Monday, February 1, 2016

இன்று நண்பர் பழ. கருப்பையாவுடன் சந்திப்பு

இன்று (1.2.2016) நண்பர் பழ. கருப்பையா அவர்களை பத்து ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்தேன். அவருடன் கிட்டத்தட்ட 1974 லிருந்து அரசியல் ரீதியாகவும், நட்பு ரீதியாகவும் தொடர்பு இன்று வரை உள்ளது.  1972 கால கட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர், அவரை காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுமாறு கேட்டுக்கொண்டார்.  ஆனால் ஏனோ அவர் போட்டியிடமுடியாமல் போய்விட்டது.  அவரது மகாபாரத நூலை சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தில் வெளியிடும்போது கலந்துகொண்டதெல்லாம் இன்றைக்கும் நினைவில் உள்ளது.  நீண்டகால அரசியல் தளத்தில் இயங்கியவர்.  கருத்துரிமைக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லாத நிலையில் அவருடைய வீடு தாக்கப்பட்டுள்ளது.









No comments:

Post a Comment

அழகுமுத்துகோன்

  பிரிட்டிஷ் ஆட்சியின் எதிரான இந்திய விடுதலைப் போராட்ட தளபதி நெல்லை சீமையின் #அழகுமுத்துகோன் பிறந்தநாள் இன்று.