப்பது ஏன் இதற்கு நீங்கள் பதில் சொல்லவேண்டும்!

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost


No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்