Sunday, January 22, 2023

*தமிழ்நாட்டில் ராஜீவ் காந்தி படு கொலை வழக்கில் ஏழவர் விடுதலை பொருளாக்கப்பட்டு வெளிவந்தவர்களில் அருப்புக்கோட்டை ரவிச்சந்திரன்*,

*தமிழ்நாட்டில் ராஜீவ் காந்தி படு கொலை வழக்கில் ஏழவர் விடுதலை பொருளாக்கப்பட்டு  வெளிவந்தவர்களில் அருப்புக்கோட்டை ரவிச்சந்திரன்*,  (சிறையில் 31 ஆண்டுகளாக மேலாக சிறையில் இருந்தவர்) இன்றைக்கு (22.01.2023)  என்னைச் சந்திக்க வந்தார். அவரோடு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த நண்பர்கள் பலரும் வந்திருந்தனர். 
  
சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பான பூவுலகின் அமைப்பைச் சேர்ந்த ஆர்.ஆர்.சீனிவாசன் மற்றும் கவிஞர்  குட்டி ரேவதி ஆகியோரும் வந்திருந்தனர்.  இவர்கள் அனைவரிடமும்  காலை 9.00 மணியிலிருந்து மதியம் 2.00 மணி வரை பல விடயங்கள் பற்றி பேசக் கூடிய வாய்ப்புக் கிடைத்தது. குறிப்பாக பல்வேறு அரசியல் சார்ந்த நிகழ்வுகளைக் குறித்துப் பேசினோம். 
















  
அருப்புக்கோட்டை ரவிச்சந்திரன் நேரடியாக இலங்கைக்குச் சென்று களப்பணிகள் செய்தவர். அங்கிருக்கும் இயக்கத்தோடு தொடர்ந்து தொடர்பில்  இருந்தவர். இவர்களோடு பேசி கலந்துரையாடிய  இன்றைய பொழுது  நல்ல பொழுதாகக் கழிந்தது.




#KSR_Post
22-1-2023.


No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...