Thursday, November 24, 2022

மலரே குறிஞ்சி மலரே
மலரே குறிஞ்சி மலரே



மலரே குறிஞ்சி மலரே
மலரே குறிஞ்சி மலரே

தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்

மலரே குறிஞ்சி மலரே

யார் மடி சுமந்து
தான் பிறந்தாலும்
தாய் மடி மறந்து
தலைவனை சேரும்
பெண்ணென்னும் பிறப்பல்லவோ

கொடி அரும்பாக
செடியினில் தோன்றி
கோவிலில் வாழும் தேவனை சேரும்
மலரே நீ பெண்ணல்லவோ

நாயகன் நிழலே
நாயகி என்னும்
காவியம் சொல்லி கழுத்தினில் மின்னும்
மகளே உன் திருமாங்கல்யம்

தாய் வழி சொந்தம்
ஆயிரம் இருந்தும்
தலைவனின் அன்பில் விளைவது தானே






உறவென்னும் சாம்ராஜ்ஜியம்

தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்

மலரே குறிஞ்சி மலரே

பாடிடும் காற்றே
பறவையின் இனமே
பனி மலைத்தொடரில்
பாய்ந்திடும் நதியே
ஓடோடி வாருங்களே

பால் மனம் ஒன்று
பூ மணம் ஒன்று
காதலில் இன்று
கலந்தது கண்டு

நல்வாழ்த்து கூறுங்களே

தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்

மலரே குறிஞ்சி மலரே

மலரே குறிஞ்சி மலரே



No comments:

Post a Comment

If you don’t leave your past in the past, it will destroy your future.

  _If you don’t leave your past in the past, it will destroy your future. Live for what today has to offer,not for what yesterday has taken ...