Saturday, January 28, 2023

இன்றைக்கு உண்மைகளையும் யதார்த்தங்களையும் சொன்னால் யாரும் கேட்பதற்குத் தயாரில்லை.

இன்றைக்கு உண்மைகளையும் யதார்த்தங்களையும் சொன்னால் யாரும் கேட்பதற்குத் தயாரில்லை. அவர்களே ஒரு புள்ளியை வைத்துக் கொண்டு இதுதான் உண்மை, இதுதான் வரலாறு என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.சொல்லி எழுதி ஆவன படத்தவேண்டும் என்கின்றனர். பிழையாக விதண்டாவாதமும், பித்தலாட்டமும் செய்கிறபோது என்ன சொல்ல?
 
இன்றைய இளைஞர்கள் கணினியிலும், செல்பேசியிலும் விரல்நுனிகளில் தெரிந்து கொள்கிற உலகத்தைத் தவிர, வேறு எதையும் தெரிந்து கொள்வதில்லை. இன்றைய சமுதாயத்துக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், ஜெயபிரகாஷ்நாராயணன், தமிழகத்தில் ஓமந்தூரார், குமாரசாமி என்று சொன்னால் அவர்களைப் பற்றி எதுவும் தெரிவதில்லை. 
 
எனது முகநூல் பதிவில் ஆட்சி, அதிகாரம், அரசு பரிவாரத்தைவிட ஜனநாயம் மேலானது என்று பதிவிட்டிருந்தேன். ஜனநாயத்துக்குப் பிறகுதான் ஆட்சியும் அதிகாரமும். ஜனநாயம் இல்லாமல் குடியரசு இல்லை. இரண்டும் பிரிக்க முடியாதவை. ரயில் தண்டவாளங்களைப் போல ஒரே திசை நோக்கி இரண்டு பயணிக்க வேண்டும். இதில் மாறுபட்டால் எல்லாம் தடம் மாறிவிடும். 
 
எல்லாவற்றுக்கும் மேலானது மனிதம். மனிதத்தை அடிப்படையாகக் கொள்ளாத ஜனநாயகம், குடியரசு, ஆட்சி, அதிகாரம் எல்லாம் பயனில்லாதது. இவற்றையெல்லாம் இன்று புரிந்து கொள்ளும் சூழ்நிலை இல்லாமல் போய்விட்டது. என்ன சொல்ல?
இங்கு சாதி, மதம், கட்சி தலமைக்கு அடிமை என்ற வைத்த அரசியலில் இயங்கும் மூடர் கூட்டத்தை என்ன சொல்ல.

#KSR_Post
28-1-2023.

No comments:

Post a Comment

ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu

#ஆந்திர  துணைமுதல்வர்  பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு  #Meeting with  AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...