Sunday, November 13, 2022

Today is the death centenary of Sankaradas Swamigal..a pic of the legendary playwright (seen sitting on the right) along with a few other famous drama artistes of the early 20th century..

Today is the death centenary of Sankaradas Swamigal..a pic of the legendary playwright (seen sitting on the right) along with a few other famous drama artistes of the early 20th century.. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
  #நாடாகத்_தந்தை_திரு_சங்கரதாசசாமி
    நினைவுநாள் இன்று 13 நவம்பர் 1922.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
       
#தவத்திரு சங்கரதாச சுவாமிகள் (செப்டம்பர் 7, 1867 - நவம்பர் 13, 1922) 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழ் நாடக உலகின் தனிப்பெரும் தகைமையர்களாக விளங்கிய சிலருள் குறிப்பிடத்தக்கவர். கூத்து மரபிலிருந்து உருவாகி வளர்ந்த தமிழ் நாடக அரங்கம், பெட்டி அரங்க (Proscenium) மரபிற்கேற்ப உருப்பெற்றது சங்கரதாச சுவாமிகள் காலத்தில்தான். தமிழ் நாடகத் தலைமையாசிரியர் என அழைக்கப்படும் இவர் சுமார் 40 நாடகங்களை எழுதியுள்ளார்.அவற்றில் இப்போது 18 நாடகங்களுக்கான பனுவல்களே கிடைத்துள்ளன. புதுச்சேரியில் அமைந்துள்ள இவரது சமாதி புதுவை அரசால் பாதுகாக்கப்படுகிறது.

#தவத்திரு_சங்கரதாசு_சுவாமிகள்

#பிறப்பு :

சங்கரதாசு சுவாமிகள், #தூத்துக்குடிக்கு அருகிலுள்ள #காட்டுநாய்க்கன்பட்டி என்னும் சிற்றூரில் #இராமாயணப் புலவர் என அழைக்கப்பட்ட #தாமோதரக் கணக்கப் பிள்ளை. #பேச்சியம்மாள் #இணையருக்கு மகனாக 1867 செப்டம்பர் 7 ஆம் நாள் பிறந்தார். பெற்றோர் இவருக்கு #சங்கரன் எனப் பெயரிட்டனர்.

#கல்வி :

தொடக்கக் கல்வி தன் தந்தை தாமோதரனாரிடம் பெற்ற சங்கரதாசர், பின்னர் பழனியில் வாழ்ந்த தண்டபாணி சுவாமிகளிடம் பெற்றார். சங்க இலக்கியங்கள், நீதிநூல்கள், புராணங்கள், இதிகாசங்கள் ஆகியன போன்றவற்றைக் கற்றார். இதனால் வெண்பா, கலித்துறை, இசைப்பாடல்களான வண்ணம். சந்தம் ஆகியவற்றைப் பாடும் திறனைப் பெற்றார்.

#கணக்கர் :

சங்கரதாசர் தூத்துக்குடி உப்புப் பண்டகசாலையில் சிறிதுகாலம் கணக்கராகப் பணியாற்றினார். 1891 ஆம் ஆண்டில் தனது 24 ஆவது அகவையில் அப்பணியைத் துறந்து நாடகத்துறையில் ஈடுபட்டார்.[5]

#துறவு_வாழ்க்கை :

சாமி நாயுடு குழுவில் பணியாற்றும்பொழுது வாழ்க்கையில் வெறுப்புற்ற சங்கரதாசர் தன் வழிபடு கடவுளாகிய முருகனின் அருள்வேண்டி அருட்செலவு (தீர்த்த யாத்திரை) மேற்கொண்டார். அரையில் மட்டும் உடையுடுத்தி அருட்செலவில் ஈடுபட்ட சங்கரதாசரை பலரும் சுவாமிகள் என அழைக்கத் தொடங்கினர்.[6] இதனால் அவர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் ஆனார்.

அருட்செலவின் இறுதியில் புதுக்கோட்டை மகாவித்துவான் கஞ்சிரா மான் பூண்டியா பிள்ளை என்பவருடன் சங்கர்தாசர் தங்கினார். அவர் சங்கரதாசரை தன்னுடைய மகனாக தத்து எடுத்துக்கொண்டார்.

#நாடக_சபை_வாழ்க்கை :

ஐயர்கள் நாடக சபை 
#ராமுடு_ஐயர், #கல்யாண_ராமையர் ஆகிய இருவரும் இணைந்து நடத்திய நாடகசபையில் சேர்ந்து நாடங்களில் நடிக்கத் தொடங்கினார். சனீஸ்வரன், எமன், இராவணன், இரணியன் ஆகியன போன்ற எதிர்மறைக் கதாபாத்திரங்களில் நடித்தார். பின்னர் ஆசிரியராகவும் சிறிது காலம் பணியாற்றினார்.

சாமி நாயுடு நாடக சபை தொகு
பின்னர் சாமி நாயுடு என்பவரின் நாடக சபையில் சங்கரதாசர் சிலகாலம் ஆசிரியராக இருந்தார். அப்பொழுது நாடகத்தின் சூத்திரதாராகவும் நடித்தார்.

நடிப்பதைக் கைவிடுதல் தொகு
சங்கரதாசர் சாவித்திரி நாடகத்தில் எமனாக நடித்தபொழுது அந்நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த பெண் ஒருவருக்கு கர்ப்பம் கலைந்தது, நளதமயந்தி நாடகத்தில் சனீசுவரன் வேடமிட்டு சங்கரதாசர் அதிகாலையில் அவ்வேடத்தைக் கலைக்கச் சென்றபொழுது அவரைக் கண்ட பெண்ணொருவர் மாரடைப்பால் மரணமடைந்தது என தொடர் துயரங்கள் விளைந்ததால், அவர் நாடகத்தில் நடிப்பதை கைவிட்டார். நாடகம் எழுதுகிற, கற்றுத்தருகிற ஆசிரியப் பணியை மட்டும் தொடர்ந்தார்.

மீண்டும் நாடகப் பணி தொகு
மான்பூண்டியா பிள்ளையின் வேண்டுகோளுக்கு இணங்கி சங்கரதாசர் மீண்டும் நாடகப்பணியில் ஈடுபட்டார். 'வள்ளி வைத்தியநாதய்யரின் நாடக சபை, அல்லி பரமேசுவர ஐயரின் நாடகசபை ஆகியவற்றில் சிலகாலமும்[9] பி. எசு. வேலு நாயரின் ஷண்முகானந்த சபையில் நெடுங்காலமும் சங்கரதாசர் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

பாலர் நாடக சபைகள் தொகு
சமரச சன்மார்க்க நாடக சபை தொகு
நாடகங்களில் நடித்த நடிகர்கள் சங்கரதாசரின் பாடல்களை மட்டும் பயன்படுத்திக்கொண்டு தமது எண்ணத்திற்கேற்ப உரையாடத் தொடங்கினர். இவ்வுரையாடல்கள் தொடர்புடைய நடிகர்கள் தனிப்பட்ட முறையில் குத்திக்காட்டும் சிலேடைக் கூற்றுகளாகவும் மாறத் தொடங்கின. இதனால் நாடகக்கலை நலியத் தொடங்கவே, சிறுவர்களை மட்டுமே நடிகர்களாகக் கொண்ட பாலர் நாடக சபையை முதன்முதலாக 1910 ஆம் ஆண்டில் சமரச சன்மார்க்க நாடக சபை என்னும் பெயரில் சங்கரதாசர் தொடங்கினார்.

பால மீன ரஞ்சனி சபை தொகு
சிறிதுகாலத்தில் சமரச சன்மார்க்க நாடக சபையைக் கலைத்துவிட்டு, ஜெகந்நாத ஐயரின் பால மீன ரஞ்சனி சபையில் ஆசிரியராக சிலகாலம் இருந்தார்.

தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை 
பால மீன ரஞ்சனி சபையிலிருந்து 1918 ஆம் ஆண்டில் கருத்து வேறுபாட்டால் விலகி மதுரைக்கு வந்தார். அங்கே தன் நண்பர்களான சின்னையாபிள்ளை, கருப்பையாபிள்ளை, பழனியாபிள்ளை, சுப்பிரமணியபிள்ளை ஆகிய நால்வரையும் உரிமையாளராகக் கொண்ட தத்துவ மீனலோசனி சபையை உருவாக்கி அதன் ஆசிரியராகத் தனது இறுதிநாள் வரை இருந்தார்.

#நாடக_ஆசிரியர் :

சங்கரதாசர் சுமார் 40 நாடகங்களை எழுதினார். அவற்றுள் தற்பொழுது 18 நாடகங்களின் பனுவல்களே கிடைத்திருக்கின்றன.

வரிசை எண் நாடகம் ஆண்டு பனுவல் கிடைத்தவை:

01 அபிமன்யு சுந்தரி 1921 அபிமன்யு சுந்தரி
02 அரிச்சந்திரா அரிச்சந்திரா
03 அல்லி அர்ஜூனா அல்லி சரித்திரம்
04 இரணியன் 
05 இலங்கா தகனம் 
06 கர்வி பார்ஸ் கர்வி பார்ஸ்
07 குலேபகாவலி 
08 கோவலன் சரித்திரம் 1912 கோவலன் சரித்திரம்
09 சதி அனுசுயா ஸதி ஆநுசூயா
10 சதிசுலோசனா 
11 சத்தியவான் சாவித்திரி சத்தியவான் சவித்திரி
12 சாரங்கதரன் சாரங்கதரன்
13 சிறுத்தொண்டர் 
14 சீமந்தனி சீமந்தினி நாடகம்
15 சுலோசனா சதி சுலோசனா ஸதி
16 ஞான சௌந்தரி சரித்திரம் ஞான சௌந்தரி சரித்திரம் [14]
17 நல்ல தங்காள் நல்லதங்காள்
18 பவளக்கொடி பவளக்கொடி சரித்திரம்
19 பாதுகாபட்டாபிசேகம் 
20 பார்வதி கல்யாணம் 
21 பிரகலாதன் பிரஹலாதன் சரித்திரம்
22 பிரபுலிங்கலீலை 
23 மணிமேகலை 
24 மிருச்சகடி 
25 ரோமியோவும் ஜூலியத்தும் 
26 வள்ளித் திருமணம் வள்ளித்திருமணம்
27 வீரஅபிமன்யு 
28 லவகுசா லவகுச நாடகம்
29 லலிதாங்கி லலிதங்கி நாடகம்
இந்நாடகங்களில் வெண்பா, கலித்துறை, விருத்தம், சந்தம், சிந்து, வண்ணம், ஓரடி, கும்மி, கலிவெண்பா, தாழிசை, கீர்த்தனை ஆகியன உள்ளிட்ட பலவகைப்பாடல்களும் சிறுபகுதி உரையாடல்களும் நிறைந்தவையாக இருக்கின்றன.

இந்நாடகங்களை புராண நாடகங்கள், வரலாற்று நாடகங்கள், சமய நாடகங்கள், மொழிபெயர்ப்பு நாடகங்கள், கற்பனை நாடகங்கள் எனப் வகைப்படுத்துகின்றனர் ஆய்வாளர்கள்.

மறைவு :

1921 ஆம் ஆண்டில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சங்கரதாசருக்கு வலதுகையும் இடதுகாலும் முடங்கிவிட்டன. வாய்திறந்து பேச இயலாது போய்விட்டது. இந்நிலையிலேயே 1922 நவம்பர் 13 ஆம் நாள் திங்கட்கிழமை இரவு புதுச்சேரியில் மரணமடைந்தார்.

#பாராட்டுகள்:

சங்கரதாசு சுவாமிகள் இலங்கைக்குச் சென்றிருந்த பொழுது, யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தில் அவரது முத்தமிழ்ப் புலமையை ஆராய அங்குள்ள புலவர்களால் வினாக்கள் தொடுக்கப்பட்டன. அவற்றிற்கு சங்கரதாசர் வழங்கிய விடைகளைப் போற்றிய அச்சங்கத்தினர் அவருக்கு வலம்புரிச் சங்கு ஒன்றைப் பரிசளித்தனர்.

நினைவேந்தல்கள் 
மாணாக்கர்கள் தொகு
சங்கரதாசர் தனது 31 ஆண்டுகால நாடகப்பணி வாழ்க்கையில் எண்ணற்ற நாடகக் கலைஞர்களை உருவாக்கினார். அவர்களுள் பெரும்புகழ்பெற்று விளங்கிய சிலரின் பெயர்கள் பின்வருமாறு:

வேலு நாயர், ஜி.எஸ். முனுசாமி நாயுடு, ஜெகந்நாத நாயுடு, சாமிநாத முதலியார், சீனிவாச ஆழ்வார், நடேச பத்தர், ராஜா வி. எம். கோவிந்தசாமிபிள்ளை, எம். ஆர். கோவிந்தசாமிபிள்ளை. சி. கன்னையா, சி. எஸ். சாமண்ணா ஐயர், மகாதேவய்யர், சூரிய நாராயண பாகவதர், சுந்தரராவ், கே. எஸ். அனந்தநாராயண ஐயர், கே. எஸ். செல்லப்ப ஐயர், பைரவ சுந்தரம் பிள்ளை, சீனிவாச பிள்ளை. பு. உ. சின்னப்ப           டி. எஸ். துரைராஜ், தி.ச. கண்ணுசாமிபிள்ளை, தி.க. சங்கரன், தி.க.முத்துசாமி, தி. க. சண்முகம், தி. க. பகவதி, பாலாம்மாள், பாலாமணி, அரங்கநாயகி, வி.பி.ஜானகி, கோரங்கி மாணிக்கம், டி. டி. தாயம்மாள் 

நாடகத் திரட்டுகள் தொகு
சங்கரதாசர் மறைந்து பல ஆண்டுகளுக்குப் பின்னர் அவருடைய நாடகப் பனுவல்களைத் திரட்டி அச்சேற்றும் முயற்சிகள் நடைபெற்றன. அவ்வகையில் அபிமன்யு சுந்தரி, சுலோசனா சதி ஆகிய இரு நாடகப் பனுவல்களும் தமிழ்நாடு சங்கீத நாடக சங்கத்தின் ஆதரவோடு 1959 இல் வெளிவந்தன.

தி. க. சண்முகத்தின் தனிமுயற்சியால் சீமந்தனி, பக்த பிரகலாதா, அபிமன்யுசுந்தரி, பவளக்கொடி, சுலோசனாசதி, சதி அனுசூயா, கோவலன் ஆகிய நாடகப்பனுவல்கள் சங்கரதாஸ் சுவாமிகள் இன்கவித் திரட்டு என்னும் பெயரில் நூல்வடிவம் பெற்றன.

2009 ஆம் ஆண்டில் சென்னை பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் வீ. அரசு தற்பொழுது கிடைக்கக்கூடிய 18 பனுவல்களையும் தொகுத்துள்ளார். சங்கரதாஸ் சுவாமிகள் நாடகத் திரட்டு - பதினெட்டுப் பனுவல்கள் என்ற பெயரில் புதுச்சேரியைச் சார்ந்த வல்லினம் பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது.

இவைதவிர, சங்கரதாசு சுவாமிகளின் நாடகக் களஞ்சியம் என்னும் நூலை சென்னை காவ்யா வெளியீடு வெளியிட்டு இருக்கிறது.

#வாழ்க்கை_வரலாறு :

தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் வாழ்க்கைக் குறிப்பை 1955 ஆம் ஆண்டில் தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் என்னும் பெயரில் தி. க. சண்முகம் எழுதி வெளியிட்டுள்ளார்.

வாழ்க #கலைத்தாயின்_தலைமகனின்

#புகழ்.
நன்றி:விக்கிப்பீடியா.
                        #வங்கனூர்_அ_மோகனன்.

ஓவியம் : ஓவிய மன்னர் திரு #மாதவன்.
.

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...