Thursday, January 5, 2023

‘ஸ்ரீமத் மகாபாரத அம்மானை’ என்ற நூல் 1933 - இல் மதுரை விவேகானந்தா அச்சகத்தில் பதிப்பிக்கப்பட்டு வெளி வந்துள்ளது.

‘ஸ்ரீமத் மகாபாரத அம்மானை’ என்ற நூல் 1933 - இல் மதுரை விவேகானந்தா அச்சகத்தில் பதிப்பிக்கப்பட்டு வெளி வந்துள்ளது. இந்த நூலை மதுரகவி பி.நடராஜபிள்ளை அவர்கள் திருத்தி அமைத்து வெளியிட்டுள்ளார். 

மதுரை விவேகானந்தா அச்சகத்தில் பழ.நெடுமாறனுடைய பாட்டனார் மறைந்த கிருஷ்ணனார் அவர்கள் மூலமாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
 மதுரை மேலமாசி வீதியில் பழ.நெடுமாறனுடைய பாட்டனார்,  பழ.நெடுமாறனின் தந்தை பழநியப்பனார் பொறுப்பில் அந்த அச்சகத்தை நடத்தி வந்தார். பாரம்பரியமாக விவேகானந்தர் அச்சகத்தில் அச்சடிக்கப்படும் விவேகானந்தா காலண்டரின் வயது நூற்றாண்டுக்கும் மேலானது. அதே போல திருநெல்வேலி வாக்கிய தமிழ்ப் பஞ்சாங்கமும் இங்கு அச்சடிக்கப்படுவதுண்டு. விவேகானந்தா காலண்டரும் திருநெல்வேலி வாக்கியப் பஞ்சாங்கமும் சிறு வயதிலிருந்தே  எங்கள் வீட்டில் வாங்குவதைத் தொடர்ந்து பார்த்துள்ளேன்.

நெடுமாறனுடைய தந்தையார் பழநியப்பனார் மதுரையில் திருவள்ளுவர் கழகத்தைத் தொடங்கியவர். அதுமட்டுமல்ல, பி.டி.ராஜனுடன் இணைந்து அழகர்கோவிலில் அறுபடை வீடான பழமுதிர்ச்சோலையை நிர்மாணித்தவர். இந்த நூலின் பதிப்பாளரான எம்.பழனியாண்டி அண்ட் கோ நிறுவனத்தின் புத்தகக் கடை, இன்று வரை மதுரை புதுமண்டபத்தில் இயங்கி வருகிறது.
Ancient MaduraiEnga Madurai

#ksrpost
#கேஎஸ்ஆர்
5-1-2023


No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...