Tuesday, February 2, 2016

Gail pipelines 
Thanks to Sundrarajann;விளை நிலங்கள் வழியாக கெயில் குழாய்களை பதிக்கும் திட்டத்திற்கு உச்ச நீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ளது. அதுவும் சந்தை விலையில் 40% சதவீதம் குடுத்தால் மட்டும் போதும் என்று சொல்லி உள்ளது. இந்த தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது, இது மக்கள் விரோத தீர்ப்பு. 

மாநில அரசுக்கு உரிமை கிடையாது என்று வேறு சொல்லி உள்ளது. அந்த விளைநிலங்களில் குழாயில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அதுக்கு அந்த விவசாயிகள் தான் பொறுப்பு.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மாமிடிகுடுரு என்கிற இடத்தில் நடந்த கெயில் குழாய் விபத்து 18 உயிர்களை காவு கொண்டதை நினைவில் கொள்ள வேண்டும். 

அருகில் உள்ள கேரளாவில் சாலைகளின் ஓரத்தில் பதிக்கப்படும் குழாய்கள் இங்கே மட்டும் விளை நிலங்களில் பதிக்க முற்படுவது ஏன்? 

உதாரணமாக உங்களுக்கு 2 ஏக்கர் நிலம் இருப்பதாக வைத்து கொள்ளுவோம், அந்த நிலத்தின் நடுவில் இந்த குழாய்கள் சென்றால், அந்த குழாய்களின் மீது அந்த விவசாயிகள் நீர் வாய்க்கால்களை கொண்டு செல்ல கூடாது. இந்த திட்டத்திற்கு கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு சந்தை விலையில் 40% மட்டும் குடுத்தால் போதும் என்று வேறு சொல்லி இருக்கிறது. 

என்ன தான் சொன்னாலும் இவர்கள் காதில் விழாதா ?#gailpipelines

No comments:

Post a Comment

Lost on Me by Veronica Raimo and translated by Leah Janeczko Longlisted for the International Booker Prize 2024

Lost on Me by Veronica Raimo and translated by Leah Janeczko Longlisted for the International Booker Prize 2024 Deliciously enjoyable' K...